https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c4&oe=59D0A1CA
Printable View
Sekar Parasuram
இத்தனை செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
மக்கள் சங்கமத்தில் திகைத்து நின்ற எங்கள் தளபதி அண்ணன் ராம்குமார்,
ஆர்ப்பரிப்போடு அலை மோதிய நடிகர் திலகத்தின் பக்தர்கள்,
டாக்டர் சிவாஜி வாழ்க! சிங்கத் தமிழன் சிவாஜி வாழ்க!! என வின்னை முட்டிய கோஷங்கள்,
வேலூர்- காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் நடிகர் திலகம் திரு உருவச்சிலை திறப்பு விழாவில்,
https://www.facebook.com/sekar.paras...7332911383595/
Ramiah Narayanan
அரசியலில் வெள்ளையுள்ளம் கொண்டோர் வெல்லமுடியாது !
நடிகர் திலகம் பக்கா திமுகாகரர், எம்ஜிஆர் பக்கா காங்கிரசில் இருந்த காலம். பின் எம்ஜிஆர் பார்வை திமுக பக்கம் சென்றது. 1956ல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியது திமுக. சிவாஜிக்குக் கூடுதல் ஆர்வம். சேலத்தில் நாடகம்
நடத்தினார். தெருக்களில் துண்டைவிரித்து பராசக்தி
வனங்களைப் பேசி பணம் வசூல் செய்தார். அதிக அளவு பணம் திரட்டியது நடிகர் திலகமே. திரட்டிய நட்சத்திரங்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினார் அண்ணா. அதிக நிதி த...ிரட்டியவர் என்ற முறையில் தனக்குப் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி. ஆனால் அந்தப் பாராட்டு எம்.ஜி.ஆருக்குச் சென்றுவிட்டது. போதாக்குறைக்கு அந்த விழாவில் கலந்துகொள்ள சிவாஜி அழைக்கப்படவில்லை. மனம் உடைந்தார் சிவாஜி. அதுவே சிவாஜி திமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர அச்சாரமிட்டது.
கண்ணதாசன், அண்ணா, சம்பத் திமுகவில் இருந்த காலம். மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி அணிவித்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம். மனமுடைந்த கண்ணதாசன் திமுகவிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=59DABCB3
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8a&oe=59CB4570
Sekar Parasuram
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் என...வும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7f&oe=5A088C92
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=59D43166
பின்நூட்டம்
Jahir Hussain ஒரு சந்திப்பில் திலீப்குமார் தனது மகனை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்,, மகனிடம் சிவாஜியை காண்பித்து இவர்தான் மிகப் பெரிய நடிகர் என்கிறார்,,, அவரது மகன் திலீப் குமாரிடம் உங்களைவிட பெரிய நடிகரா என்று கேட்டுவிட, அதற்கு திலீப் குமார் அவசர அவசரமாக இல்லையென்பது போல் தலையசைத்து என்னை விட பலமடங்கு பெரிய நடிகர் என்று கைகளிரண்டையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டினாராம்,,, அப்பேர்பட்ட தி கிரேட் ஆக்டர் சிவாஜி,,,,
Jahir Hussain
அரபு நாடுகளில் வசிக்கும் அரபிகள் இருவகைப்படுவார்கள்,,, ஒன்று படித்த அரபிகள்,, இவர்கள் பக்கத்து நாடுகளான சிரியா போன்ற நாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் வந்து செட்டில் ஆனவர்கள்,,, உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்,, மற்றவர்கள் சுத்தமாக படிப்பறிவு அற்ற புறநகர் பகுதிகளில் சகல சௌபாக்கியங்களோடு வாழும் "காட்டு அரபிகள்" ,,, இவர்கள் தான் அந்தந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்,,, சரி விஷயத்திற்கு வருகிறேன்,,, சிவந்த மண் படத்தில் முக்கியமான காட்சியில் " பட்டத்து ராணி" பாடல்வரும்,,, ...இயக்குநர் ஸ்றீதரின் வளமான கற்பனையில் நல்ல பொருட்செலவில் செட்டிங்ஸ் செய்யப்பட்டு அந்தக் காட்சி அமைக்கப் பட்டிருக்கும்,,, அந்தப் பாடலில் நமது திலகம் அரபி வேடமிட்டு வந்து அந்த காட்சியில் பங்கு பெறுவார்,, அதில் அவரது உடையலங்காரம், ஒப்பனை, நடிப்பு மூன்றும் இன்றளவில் பேசப்படும் ஒன்று,,, மேலே நான் குறிப்பிட்ட ஒரு "காட்டரபி"யைப்போல் இமிடேட் செய்து நடித்திருப்பார்,,, அந்த குறிப்பிட்ட மண்ணின் மைந்தர்களான அந்த அரபிகளை புறநகர் பகுதிகளுக்குள்ளே தான் பெரும்பாலும் பார்க்க முடியும்,,, சிட்டிக்குள்ளே அவர்கள் வருவது அபூர்வம்,, என்னைப்போன்ற ஆட்கள் துபாய் போன்ற நாடுகளில் அவுட்டர் ஏரியாக்களில் சுற்றி இருக்கிறோம்,,, வித்தியாசமான அவர்களது உடல்மொழிகளை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்த மாயம் என்ன? அது ஒரு மேஜிக்,,, துல்லியமாக கணித்து நடித்து இருக்கிறார்,, ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இதை பதிவிட விரும்பினேன்,,, இன்று நேரம் வாய்த்தது,,, பல வேடங்களை நாம் பல பதிவுகளில் பதிந்திருக்கிறோம்,,, இந்த வேடப் பொருத்தத்தில் நாம் சிலாகிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன,,, இன்னொரு முறை அந்த பாடல்காட்சியை பார்ப்பவர்கள் மற்ற எல்லா அம்சங்களையும் தவிர்த்து விட்டு அந்தக் காட்சியில் நடித்த மஹா நடிகனை மட்டும் கவனித்துப் பாருங்கள்,, நான் கூறிய உண்மை விளங்கும்,,,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=59CFE6FB