http://www.youtube.com/watch?v=5MksK...yer_detailpage
Printable View
டியர் வாசு,
எஸ்.பி.பி.யின் பேட்டிப்பக்கங்களையும்,மணல் கயிறு, சிவப்பு மல்லி படப்பாடல்களின் வீடியோக்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ஆனந்த விகடன் பேட்டியை ஆனந்தமாக படித்து மகிழ்ந்தோம்.
காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் பாடல்கள் சில இதோ...
01. நான் ஆணையிட்டால்... (எங்க வீட்டு பிள்ளை)
02. ஆண்டவன் படச்சான்... (நிச்சய தாம்பூலம்)
03. ஆறு மனமே ஆறு... (ஆண்டவன் கட்டளை)
04. அச்சம் என்பது மட*மையடா... (மன்னாதி மன்னன்)
05. அதோ அந்த பறவை போல... (ஆயிரத்தில் ஒருவன்)
06. அமைதியான நதியினிலே... (ஆண்டன் கட்டளை)
07. அன்பே வா அன்பே வா... (அன்பே வா)
08. அன்று வந்ததும் இதே நிலா... (பெரிய இடத்து பெண்)
09. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... (உயர்ந்த மனிதன்)
10. அழகிய தமிழ் மகள்... (ரிக்ஷாக்காரன்)
11. சின்ன பயளே சின்ன பயளே... (அரசிளங்குமரி)
12. தெய்*வமே தெய்வமே... (தெய்வமகன்)
13. ஏன் பிறந்தாய் மகனே... (பாகப்பிரிவினை)
14. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (பணத்தோட்டம்)
15. எங்கே நிம்மதி... (புதிய பறவை)
16. இந்த புன்னகை என்ன விலை... (தெய்வத்தாய்)
17. இரண்டு மனம் வேண்டும்... (வசந்த மாளிகை)
18. இரவினில் ஆட்டம்... (நவராத்திரி)
19. காது கொடுத்து கேட்டேன்... (காவல்க்காரன்)
20. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்... (வானம்பாடி)
21. கடவுள் ஏன் கல்லானார்... என் அண்ணன்)
22. கண் போன போக்கிலே... (பணம் படைத்தவன்)
23. கண்ணை நம்பாதே... (நினைத்ததை முடிப்பவன்)
24. காகிதத்தில் கப்பல் செய்து... (அன்புக்கரங்கள்)
25. மலர்களை போல் தங்கை... (பாசமலர்)
26. மலர்ந்து மலராத... (பாசமலர்)
27. நாளை நமதே... (நாளை நமதே)
28. நான் பேச நினைப்பதெல்லாம்... (பாலும் பழமும்)
29. நல்லவன் எனக்கு நானே நல்லவன்... (படித்தால் மட்டும் போதுமா)
30. நிலவை பார்த்து வானம் சொன்னது... (சவாலே சமாளி)
31. நிலவு ஒரு (உலகம் சுற்றும் வாலிபன்)
32. ஒளிமயமான எதிர்காலம்... (பச்சை விளக்கு)
33. ஓடும் மேங்களே... (ஆயிரத்தில் ஒருவன்)
34. ஒரு பெண்ணை பார்த்து... (தெய்வத்தாய்)
35. பால் இருக்கு பழம் இருக்கு... (பாவமன்னிப்பு)
36. பாரப்பா பழனியப்பா... (பெரியிடத்து பெண்)
37. பார் மகளே பார்... (பார் மகளே பார்)
38. பட்டிக்காடா பட்டண*மா... (மாட்டுக்கார வேலன்)
39. பேசுவது கிளியா... (பணத்தோட்டம்)
40. பொன் எழில் பூத்தது புது வானில்... (கலங்கரை விளக்கம் }
41. போனால் போகட்டும் போடா... (பாலும் பழமும்)
42. பூ மழை தூவி... (நினைத்ததை முடிப்பவன்)
43. போயும் போயும் மனிதனுக்கு... (தாயை காத்த தனயன்)
44. ராஜாவின் பார்வை... (அன்பே வா)
