-
jahir hussain
திரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு..... நடிகர் திலகம் அவர்கள் தன்னுடைய கேரியரில் 19 படங்கள் நட்புக்காக நடித்துக் கொடுத்து இருக்கிறார்... ஒவ்வொறு படமும் ஒவ்வொறு விதத்தில் முக்கியத்துவம் பெற்ற படங்கள் அவை... ஓரிரு காட்சிகளில் தோன்றினாலும் அந்தந்த படங்களில் அவர் தோன்றி நடித்தது கண் கொள்ளா காட்சியாகும்... அத்தனை படங்களில் "குழந்தைகள் கண்ட குடியரசு"... "ஸ்கூல் மாஸ்டர்".. ஆகிய படங்கள் ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது... அந்த படங்களின் குறிப்புகள்... குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ திரைப்படத்தின் கரு.
இப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்தி என்பவன் கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனை கொன்று முடியாட்சிக்கு சரவாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.
பின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமான ‘குடியாட்சியை’ நாட்டில் நிறுவுகின்றனர். இதுவே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தின் கதைச் சுருக்கம்.
வில்லன் சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.
குழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.
இந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு ‘மக்கள ராஜ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.
1954–ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊன் பவூஸ்’ என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியது ‘ஸ்கூல் மாஸ்டர்’.
கடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.
கடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.
ஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.
‘ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா’ என்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவர் கண்ணன் ஆக தோன்றும் நடிகர் திலகம்... ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறார்...
இப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக நடிகர் திலகமும் சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம் ‘ஸ்கூல் மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிட்டாவிடினும் இந்தப் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அல்லவா?
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5B04A648
-
-
-
-
-
-
-
-
-