https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cc&oe=5DEBFC43
Thanks Nadigarthilagam Sivaji Fans
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cc&oe=5DEBFC43
Thanks Nadigarthilagam Sivaji Fans
NT movies released in the month of August
1) குங்குமம் 02 1963
2) மன்னவன் வந்தானடி 02 1975
3) மர்ம வீரன் 03 1956
4) நிறைகுடம் 08 1969
5) நான் வாழவைப்பேன் 10 1979
6) ஜீவன தீராலு 12 1977
7) சுமங்கலி 12 1983
8) மூன்று தெய்வங்கள் 14 1971
9) முதல் குரல் 14 1992
10) சாரங்கதாரா 15 1958
11) ராமன் எத்தனை ராமனடி 15 1970
12) எழுதாத சட்டங்கள் 15 1984
13) முதல் மரியாதை 15 1985
14) மகா கவி காளிதாஸ் 19 1966
15) மரகதம் 21 1959
16) என் மகன் 21 1974
17) மாடி வீட்டு ஏழை 22 1984
18) மருதநாட்டு வீரன் 24 1961
19) சாணக்ய சந்திரகுப்தா 25, 1977
20) கூண்டுக்கிளி 26 1954
21) தூக்குத் தூக்கி 26 1954
22) மங்கையர் திலகம் 26 1955
23) தவப்புதல்வன் 26 1972
24) தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 26 1966
25) ஜல்லிக்கட்டு 28 1987
26) கிருஷ்ணன் வந்தான் 28 1987
27) என் ஆசை ராசாவே 28 1998
28) ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி 1959
29) மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 1960
சிவாஜி நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களில் சில உதாரணங்கள்.
( வெளிச்சத்திற்கு வராத மறந்து விட்ட , மறைக்கப்பட்ட உண்மைகள். இதை உலகமும் இன்றைய தலைமுறைய...ினரும் அறியவே இப்பதிவு )
காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கினார்.மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் சிவாஜி நன்கொடையாக வழங்கினார். அத்தொகையின் தற்போதைய பணமதிப்பு நகர்புற நில மனை மதிப்புப்படி ரூபாய் 25 கோடிக்கும் மேலாகும்.
சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
"பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்
அன்று ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள்
புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற்பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார் போல்
எந்தெந்த நடிகர் செய்தார் ?
இப்புகழ் யாவர் பெற்றார்?"
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தவிர அவரது மனைவி கமலா அம்மாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பாகிஸ்தான் யுத்த நிதியாக 400 சவரன் தங்க நகைகளையும் வழங்கினார். சிவாஜி 100 சவரன் தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்ட https://youtu.be/zojOvJiL7EU பதிவில் 7.10 முதல் 9 நிமிடம் 30 நொடி வரை காண்க.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி பல லட்ச ரூபாய்களை வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார. வயலூர் மருகன் கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரிடம் நிதி வழங்கியது, தாம்பரம் மருத்துவ மனைக்கு நிதி உதவியது என பட்டியல் நீளும் மகாராஷ்டிரா பூகம்ப நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை Y B சவான் அவர்களிடம் (இன்றைய பணமதிப்பு ரூ 7கோடி) வழங்கினார். பூனாவில் வீரசிவாஜிக்கு சிலையும், உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மெரீனா கடற்கரையில் திருவள்ளுவருக்கு சிலையும் நிறுவினார். தவிர கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை சிவாஜி நிறுவினார். அச்சிலையை 16-07-1970 அன்று திரு. நீலம் சஞ்சீவரெட்டி எம்.பி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் எம்.பி திறந்து வைத்தார். ( https://youtu.be/-LaiDo51R3o பதிவில் 1.06 முதல் 1.27 வரை காண்க )சிவாஜி இந்நினைவிடத்தை சில வருடங்கள் பராமரித்து பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். (இந்நினைவிடத்திலேயே தமிழக அரசும் மணிமண்டபம் கட்டியது. அதை 18-05- 2015அன்று முதல்வர் திறந்து வைத்தார்) இந்நினைவிடத்தின் மதிப்பு தற்போது பல கோடிகள் பெறும். சிவாஜி என்ன செய்தார் என்போருக்கு மேற்கண்ட சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களே பதில் கூறும். இதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது. தமிழகத்தில் புயல்,மழை வெள்ளம் வந்த போது உணவு பொட்டலங்கள் வழங்கியதுடன் நாடகம் நடத்தி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தவிர நிறைய நிதி உதவிகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார். மேலும் முழு விவரமறிய http://anonymouse.org/…//www.mayyam.com/talk/showthread.php… பதிவு காண்க.
தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் இவற்றை திரைபடங்கள் மூலகமாக மட்டுமின்றி தானே முன்னுதாரணமாக இருந்து மக்களிடம் , குறிப்பாக இளைஞர்களிடம் சேர்த்துள்ளார்
சிங்கை
நன்றி:- Vijiya Raj Kumar
திருவிளையாடல் முழுக்க முழுக்க
பக்தி காவியம்....
கடவுள் இல்லை என்ற கொள்கை முழக்கம், தமிழகமெங்கும் பரவி கிடந்த நேரம்,
... திருப்பதிக்கு சென்று வந்த காரணத்தால் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட
சிவாஜி கடவுள் சிவனாக....
படம் வெற்றி பெறுமா என்ற கேள்வி.....
ஆனால்,
சிவாஜியை சிவனாக, கடவுளாக
மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி....
சரித்திரம் படைத்த வெற்றி...
அது, இன்றுவரை தொடர்கிறது,,,,,
காரணம் சிவாஜி... சிவாஜி.... சிவாஜி.....
இன்னும் தொடரும்....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5DE9B270
Thanks Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
வரும் 4.08.2019 அன்று சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை மற்றும் வேலம்மாள் மருத்துமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ந...டைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் கடச்சனேந்தலில் இன்று வியாழக்கிழமை காய்கறி சந்தை என்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் கூடுவார்கள், ஆதலால் நாங்கள் ஏற்கனெவே முடிவு செய்தபடி நோட்டீஸ் இன்று மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கெல்லாம் ரமேஷ்பாபு, நான், ரமேஷ்பாபு அவர்களின் புதல்வன் காமராஜ் மற்றும் அவனுடைய கல்லுாரி தோழர்கள் என ஐவரும் களத்தில் இறங்கினோம்.
நோட்டீஸ் வாங்கி பார்த்த அனைவரும், மிகவும் அருமையான பணி என பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இடையில் கிச்சு என்பரும் சேர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 2000 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டது, கிட்டத்தட்ட 5 மணி நேரம் நோட்டீஸ் கொடுத்தோம். உடல்வலி எடுத்தாலும், பொதுமக்களின் வாழ்த்துக்கள், உடல்வலியையும் போக்கிவிட்டது.
இது, மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல......
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசைப்படி, எண்ணப்படி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். என்ற ஒரே நோக்கத்தோடு தான்...
மக்கள் பணி தொடரும்....
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை.
தலைவர் நா.ரமேஷ்பாபு செயலாளர் கா.சுந்தரராஜன்
http://oi68.tinypic.com/550200.jpg
Thanks Sundar Rajan