https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...a5&oe=5C439E2D
Printable View
18.10.2018
நேற்று முன் தினம் இரவிலிருந்து
முற்றின காய்ச்சல். நேற்று காலை
மருத்துவமனை சென்று ஊசி ஏற்றி, "திரிசூலம்" வி.கே.ஆர் பாணியில் "மாத்திரைகளை மார்ச்
பண்ணி வரச் சொல்லி" விழுங்கி
விட்டு, நன்றாக ஓய்வெடுத்த பின்
பின் மாலைப் பொழுதில் சுகமாகி தெளிந்தெழுந்தேன்.
உண்ணாவிரதமிருப்பவர்களுக்கு உண்ணா நோன்பை முடித்துக் கொள்ளும் தருவாயில் சுவையாய், சத்தாய் பழச்சாறு கிடைப்பது மாதிரி, என் காய்ச்சல்
தீர்ந்த இரவில் பழச்சாறாய் "அவன்தான் மனிதன் " கிடைத்தது.( நன்றி: ஜெ. மூவிஸ்)
" எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது"
பாடல் காட்சி வரை பார்த்தேன்.
அதற்கு சற்று முன்பாக ஒரு காட்சி.
முத்துராமனின் குழந்தையிடம் "எது வேண்டுமானாலும் கேள்" என்று சொல்லி விடுவார்.. நடிகர் திலகம். என்னென்னவோ கொடுப்பார். அத்தனையையும் வீசி எறியும். அவரது பாரம்பரியப் பெருமை சொல்லும் பச்சைக்கல்
மோதிரத்தையே கழற்றித் தருவார். 'அம்மா வேண்டும்' என்று
கேட்கவிருக்கும் பெண் குழந்தை
அதையும் தூர வீசும்.
பதறிப் போகும் வேலையாள் மேஜர்.. பரம்பரை மோதிரத்தை
குழந்தையிடம் கொடுத்து, அதன்
பெருமையறியாமல் அது வீசி எறிந்து விட்டதே என்று வருத்தப்பட, நடிகர் திலகம் புரிதல்
மிகுந்த ஒரு புன்னகையோடு சொல்லுவார்...
" அழுத குழந்தையை சிரிக்க வைக்க முடியல.. என்ன பெரிய
மோதிரம் அது?"
அய்யா நடிகர் திலகத்தின் தேசப்பற்று ஓங்கிய தூய அரசியலாக அந்த பச்சைக்கல் மோதிரத்தை நான் பார்க்கிறேன்.
வேறு எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அசட்டுத்தனத்தில், கைக்குக் கிடைத்த உயர்ந்த விஷயத்தை வீசி எறிந்த தமிழக மக்களை அந்தக் குழந்தையின் வடிவில் பார்க்கிறேன்.
தன் தூய்மையை நிராகரித்த புரிதலற்றவர்களும் சிரிக்க
வேண்டும் என்று சிந்தித்த நம்
தலைவனை ஆனந்த பவனம் ரவிக்குமாராகப் பார்க்கிறேன்.
எங்கள் எஜமானின் புகழும், அறிவும், அரசியல் தெளிவும், தன்னலமற்ற அரசியல் தொண்டும், கண்ணியமும்.. கணப்பொழுதும்
ஓய்வில்லாமல் அத்தனை திசைகளிலிருந்தும் அரசியல்வியாதிகளால் அவமானப்படுத்தப்படுவது பார்த்து கண்களில் ரத்தக் கண்ணீர் வார்த்துத் துடிக்கும்
விசுவாசமான கோடானுகோடி சிவாஜி ரசிகர்களின் ஒற்றை வடிவமாக மேஜர் சுந்தர்ராஜனைப்
பார்க்கிறேன்.