http://i67.tinypic.com/24e2ecp.jpg
Printable View
DIGITAL -RIKSHAKARAN
http://i65.tinypic.com/igxeyt.png
http://i66.tinypic.com/21nfvrk.jpg
அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை, வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திண்டுக்கல்லில் நடத்த உத்தேசித்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் " .ரிக்ஷக்காரன் " டிரைலர், அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதால், தள்ளி வைக்கப்படுகிறது.
மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.
அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.
அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.
நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.
புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.