45. சட்டி சுட்டதாடா... (ஆலயமணி)
46. சிலர் சிரிப்பார்... (பாவ மன்னிப்பு)
47. சொல்லாதே யாரும் கேட்டால்... (சொர்க்கம்)
48. சோதனை மேல் சோதனை... (தங்கப்பதக்கம்)
49. தாய் மேல் ஆணை... (நான் ஆணையிட்டால்)
50. தம்பிக்கு ஒரு பாட்டு... (நான் ஏன் பிறந்தேன்)
51. கரைமேல் பிறக்க வைத்தாய்... (படகோட்டி)
52. தூங்காதே தம்பி தூங்காதே... (நாடோடி மன்னன்)
53. உலகம் பிறந்தது எனக்காக... (பாசம்)
54. உழைக்கும் கைகளே... (தனிப்பிறவி)
55. உன் கண்ணில் நீர் வழிந்தால்... (வியட்நாம் வீடு)
56. உன்னை பார்த்து இந்த உலகம்... (அடிமைப்பெண்)
57. வாழ்ந்து பார்க்க வேண்டும்... (சாந்தி)
58. யாரது யாரது தங்கமா... (என் கடமை)
59. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்... (மலைக்கள்ளன்)
60. *ஹலோ ஹலோ சுகமா... (என் கடமை)
61. அவள் பறந்து போனாளே... (பார் மகளே பார்)
62. செல்லக்கிளிகளாம்... (எங்க மாமா)
63. தேவனே என்னை பாருங்கள்... (ஞான ஒளி)
64. ஐம்பதிலும் ஆசை வரும்... (ரிஷிமூலம்)
65. அண்ணன் என்னடா... (பழனி)
66. அவள் பறந்து போனாளே ... (பார் மகளே பார்)
67. ஒரு பக்கம் பாக்குற... (மாட்டுக்கார வேலன்)
68. தர்மம் தலைகாக்கும்... (தர்மம் தலைகாக்கும்)
69. என்னை யாரென்று... (பாலும் பழமும்)
70. இப்படித்தான் இருக்க வேண்டும்.. (விவசாயி)
71. கடலோரம் வாங்கிய காற்று... (ரிக்ஷாக்காரன்)
72. கடவுள் செய்த... (நாடோடி)
73. காதல் ராஜ்ஜியம்... (மன்னவன் வந்தான்டி)
74. கட்டொடு குழலோடு ஆட... (பெரிய இடத்து பெண்)
75. காவேரி கரையிருக்கு... (தாயை காத்த தனயன்)
76. அவளுக்கு என்ன... (சர்வர் சுந்தரம்)
77. கேளம்மா சின்னம்மா... (கன்னித்தாய்)
78. குறுக்கு வழியில்... (மகாதேவி)
79. .மாணிக்க தேரில் . (தேடிவந்த மாப்பிள்ளை)
80. மாதவி பொன்... (இரு மலர்கள்)
81. மன்னிக்க வேண்டுகிறேன்... (இரு மலர்கள்)
82. முத்தை திரு... (அருணகிரிநாதர்)
83. நாளொரு மேடை...ஆசைமுகம்
84. நான் மலரோடு தனியாக... (இரு வல்லவர்கள்)
85. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்... (அன்பே வா)
86. நேரமிது நேரமிது... (ரிஷிமூலம்)
87. நிலவை பார்த்து வானம் சொன்னது (சவாலே சமாளி)
88. ஒரே பாடல்... (எங்கிருந்தோ வந்தாள் )
89. ஒரு தாய்... (பணக்கார குடும்பம்)
90. ஒரு தரம்... (சுமதி என் சுந்தரி)
91. பாட்டுக்கு பாட்டெடுத்து... (படகோட்டி)
92. பாட்டும் நானே பாவமும் நானே... (திருவிளையாடல்)
93. படைத்தானே... (நிச்சய தாம்பூலம்)
94. பாலக்காட்டு பக்கத்திலே... (வியட்நாம் வீடு)
95. பொன்னை விரும்பும்... (ஆலயமணி)
96. செந்தமிழ் பாடும்... (வைர நெஞ்சம்)
97. சிவப்புக் கல்... (எல்லோரும் நல்லவர்களே)
98. ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே ... (இதய வீணை)
99. திருடாதே பாப்பா திருடாதே...
