என்னுயிரும் கூட்டுப் பறவையோ
பாலூட்டி வளரும் சிறு கிளியோ
பறக்கத் தவிக்கும் ஓர் கைதியோ
கதவு திறந்திட காத்திருக்குமோ
Printable View
என்னுயிரும் கூட்டுப் பறவையோ
பாலூட்டி வளரும் சிறு கிளியோ
பறக்கத் தவிக்கும் ஓர் கைதியோ
கதவு திறந்திட காத்திருக்குமோ
காத்திருக்குமோ என்ற
உங்கள் கவிதை
மிகவும் கவர்ந்து
எங்கள் கவிதை வனத்தில்
பிரசுரிக்க நினைக்கையில்
வேறு பல
ஏற்கெனவே வாசலில் நிற்பதால்
உடனே பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம்..
வருந்துகிறோம் படம் வெளியிட தாமதமானால்
வருந்துகிறோம் வெயிலில் தலைவரை தரிசிக்க
அற்ப காரணங்கள் கவலையை குத்தகையெடுக்க
காத்திருக்கு பல அவசர முக்கிய நிவாரணங்கள்
நிவாரணங்கள் தருவதாகச் சொன்ன
அரசரைக் காணோமாம்..
ப்லவிதமாய்த் தேடிப் பார்த்து
அலுத்து சலித்து
பின் ஒருவழியாய்க்
குட்டி இளவரசனை
அரியணை ஏற்றி உதவிக்கு
அமைச்சரைக் கொடுத்தால்..
அமைச்சர் வழ்ங்கினார் உரை..
புது மன்னர் உங்கள்
துன்பங்களுக்கு கண்டிப்பாய்
வழங்குவார் நிவாரணம்
என்றவர்
நினைத்துக் கொண்டார் மனதில் இப்படி..
வளர்ந்த பின்
ஓடும்வரை
ஓடும்வரை ஓடிய நதி
அடங்குவது கடலுக்குள்
சுயம் தொலைக்கும்
உத்தம ஜாதி பெண்
உப்புக்கரித்தாள்
செம்புல பெய் நீர் போல
நீர்போல இருப்பதுதான் வாழ்க்கை போல
..நிறைவாக அலசிடலாம் அதனை இன்று
தேர்போல அசைந்தோடி மெல்லச் செல்லும்
..தெளிவான நதியோதான் சுழலில் சுற்றும்
பார்த்தநிறம் தன்னுள்ளே வாங்கும் போல
...பலருக்கும் வாழ்க்கையிலே ஆசை தோன்றும்
ஆர்ப்பாட்ட அருவியொலி அடங்கல் போலே
..அடங்கிடுமே மனிதவாழ்வு ஓர்நாள் தானே..
ஓர்நாள் தானே என்றாலும்
மணித்துளிகள் ஒன்றல்லவே
பிரியமானவர் உடனிருக்க
குறையுமோ எண்ணிக்கை
பிரிவினில் வாடுகையில்
கூடுமோ நாளின் நீளம்
நீளம் எனப் பலதடவை
சொல்லியிருக்கிறேன்
உன் கூந்தல்
உன் கண்கள்
உன்னை ப் பார்க்க வரும்போது
பேசும்
உன் பாட்டியின் பேச்சு
என..
அவையெல்லாம் பொய்..
இதோ இப்போது
வெகு நீளமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த
இந்த
இருபத்து நான்கு மணி நேரம்...
நேரம் காலம் பார்க்காமல்
நாளை என தள்ளாமல்
நல்லதை செய் இன்றே
நன்றாய் சொன்னாரன்றே
சொன்னாரன்றே பெரியவர்கள்
வினை விதைப்பவன் வினை அறுப்பான்
என
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் எனினும்
இந்தக்காலத்தில் மிகப் பொருத்தம்
அறுவடை ஆகிறது
விரைவாக..