உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.
-
கிறுக்கன்
Printable View
உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.
-
கிறுக்கன்
ஆம்!
கருப்பாய் இருந்ததினால்
வெறுப்பை உமிழ்ந்தவரை
சிரிப்பை சுமந்தே
இதயத்தில் இடம்பிடித்தாய்
பத்தில் தோற்றாலும்
பலபட்டம் பெற்றாய்
கடைசி படம்வரை
கல்லூரியில் படித்தாய்
என்றும் பதினாறு
என்றிருந்த உன்னை
எமன் எப்படி
எடுத்து சென்றான்
மகள் தாயாகி
முத்தொன்று பெற்றெடுத்தால்
முதுமை முளைக்குமென்று
முந்தி கொண்டாயோ
உடல்விட்டு போனாலும்
உன் நினைவு
பல நெஞ்சில்
உயிரோடு உறவாடும் !!!!!!!!!!
அழகான, உருக்கமான அஞ்சலி முரளிக்கு!
மென்மையாய் மொழிவதால் மெய்யென திரிந்து
உயர்ந்து விடாது பொய்.
-
கிறுக்கன்
சரியாக சொன்னீர்கள்!
பண்பிடம் பணிவும் பகையிடம் துணிவும்
பலம் தரும் குணமாம்.
-
கிறுக்கன்
பணங்கண்டு குணம் மாறும் உறவு
விளக்கு இல்லா இரவு.
-
கிறுக்கன்
நல்ல கருத்துக்களை, உண்மைகளை நச்சென்று, சுருக்கமாய் சொல்லுகிறீர்கள்! :clap:
Thank you ma'am for your continuous support and encouragement. :ty:Quote:
Originally Posted by pavalamani pragasam