http://oi66.tinypic.com/2r2ozee.jpghttp://oi67.tinypic.com/e0orah.jpghttp://oi68.tinypic.com/vh9cms.jpghttp://oi65.tinypic.com/10s5182.jpghttp://oi68.tinypic.com/35n0kdl.jpg
நன்றி
Printable View
http://oi63.tinypic.com/2qn2s2b.jpg
நன்றி Sivaji Group
அரசியல் அதிகாரம், ஏவல்துறை பின்புலம் ,ரவுடிக்கும்பல்கள் , மற்றும் கைக்கூலிகள் இவற்றின் துணையுடன் உங்கள் நடிகர் எங்கள் நடிகருக்கு செய்த அட்டூழியங்கள் துரோகத்தனங்களை எண்ணி ஒன்றும் செய்ய இயலாமையால் நாங்கள் கண்ணீர் வடிப்பது உண்மைதான்.Quote:
Yesterday, 03:52 AM #1265
சினிமா & அரசியல் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜிக்கு எதிர்ப்பு என்பது மிக மிக குறைந்த அளவே . அதேபோல் அவருக்கும் அவருடைய படங்களுக்கும் எந்தவித சங்கடங்களோ பிரச்சனைகளோ வந்தது இல்லை சிவாஜிக்கு பத்திரிகைகள் பேராதரவு மிகவும் அதிகம் . மேலும் சிவாஜி கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடிப்பிற்கு தீனி போட்டார் .சென்சார் பாதிப்புகள் இல்லை .மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள் .காங் கட்சியின் ஆதரவும் இருந்தது . திமுக தரப்பில் இருந்து மட்டும் பல நேரங்களில் சிவாஜியின் நடிப்பை கிண்டல் கேலி செய்வார்கள் .போஸ்டரில் சாணி அடித்தார்கள்
.
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் பணமும் கிடைத்தது ,.ஒரு கட்டத்தில் அவருடைய நடிப்பு மக்களுக்கு சலிப்பை உண்டாக்கியது .
1975க்கு பிறகு சிவாஜியின் படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி சில படங்கள் மட்டும் வெற்றி கண்டது .
அரசியலில் சிவாஜி மிகவும் பரிதாபமாக காணப்பட்டார் .கூட இருந்தவர்களும் சொந்த ரசிகப்பிள்ளை களும் காலை வாரி விட்டார்கள் .
சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில இருந்தார் . அரசியலில் கடைசி இடத்தில நின்று காணாமல் போனார் .
நடிப்பில் பெயர் பெற்றதால் நடிகர்திலகம் பட்டம் மட்டுமே நிலைத்துவிட்டது .
உண்மை நிலவரம் புரியாமல் சிவாஜியின் புகழை மறைத்தார்கள் .எம்ஜிஆரின் புகழை திணித்தார்கள் என்றெல்லம் ஓலமிட்டு வரும் சிலரின் கூக்குரல் கேட்க்காமல் இல்லை .சிவாஜிக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தது ..மனசாந்தி இல்லாமல் காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் சிவாஜியின் பிள்ளைகளின் இயலாமை கண்டு பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய இயலும் ? Courtesy : fb.,
ஆனால் சிவாஜி கணேசனுக்கு செய்த அட்டூழியங்கள் துரோகத்தனங்களுக்காக உங்கள் நடிகர் கடைசி காலத்தில் தான் செய்த பாவங்களை கழுவுவதற்காக சிவாஜி கணேசனை தான் கிடந்த வைத்தியசாலைக்கே அழைத்து பாவமன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுதது உச்சத்திலும் உச்சம்.
தமிழ் சினிமா உலகில் 1952ல் ஒரு விடிவெள்ளி வெளிப்பட்டது
அந்த விடிவெள்ளிதான் கலை உலக சக்கரவர்த்தி
வி சி கணேசன் எனும் பெயர் கொண்ட சிவாஜி என எல்லோராலும் அறியப்பட்ட
சிம்மக்குரலோன்,நடிகர் திலகம், நிஜ கொடைவள்ளல் பத்மஶ்ரீ சிவாஜி கணெசன் அவர்கள்
1952ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சாதனை படைத்து வெள்ளிவிழா கண்ட
பராசக்தி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருந்தார்.
முதல் படத்தின்மூலமே நிஜ வள்ளல் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவராகிவிட்டார்
இவரது புயல் வேக வருகை காரணமாக , இவர் வருவதற்கு முன் பல வருடங்களாக தமிழ் சினிமா உலகில்
நடித்துக்கொண்டிருந்த பல நடிகர்களும் இவர்மேல் பொறாமை கொண்டார்கள்.அப்படி இவர்மேல் பொறாமை கொண்டவர்களில்
ஒரு நடிகர் நிஜ வள்ளலை வீழ்த்த செய்த சதிகள் ,துரோகங்கள் ,அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது.
அப்படி என்ன செய்தார் காத்திருங்கள்.
தொடரும்.......