http://i1028.photobucket.com/albums/...pshwndrdcg.jpg
Printable View
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...ad&oe=58FF5F10
Deva Chandran
Deva Chandran சாம்ராட் அசோகர் நேரில் வந்து எம் தலைவரை பார்த்திருந்தால் மிகவும் பிரமித்து போய் இருப்பார் - உண்மையான அசோகர் அவரா அல்லது நடிப்புலகின் சக்ரவர்த்தியா என்று மிரண்டிருப்பார் - சிங்கம்லே
Like · Reply · 2 · 18 hrs
Sundar Rajan
Sundar Rajan இந்த கம்பிரம் யாருக்கு வரும் தலைவரை தவிர
Like · Reply · 2 · 17 hrs
Srinivasa Narasimhan
Srinivasa Narasimhan அசோக சக்ரவர்த்தியே, இதுபோல் கம்பீரமாக நிற்கமுடியுமா ? சந்தேகமே ! இதுபோன்று நின்றால் ..... சண்டையே கிடையாது ஒன்லி சரண்டர்தான் !
Like · Reply · 1 · 14 hrs
Mohamed Farook
Mohamed Farook புருவங்களை நெரிப்பாரே..யாராலும் முடியாது..
Like · Reply · 1 · 14 hrs
வாழ்த்துகள்.. செந்தில்வேல் சார்.
"முதல் மரியாதை" தொடர் அற்புதம்.
எளிய, இனிய கிராமிய நடையிலேயே வர்ணனையை நகர்த்திச் செல்லுவது மிகப் பொருத்தம்.
ஒரு சந்தேகம்... இதில் அய்யாவின் பெயர் "மலைச்சாமி" இல்லை?
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 163– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...0sivakumar.jpg
வெகு நேரம் சமாதானப்படுத்திய பின் அசோகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
சரவணன் மேலும் தொடர்ந்தார், `இன்று அசோகன், சிவாஜி இருவரும் இல்லை. இவர்களைப்பற்றிச் சொல்வது நாகரிகமில்லையென்றாலும், இந்த சம்பவத்தை நான் பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், கலைஞர்களிடையே ஏற்படும் சிலவகை மனக்கசப்புகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
அதிலும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றன. இதில் எந்த ரகசியமும் இல்லை. நடிகர்திலகம், அசோகன் இருவருமே அந்தப் படத்தில் மிக நன்றாக நடித்தார்கள் என்பது உண்மை.
சொல்லப்போனால், சிவாஜி சொல்லிக் கொடுத்ததில் ஒரு சதவீதம்தான் அசோகன் நடித்தார் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. அதுவே பெரிய ஹிட்.
படம் நூற்றியிருபத்தைந்து நாட்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம்தான் 'உயர்ந்த மனிதன்'.
படத்தில் நடிக்க முதலில் சிவாஜி எப்படி சம்மதிக்கவில்லையோ அப்படியே இயக்குநர் பஞ்சு சாரும் சம்மதிக்கவில்லை. அவரையும் `கன்வின்ஸ்’ செய்தோம்.
படத்தில் சிவாஜி நடிப்பது உறுதியானதுமே அவரிடம் சம்பளம் பற்றிக் கேட்டோம்.
`சண்முகம் வந்து உங்களிடம் பேசுவார்’ என்றார் சிவாஜி. அப்படியே சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகம் வந்தார்.
`நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கலாம்னு அண்ணன் சொல்லச் சொன்னார்’ என்றார்.
எங்களுக்கு அது சரியென்று படவில்லை. அந்த மாபெரும் நடிகர் அப்போது என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாரோ அதைத் தருவதுதான் நியாயம் என்று முடிவெடுத்தோம்.
`ஏவி.எம். நிறுவனம் என்ன சம்பளம் தந்தாலும் ஓ.கே. என்று சிவாஜி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. சண்முகத்திடம் பேசிப்பேசி கடைசியில் சிவாஜியின் அப்போதைய சம்பளம் என்ன என்ற விவரம் கிடைத்தது. கடைசியாக ஏ.பி. நாகராஜன் படத்துக்கு அண்ணன் வாங்கிய சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய்! எங்களுக்கு அதில் ஒரே பாயிண்ட்டுதான். ஏ.பி.என். படம் வண்ணப்படம். `உயர்ந்த மனித'னோ கறுப்பு வெள்ளை. மேலும் ஏ.பி.என். படத்தில் காஸ்ட்டியூம்கள் ஹெவியாக இருந்தன. கனமான அணிகலன்களையும் அணிய வேண்டும். அதே போல படப்பிடிப்பு நாட்களும் அதிகம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அந்த சிரமங்கள் எதுவும் இல்லை. ஷூட்டிங் நாட்களும் அங்கே அதிகம். எனவே, சிவாஜிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. இதை சண்முகத்திடம் தெரிவித்தோம். மறுபேச்சின்றி ஒப்புக்கொண்ட அவர், `ஆனால் ஒரு கண்டிஷன்’ என்றார்.
`இப்போ காலணா தரக்கூடாது. படம் முடிஞ்சு சென்ஸார்ல ஓ.கே. ஆனதும் ஒரே பேமண்ட்ல மொத்தமா கொடுக்கணும்.’