100. யாருக்காக யாருக்காக... (வசந்தமாளிகை)
வாசு,
என்னை அன்புடன் வரவேற்றதுடன் மட்டுமல்லாமல் ஒரு அருமையான பாடலையும் அதுவும் எனக்கு பிடித்த பாடலை வழங்கியதற்கு மிக்க நன்றி. என் நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த படம் 1977 ஏப்ரல் இறுதியில் வெளியானது. அதே நேரத்தில்தான் லட்சுமி கதாநாயகியாக நடித்து அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று தந்த நமது பீம்பாய் இயக்கிய ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களும் வெளியானது. லட்சுமியின் நடிப்பை மிகவும் விரும்பக்கூடிய நானும் என் நண்பனும் முதல் வாரத்திலேயே இரண்டு படங்களையும் பார்த்தோம். பட்டப்படிப்பு சேர்வதற்கு முன் இருந்த இரண்டு மாத இடைவெளி காலம் அது.
இனி தூண்டில் மீன் படத்திற்கு வருகிறேன். லட்சுமியும் மோகனும் (இன்றைய மோகன் சர்மா) இணைந்து நடித்த படம். அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருந்த நேரம். பொதுவாகவே thriller, murder,mystery போன்ற துப்பறியும் வகை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற ஒரு கதையம்சம் கொண்ட தூண்டில் மீன் என்னை மிகவும் கவர்ந்தது. சட்டத்திற்கு புறம்பான ஒரு காரியத்தை செய்து விட்டோம் என்று எண்ணும் நாயகி தன இணையுடன் சேர்ந்து பாடும் போது அந்த சூழல் பாடல் வரிகளில் பிரதிபலிப்பது போல் அமைந்திருக்கும் பாடல் இது.
ஸ்வர்ணா, நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு அருமையான பாடகி. ஆனால் ஏனோ கணவர் இசையமைத்த படங்களில் மட்டுமே பாடினார். ஒரு சில நாட்களுக்கு முன் ஜானகி சபதம் படத்தில் அவர் பாடிய பாடல் இங்கே ராகவேந்தர் சார் பதிவிட்ட்ருந்தார். ஸ்வர்ணா பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த இன்னும் ஒரு சில பாடல்கள். தேன் சிந்துதே வானம் படத்தில் இடம் பெற்ற எழுதாத பாடல் ஒன்று. மற்றொன்று நல்ல பெண்மணி படத்தில் தாஸேட்டனுடன் இணைந்து பாடிய இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பாடல். புலமை பித்தனின் அருமையான வரிகள் அடங்கிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும்
தாங்காது கண்ணா என்
தளிர் மேனி கோகிலம்
தூங்காத கண்ணில் உன்
துணை தேடும் மீனினம்.
என்ற வரிகளில் அந்த சூழலுக்கே உரிய தாபத்தையும் ஆசையையும் நாம் உணரலாம். என்ன ஒன்று கார்த்திக் மற்றொரு பாடலுக்கு குறிப்பிட்டது போல் கொடியிடை சிறு நூலினம் என்ற வரி ஸ்ரீவித்யாவிற்கு எனும் போது சிரிப்பு வரும். இதே தூண்டில் மீன் படத்தில் எங்கள் இசையரசி எஸ்பிபியுடன் இணைந்து பாடிய வாழ்வில் சௌபாக்கியம் வந்தது என்ற பாடலும் என் மனதை கவர்ந்த பாடல். இதையெல்லாம் நினைவு கூற வாய்ப்பளித்ததற்கு மீண்டும் என் நன்றி.
