-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
இப்போது சற்று முன்புதான் சர்வாதிகாரி படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதை குறிப்பிடலாம் என்று வந்து பார்த்தால் நீங்கள் படம் ஒளிபரப்பாவதை குறிப்பிட்டு மக்கள் திலகத்தின் அலப்பறையான ஸ்டில்லை போட்டிருக்கிறீர்கள். என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு அழகு. பால் வடியும் முகம். சுறுசுறுப்பு, இளமைத் துடிப்பு, சுருளான ஒரிஜினல் தலைமுடி. பிரதாபன் என்றால் பிரதாபன்தான்.
சர்வாதிகாரி படம் ஏதோ இங்கிலீஸ் படத்தின் தழுவல் என்று கேட்டிருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை. படத்தின் பெயர் மறந்துவிட்டது. படத்திலும் இங்கிலீஸ் பட சாயல் தெரிகிறது.
ஒரு காலத்தில் மக்கள் திலகத்தை அட்டை கத்தி வீரர் என்று கேலி செய்தனர். ஆனால், அவர் உண்மையான கத்தியுடன் சண்டை போட்டிருக்கிறார்.இந்தப் படத்தில் சண்டைக் காட்சியின்போது மக்கள் திலகத்தின் வாள் தனது கை விரலை துளைத்துவிட்டதாக நம்பியார் சாமி பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நான் அவரை சந்தித்துப் பேசும்போதும் அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். விரலில் தழும்பை காட்டினார்.
சர்வாதிகாரி படத்தில் நம்பியாருடன் மோதும் கடைசி சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் பட்டு கதவில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறும். சண்டையின்போது நம்பியார் தள்ளி விட்டதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் மக்கள் திலகம் போய் விழுவார். உடனடியாக விநாடி நேரத்தில் துள்ளி நாற்காலியில் இருந்து எழுந்து விலகுவார். அடுத்த கணம் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நம்பியாரின் வாள் அந்த நாற்காலியின் சாய்ந்து கொள்ளும் பகுதியை துளைத்து மறுபக்கம் வரும். எப்படிப்பட்ட டைமிங்? இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து சிலிர்த்தேன்.
கடைசியில் நம்பியாரை வளைத்து அவரது வாள் கொண்ட கையை தனது இடதுகையில் மடக்கி அவரின் வயிற்றில் மக்கள் திலகம் தன் கை வாளால் குத்துவார். அப்போது நிஜமாகவே குத்துவது போல கோபமும் அநியாயக்காரனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் மக்கள் திலகத்தின் முகத்தில் தெறிக்கும்.
வயிற்றில் குத்தப்பட்ட நம்பியார் நீண்ட மேஜையில் சாய்வார். அவரை மக்கள் திலகம் மீண்டும் கத்தியால் குத்த மாட்டார். செத்த பாம்பை அடிக்கவோ மனமில்லை. நம்பியாரின் செயல்களை நினைத்தால் ஆத்திரமோ அடங்கவில்லை. அதன் வெளிப்பாடாகவும் நம்பியாரை வெற்றி கொண்டதை காட்டும் வகையிலும் நம்பியாரின் கையில் உள்ள வாளை தன் கையில் உள்ள வாளால் பலமாக அடித்து அந்த வாளை கீழே விழ வைப்பார். ஆவேசத்தின் அற்புதமான வெளிப்பாடு.
மக்கள் திலகம் என்றாலே ஸ்டைல்தான் என்றாலும் கத்தியை கையில் எடுத்து விட்டால் கூடுதலாக தனி ஸ்டைல் அவருக்கு வந்துவிடும். மேலே உள்ள நீ்ங்கள் போட்ட அலப்பறை ஸ்டில் அதை நிரூபிக்கிறது லோகநாதன்.
நான் விடுவேனா? அதே சர்வாதிகாரி படத்தில் இருந்து புரட்சித் தலைவரின் இன்னொரு கலக்கல் ஸ்டைல். இந்தாருங்கள்.
http://i66.tinypic.com/eve541.jpg
-
எங்க வீட்டுப் பிள்ளையில் ரங்காராவிடம் வரதட்சணை கேட்கிற நம்பியார் சொல்ற மாதிரி..... எனக்கு ஆசை அதிகம்.
அரச கட்டளையில் வாள் பிடித்தபடி அமர்க்களப்படுத்தும் ஸ்டைல். இதுக்கு மேல நமக்கு என்ன வேண்டும்.
http://i67.tinypic.com/30vbq07.jpg
பார்த்துடலாம் வா.. என்பது மாதிரி கத்தியை பிடித்தபடி மணிவண்ணனின் அந்த ஸ்டைலான அசால்ட் சிரிப்புதான் நம்மளை துள்ள வைக்கிறது.
http://i63.tinypic.com/ir83zc.jpg
வாளைப் பிடித்தபடி ஸ்டைலான மக்கள் திலகத்தின் அசத்தும் படங்களை இன்னும் பரிமாறிக் கொள்ள ஆசைதான். அதற்கு முடிவு ஏது? இன்னிக்கி தூங்கினா மாதிரிதான் போங்கள்.
