We deeply mourn the Demise of our beloved Playback Singer Dr.P.B.Srinivas who was associated with about 25 of NT Films. He directly sang two songs for our NT.
1)Kandene unnai kandene(Nan sollum ragasiyam) 2)Endrum Thunbamillai(Punar Jenmam)
Printable View
We deeply mourn the Demise of our beloved Playback Singer Dr.P.B.Srinivas who was associated with about 25 of NT Films. He directly sang two songs for our NT.
1)Kandene unnai kandene(Nan sollum ragasiyam) 2)Endrum Thunbamillai(Punar Jenmam)
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
[QUOTE=Gopal,S.;1034576]என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-
Dear Gopal Sir,
Good one.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
---To be continued .
ராகவேந்தர் சார்,
மூச்சடைத்து போனேன். என்ன ஒரு அபூர்வ ஆவணம்? அப்பாச்சி கலைஞர்களுடன் விவசாய கருவி உற்பத்தி கல்லூரியில் ,நடிகர்திலகம்!!! ஆயிரம் எழுத்துக்கள் தர முடியாத பரவசம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
எஸ்வி சார்,
function நன்றாக நடந்ததற்கு வாழ்த்துக்கள் நடிகர்திலகத்தின் அதி தீவிர விசுவாசிகள் பட்டியலில் பம்மலார் பெயரை விட்டு விட்டீர்களே?
இனிய நண்பர் கோபால் சார்
நீங்கள் உட்பட நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அனைவரின் அன்பு வாழ்த்துக்களோடு நம் மக்கள் திலகத்தின் புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடைப்பெற்றது .
திரு பம்மலார் அவர்கள் என்றென்றுமே நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசி என்பதில் ஐயமில்லை .
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-16
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
----To be continued .
P .B . ஸ்ரீநிவாஸ்.--- சில நினைவுகள்.
நான் M .Tech படித்து கொண்டிருந்த போது ,அடிக்கடி shanti Vihar என்ற Luz Corner ஹோட்டல் செல்வேன். தோசை, Bengal sweet என்னுடைய favourite .எப்போதாவது pav baji .அங்கு என்னுடைய இரண்டாவது அபிமான பாடகர் (முதல் யார் ,நம்ம TMS தான்), ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருக்கும் அழகை ரசிப்பேன். ஒரு 20 ஜிலேபி வாங்கி ,இருபது பேப்பர் plate கேட்டு வாங்கி கொள்வார். அத்தனையும் ,அங்கே நின்றே சாப்பிடுவார். ரொம்ப பேசவெல்லாம் மாட்டேன். ஒரு நாள் , இன்னொரு நண்பனிடம் காமதேனுவில் noon show அடுத்த வீட்டு பெண் போக வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்த போது ,அவரே brake அடித்து நின்று, நல்ல பாட்டுக்கள் என்றார். அவர் முதல் பாடல் முதல் என்னை கவர்ந்த அத்தனை தமிழ் பாடல்களையும் சொல்லி, என்னுடைய இரண்டாவது அபிமானம் நீங்கள்தான் என்றேன்.மாலையில் மலர் சோலையில் பற்றி பேசும் போது ,முழு பாடலையும் பாடியே காண்பித்தார்.
பிறகு 90 களில் தொடர்பு விட்டு விட்டது. என் இளைய மகன்(தெய்வ மகன்??!!), நான் கார் பயணங்களில் (நீண்ட) போடும் பழைய தமிழ் பாடல்களில் ஈர்க்க பட்டு PBS ரசிகனானான்.(காலங்களில்,காதல் நிலவே,சின்ன சின்ன ,மாடி மேலே).எனக்கு அவரை தெரியும் என்றதும் த்ரில் ஆகி ,நாங்கள் விடுமுறையில் வரும் போது பார்க்க விரும்பினான். ஒரு பகல்,மாலை இடைப்பட்ட நேரம்...வூட்லண்ட்ஸ் drive -in . சந்திப்பு நிகழ்ந்தது. என்னை recognise பண்ணி கொண்டார். என் மகனிடம் மூன்று மணி நேர உரையாடல். என்ன அருமை!!! நான் NT பக்தன் என்று தெரிந்து, கண்டேனே பாட்டு முணுமுணுத்து ,NT யுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். படிக்காத மேதை படத்தை மிக சிலாகித்தார்.NT பொன்னொன்று கண்டேன் கேட்டு விட்டு ,தன் பகுதிக்கே வாயசைக்க விரும்பியதை பெருமையோடு குறிப்பிட்டார்.பிறகு ஐந்தாறு சந்திப்புகள் விழாக்களில்.
நேற்று என் மகன் சோகத்தோடு message our beloved PBS no more . வாழ்க்கையை விட மூர்க்கமான எதிரி யார்? இழப்புகளின் மூலம் வலியை அதிக படுத்தி கொண்டேதானே உள்ளது?
நன்றி கோபால்!
ஒரு நல்ல பாடகர்,
அதை விட ஒரு நல்ல மனிதர்..
திரை வாழ்க்கையின் வம்பு,தும்பு,அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.
அமைதியானவர்.
ஒரு ஞானியைப்போல வாழ்ந்தவர்.
அதே சமயம் வாழ்க்கையை நேர்மையாக நன்கு அனுபவித்தவர்.
காற்று உள்ள வரை அவர் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்.
உங்கள் தெய்வமகனின் கொள்ளுப்பேரனும் அதை ரசித்துக்கொண்டிருப்பான்.