கார்த்திக் என்னை வரவேற்ற கையோடு சிவப்பு மல்லி பாடலைப் பற்றி குறிப்பிட அதை நீங்கள் உடனே வீடியோ வடிவத்தில் அளித்து விட்டீர்கள். இதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடல். 1980 நவம்பரில் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே 1980 ஜூன் மாதம் எழுத்தாளர் இந்துமதி அவர்களை ஆசிரியராக கொண்டு அஸ்வினி என்ற மாதமிருமுறை இதழ் ஒன்று வெளி வந்துக் கொண்டிருந்தது. [அதிக காலம் அந்த இதழ் வெளிவரவில்லை. நின்று போய் விட்டது]. அந்த இதழில் மழைக்கால பூக்கள் என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் clean bowled. [இந்த கவிதை பின்னாட்களில் வைரமுத்துவின் கவிதை தொகுப்பான இன்னொரு தேசிய கீதம் புத்தகத்தில் இடம் பெற்றது]. அதிலிருந்து வைரமுத்து எழுதிய எந்தப் பாடலையும் அலசி ஆராய்வேன். அதற்கேற்றார் போல் அவரும் தீனீ போட்டிருப்பார். இந்த ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் பாடலையே எடுத்துக் கொள்வோமே.
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய நமது தமிழ் மொழியில் அந்த காலம் முதல் மாறாமல் சொல்லப்படும் ஒரு உவமை உண்டு. ஆணை வண்டாகவும் பெண்ணை மலராகவும் வர்ணிக்கும் உவமைதான் அது. அதை கூட வித்தியாசமான கண்ணோட்டத்தில் ரசித்திருப்பார் வைரமுத்து. இறுதி சரணத்தில் அவர் சொல்லுவார்
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ!
தேன் மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் மலர்களுக்கு அந்த குளிர் போக்க வண்டுகள் வந்து தலை துவட்டுகிறதாம்! என்ன கற்பனை! 33 வருடங்களாக ரசித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகளை மீண்டும் இன்று ரசிக்க வைத்ததற்கு கார்த்திக்கும் உங்களுக்கும் நன்றி
மேலும் எழத ஆசைதான். ஆனால் நானே நிறைய எழுதி இடத்தை அடைத்துக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். அந்த இடத்தில இரு பாடலை நீங்கள் கொடுக்கலாம். மற்றொன்று இன்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஆண்டவன் கட்டளை திரையிடப்டுகிறது. அது சம்பந்தமாக ராகவேந்தர் சார் ஒரு சில விஷயங்களை ரெடி செய்ய சொல்லியிருந்தார். இந்த திரியில் உட்கார்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
வைரமுத்து ஒரு பேட்டியில் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடலுக்கு முன் வேறொரு பாட்டு எழுதியதாக
முன்பு குறிப்பிட்டிருந்தார்..அது பிடிக்கவில்லை என்ப்தால் ரெ க எழுதினாராம்..ஆனால் அதே பாடலை
வேறொரு படத்தில் உபயோகப் படுத்தினாராம்..படம் கருடா செளக்கியமா..பாடல் மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி் வந்தேன் ஆசையில் அள்ளி..
மதுபாலா அந்தக் கால அழகுத் தாமரை..கிஷோர் குமாருக்கு மனைவியானவர்..இவரது சல்திகா நாம்காடி பார்த்திருக்கிறேன்.. சின்ன வயதிலேயே நோய்வாய்ப்பட்டு மரித்தவர்..
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்
கம்பதாசன்
http://i1146.photobucket.com/albums/...psa86f500a.jpg
1916ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி – ஆம் அறிஞர் அண்ணா பிறந்த அதே செப்டம்பர் 15 தான் கம்பதாசனினி பிறந்த நாளும் கூட. திண்டிவனம் அருகே உலகாபுரத்தில் சுப்பராயர்-பாலம்மாள் தம்பதிக்கு மைந்தனாகப் பிறந்தார்.
இவருடைய நூலான முதல் முத்தம் (1943) நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசனால் இவ்வாறு பாராட்டப் பெற்றவர் கம்பதாசன் என அறியப்பட்ட ராஜப்பா அவர்கள்.Quote:
“கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப் பெற்றவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!