-
‘‘நமது தேவையே பிறருடைய நன்மை தான்...
நாம் வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்..."
- நம் மக்கள்திலகத்தின் வாக்கான, இதனையே வேத வாக்காக கொண்டு...
வருவோர் - போவோர் சட்டைப்பையில் கை விடாது...
சந்தா - நன்கொடை என வசூல் வேட்டை ஆடாது...
மக்கள் சேவை மட்டுமே மகத்தான சேவையாக கொண்டு...
மருத்துவம் - கல்வி - வேலைவாய்ப்பு என எங்கெல்லாம் எவருக்கெல்லாம் தேவை உள்ளதோ... அங்கே அவர்கள் தன்னிறைவு பெற...
பாரதத்தின் கண்களாய் மஹாத்மாவால் அடையாளம் காட்டப்பட்டு இன்று தன் சுயம் இழந்து நிற்கும் கிராமப்புற மேலாண்மை என சமூக நலனில் அடுத்த பரிணாமமாய்...
நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு காலத்தில்...
பொன்மனச்செம்மலின் திருப்பெயரிலேயே...
பொன்மனம் பொதுநலப் பேரவை ...
எதிர்வரும் ஜூன் - 03 - ஆம் தேதி சென்னையில் ஆத்மார்த்தமாக உருவாகிறது...
மறைக்கப்பட்ட - மறக்கப்பட்ட மக்கள் திலகத்தின் மாசற்ற மாணிக்க மனிதர்கள் இங்கே அடையாளம் காட்டப்படுவார்கள்... அங்கீகரிக்கப்படுவார்கள்...
மக்கள்திலகத்தின் உன்னத உதிர உறவுகளே இப்பேரவையின் ஆணி வேர்... அவர்களே இதனில் தொலைதொடர்பாய் செயல்பட போகிறார்கள்...
இனிய இன்னிசை நிகழ்வோடு...
நம் பொன்மனம் எப்.எம். இன் ஒத்துழைப்போடு...
இனிதாய் துவங்க உள்ளது...
வாருங்கள்...
வாழ்த்துங்கள்...
இல்லாமை இல்லாமல் புதியதோர் உலகம் செய்வோம்...!
- "பொன்மனம்" Siva Kumar
மக்கள் திலகத்தின் மாணவன் Mayil Raj
பொன்மனம் பொதுநலப் பேரவை
பொன்மனம் எப்.எம்.
http://i67.tinypic.com/2vkg3dy.jpg
-
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களுக்கே உரித்த பாணியில், சர்வாதிகாரி படத்தின் விமர்சனங்கள்
புரட்சி நடிகரின் புயல் வேக வாள் சண்டை காட்சிகள் பற்றிய புகழ் மாலைகள்
மற்றும் அந்த காலத்தில் அட்டை கத்தி வீரர் என்று நையாண்டி செய்தவர்களுக்கு
ஒரிஜினல் வாள் கொண்டு சண்டை காட்சிகளில் தன் அபார நடிப்பு திறமையை
வெள்ளி திரையில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்த விதம் ஆகியவற்றை
வர்ணனையுடன் பதிவு செய்தமைக்கு நன்றி.
பல காட்சிகள் ஆங்கில படத்திற்கு இணையாக திறம்பட இயக்கிய இயக்குனர்
மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தையும் வெகுவாக பாராட்டலாம்.
நடிகை அஞ்சலிதேவி பாடும் "ராஜன் வருவாரே " பாடல் எதிரொலிக்கும்படி
அருமையாக அந்த காலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இளமை ,அழகு தோற்றம் கண்ணுக்கு
குளிர்ச்சி.
-
நாளை (21/05/2017) காலை 11 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/24l7de9.jpg
-
நாளை இரவு 7மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/scdjxs.jpg
-
இன்று (19/05/2017)முதல் சென்னை பாட்சாவில்(மினர்வா )மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு" தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/246mdmg.jpg
-
இன்று (19/05/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் சென்னை ராமாவரம் தோட்டத்தில்
அனுசரிக்கப்பட்டது .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக பேனர்
ராமாவரம் தோட்டத்து நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது .
http://i63.tinypic.com/xmk00o.jpg
-
ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i68.tinypic.com/24l76zb.jpg
-
நடிகர் தீபன் தனது அஞ்சலியை தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்ட ஏற்பாடு செய்திருந்தார் .
http://i67.tinypic.com/2yv5ufs.jpg