A DROP OF FIRE OR A SPARK OF WATER!
நெருப்பின் துளியோ நீரின் பொறியோ!
A drop of fire or a spark of water!
இன்று இத்தனை நாட்களாய் நான் எழுதிய சிறுகதைகளை வாசித்தேன்.ஒன்று கூட தேறவில்லை.சுத்தமாக பிடிக்கவில்லை.அநியாயத்துக்கு அமெச்சூராக இருந்தது.அந்த பிம்பங்களை மறக்கவும்,புதிதாய் நடக்கவும் தோன்றியது.ஆறேழு புத்தகங்கள்,பாக்கெட் நாவல்கள்,சில வாரப்பத்திரிக்கைகள் படித்த பாதிப்பென உறுத்தியது.சுண்டல் விற்பவனைப் போல கூவி கூவி இதைப் படித்துப் பாருங்கள்...இதை பதித்துப் பாருங்கள் என்றிருக்கிறேன்.இத்தனை நாள் நான் எழுதியவயெல்லாம் சும்மா என்று புரிந்தது.நிறைய இடங்களில் நடை தளர்ந்திருக்கிரது.யாரையோ பிரதிபலிக்கிறது.இனி இவற்றை தவிர்த்து விடுவதென்றும்,பயணிக்காத சில வீதிகளில் பவனி வரவும் முடிவெடுத்திருக்கிறேன்.நிச்சயம் இது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருக்குமென நம்புகிறேன்.
நான் எதற்காக எழுதவேன்டும்.நான் பிறரை விட புத்திசாலி என்று கூறவா?இல்லை.புத்தியைக் காட்ட எழுத்து நிச்ச்சயம் வழியல்ல.ஜனத்தை கவரவா?ம்.ஒரு வகையில் சரி.என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு நூல்.ஒரு மேகத்தை இருவர் பார்க்கலாம்;மேகம் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்.அது தெரிகையில் எழும் உணர்வே அதில் கவனிக்கப்பட வேண்டியது.ஒரே கதை இருவரை வெவ்வேறு விதமாக பாதித்திருக்கலாம்.இருவரின் எழுத்து இருவரை ஒரேமாதிரி பாதித்திருக்கலாம்.இந்த நூல் என்பது அந்த உணர்ச்சித் துளையில் கோக்கப்படும் போது நம் மனத்தில் இதமான ஒரு புன்னகை தவழ்கிறது.அதுதான் புனிதம்.அதுதான் மகத்துவம்.அதுதான் பேரின்பம்.மீண்டும் மீண்டும் அந்த உனர்வைக் கிளர மக்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கின்ரனனர்.இதில் எழுதுபவனுக்கே அந்த உணர்ச்சிகள் எழவிலையெனில்,எழுதுவதின் ஒட்டுமொத்த இன்பமே கெட்டுவிடுகிறது.எழுத்து தீ போன்ற நீர்,நீர் போன்ற தீ!
விளையாட்டல்ல.
The above poll is just to know where i stand,Nothing else.