அவர் எந்த நூல்களையும் பார்த்து எழுதுவதில்லை. எதையும் மொழி பெயர்த்து புகழுக்கும் பணத்துக்கும் தம் பெயரால் வெளியிடுவதில்லை. தமிழ்நாடு நன்றி செலுத்த வேண்டும்” –
பொதுவாழ்க்கையில் நாட்டம் கொண்ட கவிஞர் கம்பதாசன் அவர்கள் சோஷலிஸ்ட் இயக்கத்தில் இணைந்து டாக்டர் ராம் மனோகர் லோகியா, மகாகவி ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா போன்றோருடன் பணியாற்றியவராவார்.
ஈரல் கோளாறு மற்றும் காசநோய்கள் இவருடைய உயிரை எடுத்துக் கொண்டன. 1973ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி இவர் காலமானார்.
கம்பதாசன் மறைந்து 40 ஆண்டுகளானாலும் கூட அவருடைய பாடல்கள் இன்றும் மக்களால் மறக்கப் படாமல் இருப்பதே அவருடைய புலமைக்கும் திறமைக்கும் சான்றாகும்.
அவர் எழுதிய அனைத்துப் பாடல்களின் விவரம் முழுமையாக் கிடைக்கவில்லை என்றாலும் கூட கிடைத்தவரையில் பட்டியல் கீழே தரப்படுகிறது.
மங்கையர்க்கரசி – பார்த்தால் பசி தீரும்
இதயகீதம் – ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே
கண்ணின் மணிகள் – கண்டு கொண்டேன் நானே – டி.ஏ.மோதி, ஆர்.பாலசரஸ்வதி – இசை எஸ்.வி.வெங்கட்ராமன்
ஓடி விளையாடு பாப்பா – பாட்டு முன்னே மீட்டிய வீணை – பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்
மாமன் மகள் - ஆசை நிலா சென்றதே
பூங்கோதை – நான் ஏன் வரவேண்டும்
நன்நம்பிக்கை – சூரியனும் ஒரு தொழிலாளி – இசையமைத்து பாடியவர் எஸ்.வி.வெங்கட்ராமன்
தந்தை 1944 – நாமே முதலாளி நமக்கினி நாமே தொழிலாளி – இசை திவாகர்
பூம்பாவை – சின்ன வயதிலே கன்னித் தமிழிலே – பாடியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
பிரியசகி – கடவுளே காலம் மாறியதே
இவையன்றி, அவன், அக்பர்., பாட்டாளியின் வெற்றி போன்ற மொழி மாற்றப் படங்களின் பாடல்கள் கம்பதாசன் அவர்களின் எழுத்துக்களால் மிகவும் பிரபலமடைந்தன என்றால் மிகையில்லை.
கவிஞர் கம்பதாசன் அவர்கள் இயற்றிய பாடல்களில் இதயகீதம் திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே என்ற இனிமையான பாடலைக் கேட்டு மகிழுங்கள்
http://www.inbaminge.com/t/i/Idhaya%20Geetham/
Mr. Vasudevan,
I appreciate your sincere and dedicated way to run this thread to reach the top. Yours and all hubbers posts about songs of middle 70s are wonderful.
Amazing memory power for you and Mr. Krishna about the songs and its situations in movies. Beautiful.
When you reply to Mr.Murali Srinivas, you have mentioned my name also which gives more happy and joy to me, but my contribution for this thread is nothing, except some enquiries about the songs.
I feel much happy to be a follwer of this thread and lucky to be my name in your good books.
Thank you sir.
stl.
Mr. Krishna
Mr. Esvee
Mr. Karthik
Mr. Raghavendar
Mr. Gopal
Good going. I am amazing about your knowledge about very rare songs, most of them I never heared. Rock.
stl.
வினோத் சார்,
காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் சாகாவரம் பெற்ற பாடல்களின் லிஸ்ட்டை தங்கள் கடின உழைப்பின் மூலமும், அபார ஞாபக சக்தி மூலமும் தந்துள்ளீர்கள். நன்றி! நாம் இருவரும் அலைபேசியில் நிறைய பாடல்களை அலசியுள்ளோம். ஆனால் ராட்சஸி பற்றி மிக அதிகமாக. ஏனென்றால் தாங்களும் என்னைப் போல ஈஸ்வரி பைத்தியமே!