ஆனால் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
நாங்கள் `குழந்தையும் தெய்வமும்’ படத்தை இந்தியில் `தோ கலியான்’ என்று எடுத்தபோது அதை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது `பாரண்ட் ட்ராப்’ என்ற கதையின் அடிப்படையிலேயே `வாபஸ்’ என்ற பெயரில் வடக்கில் வேறொரு கம்பெனி ஒரு படத்தை எடுத்து
வந்தது.
`பாரண்ட் ட்ராப்’ கதையைத் தழுவித்தான் ` குழந்தையும் தெய்வமும்’ எடுத்தோம். எனவே `வாபஸ்’ வெளியாவதற்குள் நாங்கள் `தோ கலியான்’ படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும்.
அதற்காக நடுவில் கொஞ்ச காலம் ` உயர்ந்த மனித’னை நிறுத்தி வைத்துவிட்டு 'தோ கலியா'னில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். சுமார் எட்டுமாத காலம் பிரேக் விழுந்துவிட்டது.
இந்த இடைவெளி சிவாஜிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
`ஒரு வேளை ஏவி.எம். `உயர்ந்த மனிதனை’ டிராப் செய்துவிட்டார்களோ’ என்ற சந்தேகம். சண்முகம் வந்து கேட்கவும் செய்தார்.
இது தெரியவந்ததும், `முதல்ல ஒரு ஐம்பதாயிரம் கொண்டு போய் சண்முகம் ஆபீஸ்ல அட்வான்ஸை கொடுத்துவிட்டு வாங்கப்பா’ என்றார் அப்பச்சி!
அதே போல கொண்டு போய் பணத்தைக் கட்டாயப்படுத்திக் கொடுத்துவிட்டு வந்தோம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தை பற்றி சொல்லும்போது எங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் சிவகுமாருக்கு அதில் கிடைத்த நல்ல ரோல்.
`காக்கும் கரங்கள்’ படத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவகுமார் நடித்த காட்சிகளைப் பெருமளவு வெட்ட வேண்டி வந்ததால் சிவகுமார் மிகவும் மனமுடைந்து போனதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அவருக்கு நல்ல ரோல் தந்தோம்.
அது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஏ.பி.நாகராஜன் எடுத்த ஒரு படத்தில் முருகர் வேடத்துக்கு சிவகுமாருக்கு தெரியாமலேயே அவரது பெயரை அப்பச்சி சிபாரிசு செய்தார்.
சிவகுமாரின் நீண்ட திரையுலக வாழ்க்கைக்கும், வேகமான முன்னேற்றத்திற்கும் ஏவி.எம். நிறுவனமும் ஓரளவு காரணமாக இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி!
'உயர்ந்த மனித'னில் சிவகுமாருக்கு `கேள்விக்கென்ன பதில்’ என்று ஒரு பாடல் வைத்திருந்தோம். முதலில் பாட்டை ஒலிப்பதிவு செய்துவிட்டோம். பாடல் காட்சியை வெளிப்புறப் படப்பிடிப்பில் முடித்துக் கொண்டும் வந்தாயிற்று.
ஆனால் அப்பச்சிக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை.
ஏனென்றால், கதையின்படி சிவகுமார் ஒரு படிக்காத பையன். காதலியோ காலேஜில் படித்த பெண் மாதிரி ஒரு கிரேஸ்புல் கேரக்டர். அந்த காதல் காட்சியில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்தால் அழகாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டார் அப்பச்சி!
ஆகவே மீண்டும் பாடலை கொஞ்சம் மாற்றி இசையமைத்து அதே மாதிரி காட்சியையும் ரீ-ஷூட் செய்தோம். இப்போது கூட கவனித்துப் பார்த்தால், அந்தப் பாடலில் இசைத்தட்டில் இருப்பதற்கும், படத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கும்.
`உயர்ந்த மனிதனில் பாட்டின் நடுவில் வசனங்களோடு `அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற பாடல் அப்போது புதுமை.
இந்த புதுமைக்கும் என் சகோதரர் குமரன்தான் காரணமாக இருந்தார்.
அச்சமயம் சென்னையில் பிரபலமாக இருந்த ஒரு ஆங்கிலப்படத்தை எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்க்கும்படி சொல்லி, அதில் ஒரு காட்சியில் வந்தது போல, அந்த இன்ஸ்பிரேஷனை வைத்து பாட்டையும் வசனத்தையும் இணைக்குமாறு ஐடியா கொடுத்தார் குமரன்.
அதே போல பி.சுசீலா பாடிய `நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா ‘ என்ற அருமையான பாடல் அவருக்கு அந்த ஆண்டு தேசிய விருதினைப் பெற்றுத்தந்தது. அதற்காக அவரைப் பாராட்டி நாங்கள் எடுத்த சிறப்பான விழாவில் ஒரு அகில இந்திய ஏன் உலகில் இருக்கும் இந்தி பேசும் மக்களிடமெல்லாம் மிகவும் புகழ்பெற்றிருந்த ஒருவர் தலைமை தாங்க வந்திருந்தார்.
(தொடரும்)
பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.
அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்குடித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கேக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா ".
சித்த நேரம் யோசிக்கிறாரு.
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா, அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த
"மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.
வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் பெரியசாமிக்கு புடிச்சுப் போச்சு.
அதே சமயம் அவர அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டும் பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,
பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.
இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******
முதல் மரியாதை...