Lord Murugan's Deviation and Author's Devotion
இனிய உறக்கம்
இக் கதிர்காம மாலை எனும் நூலின் காணப்படுகின்ற இன்னொரு பாடலை இப்போது பாடி இன்புறுவோம்.
இன்னிமை யாகமனம் வேறுவைத்த நாள்முதலாய்
சொன்னதை மறந்து தோகைதனைக் கடிநீர்
மன்னீர் தனக்கு மல நீர் நிகராமோ?
கண்டீரோ சொல்லும் கதிர்காம வேலோனே.
இன் இமையாக = இனிய உறக்கமாக, வள்ளியை கனாக்கண்டுறங்கி ; அதனால்:
மனம் வேறு வைத்த = பக்தர்களை மறந்து, வேறு வழிச்சென்று, அவள்மேல் மனம் இட்டுவிட்ட;
நாள் முதலாய் = அந்த நாள் தொடங்கி;
சொன்னதை மறந்து = அடியார்களுக்குக் கூறிய உறுதிமொழிகளை மறந்து;
தோகைதனை = வள்ளியை;
கடிநீர் கண்டீரோ = மணம்செய்து கொண்டீரோ;
சொல்லும் = அடியேனுக்குக் கூறுங்கள்;
மன் நீர் தனக்கு = நிலை நிற்கும் உமது தன்மைக்கு;
மல நீர் நிகராமோ - நிலையற்ற, மணம் செய்துகொண்டு வாழும் இவ்வுலக இல்லற வாழ்வு
ஒப்பாகுமோ?
கதிர்காம வேலோனே = கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானே, என்றவாறு.
இமைத்தல் - உறங்குதல்; இமை - உறக்கம், முதனிலைத் தொழிற்பெயர்.
அன்றி, இனிமை -" இன்னிமை" என்று எதுகை நோக்கி விரிந்தது எனினுமாம்.
கடிநீர், மன்னீர், மலநீர் என்று முந் நீரோடும் விளையாடி யிருக்கின்றார் இப் பாவலர்.இச்சொல் விளையாட்டு இனிமையானது.
இவ்வுலக வாழ்வில்தானே ஆன்மா மலம் பற்றித் தூய்மை இழக்கிறது? ஆதலின் இறைவனாகிய முருகனுக்கு அது தரமன்று என அஞ்சி, நிகராகுமோ என்கிறார். யான் மனிதனாதலின் நீர் சொன்னாலன்றி யான் அறியேன் என்பதுதோன்ற "சொல்லும்" என்று முடித்து, பெருமானை விளிக்கின்றார்.
நிகராமோ, கண்டீரோ என்ற இரு வினாக்களும், "சொல்லும்" என்று இறைஞ்சியவாறு முடிந்தது.
இந்நூலுக்கு உரை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது என் உரை.
Friend's god; enemy's god.?
(Ref to the above post)
வரிகள் : அன்னவர் பட, அல்லா .................................................. ................... அறிந்தனம் :
பொருள் :
அமரர்க்கு முதல்வன், திருமால். அப்படியாயின் அமரர் அல்லாத அசுரர்க்கு யார் முதல்வன்? அசுரர்க்கும் அவனே முதல்வன். இறைவன் யாவர்க்கும் பொதுவானவன்,
அன்னவர் =அத்தகையோர்; பட = வீழ, ஒழிய.
அல்லா = நட்புடையோர் அல்லாத,
அவுணர் = அசுரர்.
நட்டோர் = நட்பு உடையவர். பகைவர் என்பதன் எதிர்ச்சொல்,
இனைமை = ஒப்பீடு; இத்தன்மை.
நற்கு = நன்கு (நல்+கு).
அணர்தலை = மேலெழுந்ததலை.
அரவு = பாம்பு.
சேவல் ஊர்தி = சேவல் வாகனம்.
செங்கண் மாஅல்= சிவந்த கண்களையுடைய கரிய மால். அதாவது கண்கள் சிவப்பு, உடல் கருப்பு.
அறிந்தனம் = தெரிந்துகொண்டோம்
இறைவனை, நம் நண்பனின் ( நட்பு நாட்டானின் ) கடவுள் என்றும் பகைவனின் கடவுள் என்றும் சொல்வது சரியன்று. அது இறைமரபு அன்று.
தொடரும்..