-
kalakka povathu yaaru
விஜய் டி.வி.யில் அறிமுகப்படுத்தப்பட்ட `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் நான்காம் பாகம், வரும் வெள்ளி முதல் தொடங்க விருக்கிறது.
இதில் பங்கேற்கும் திறமைசாலிகள், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த தேர்வில், திறமையான 60 நபர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கலக்கப் போவது யாரு-4 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வெற்றி பெறப்போகும் அதிர்ஷ்டசாலி நேயருக்கு, 5 லட்சம் பரிசுத் தொகையும், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கிறது. அதோடு திரைப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பும் உண்டு.
நான்காம் இன்னிங்ஸின் நடுவர்களாக உமா ரியாஸ் மற்றும் நடிகர் பாண்டியராஜன் வருகின்றனர். காமெடியில் திறமை வாய்ந்த இவர்கள் போட்டியாளர்களுக்கு நல்ல ஊக்கமளித்து நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் களமிறங்கத் தயாராகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரம்யா, மற்றும் கலக்கப் போவது யாரு-3 ல் வெற்றி பெற்ற சிவ கார்த்திகேயன் வருகின்றனர்.
வரும் வெள்ளி இரவு 10 மணிக்கு `கலக்கப் போவது யாரு-4' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
@@@@@@@@@@@@
KALAKKUNGA SIVA KARTHIKEYAN !!
-
watch part 4 live here
w w w . u s e r t u be.com