மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 1978
1974ல் இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் துவக்கப்பட்ட படம் . 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புதுவை , கோவை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் புதுவை சட்டமன்ற தேர்தல்களிலும் எம்ஜிஆர் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று அரசியல் வானிலும் ஜொலித்து கொண்டிருந்தார் . அதிமுக இயக்கம் மக்கள் மத்தியில்
பரபரப்பாக பேசப்பட்டது . திரை உலகிலும் எம்ஜிஆரின் புகழ் உச்சத்தில் இருந்தது . தமிழகத்தில் திமுக ஆட்சியில் எம்ஜிஆருக்கு எல்லா விதத்திலும் தொல்லைகளை திமுக தலைவர் கருணாநிதி தந்து கொண்டிருந்தார் . பறக்கும் படை என்ற பெயரில் சாதி இன பேதங்களை வளர்த்தார் .
தமிழகத்தை மீட்டு நல்லாட்சி அமைந்திட பந்துலு அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து மதுரையை [ தமிழகத்தை ] மீட்ட சுந்தரபாண்டியன் { அழகுதலைவர் எம்ஜிஆர் } என்ற அகிலனின் காவியத்தை உருவாக்கினார் . உடல் நலன் பாதிக்கப்பட்ட திரு பந்துலு அவர்கள் இயற்கை எய்திய நிலையில் படப்பிடிப்பு நின்று போனது . அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இப்படத்தின் வளர்ச்சி 1976க்கு பின்னர் மீண்டும் வளர துவங்கியது . 1977 மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்களில் எம்ஜிஆர் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னர் இடைவெளி இன்றி தொடர்ந்து நடித்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி நடித்து முடித்து கொடுத்தார் .
ஏற்கனவே தயரிப்பில் இருந்த ஸ்ரீதரின் மீனவ நண்பனையும் நடித்து முடித்தார் .அந்த படம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் 14.8.1977 அன்று வெளிவந்தது மாபெரும் வெற்றியை அடைந்தது , மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14.1.1978 அன்று திரைக்கு வந்தது
1936ல் வெளிவந்த ,சதிலீலாவதி - எம்ஜிஆரின் திரை உலக அறிமுகப்படம் . இறுதி படமாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அமைந்து விட்டது
மொத்தத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழகத்தை மீட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
.
1977ல் தமிழகத்தை எம்ஜிஆர் மீட்டார் .
1978ல் மதுரை மாநகராட்சியை எம்ஜிஆர் மீட்டார்
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் - எம்ஜிஆர் தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினர் . மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துடன் தன்னுடைய கலைப்பயணத்திற்கு விடை கொடுத்தார் .கடைசியாக மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .மதுரை எம்ஜிஆருக்கு நிரந்தர அரசியல் மற்றும் கலைத்துறை கோட்டை என்பதை நிரூபித்து காட்டினார் . மறைவிற்கு பின்னரும் 30 ஆண்டுகள் கடந்தும் இன்றும் மதுரை எம்ஜிஆர் கோட்டையாக திகழ்கிறது
.
இனி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை பற்றி ...........
அகிலனின் கதையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மிகச்சிறப்பாக சுந்தரபாண்டியனாக நடித்து . இருந்தார் .மக்கள் திலகத்துடன்
நம்பியார் , வீரப்பா , சகஸ்ரநாமம் .வி.எஸ். ராகவன் , கண்ணன் தேங்காய் ஸ்ரீனிவாசன் , ஐசரி வேலன் மற்றும் நடிகைகள் லதா , பத்மப்ரியா நடித்திருந்தார்கள் . மைசூர் அரண்மனை . ஜெய்பூர் அரணமனை , பாலைவனக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
எம்ஜிஆர் - நம்பியார்
எம்ஜிஆர் - வீரப்பா
எம்ஜிஆர் - ஜஸ்டின்
மூன்று சண்டை காட்சிகள் அருமை . குறிப்பாக அரண்மனையில் வீரப்பாவுடன் மோதும் காட்சியில் எம்ஜிஆரின் ஆக்ரோஷமான நடிப்பு பிரமாதம் .
அதே போல் ஜஸ்டினுடன் பாதாள அறையில் மோதும் காட்சியும் அனல் பறந்தது . பாலைவனத்தில் நம்பியாருடன் மோதும் சண்டை கட்சியில் எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடிப்பு நன்கு தெரிகிறது .
எம்ஜிஆர் அரசியல் வசனங்கள் அனைத்தும் அருமை .
தாயகத்தின் சுதந்திரமே
வீர மகன் போராட வெற்றி ..
தென்றலில் ஆடும் கூந்தலில்
அமுத தமிழில் .....
4 பாடல்கள் சூப்பர் ஹிட் . நகைச்சுவை காட்சிகள் மிகவும் குறைவு .மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் சூப்பர் .
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .
கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் 24.6..2018
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.