http://i66.tinypic.com/scx4cx.jpg
Printable View
Maalai Sudar 16/07/18
கொடை வள்ளலாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.: கவர்னர்
சென்னை, ஜூலை 16: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தனது உன்னத திட்டங்களால் நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றும் அவர் கொடை வள்ளலாக வாழ்ந்தவர் என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கிவைத்து பேசியபோது அவர் கூறியதாவது:- எம்ஜிஆர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்ஜிஆரை இன்றும் நேசித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது.
இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது. உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.
துன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கவர்னர் தெரிவித்தார்.
விழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை அமைக்கப்படும். கவர்னர் கையால் அந்த இருக்கை தொடங்கி வைக்கப்படும் என்றார்.
15.7.2018
நேற்று எம்ஜிஆர் ...இன்று எம்ஜிஆர் .. நாளை எம்ஜிஆர் .
உலக வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் - ஒரே தலைவர் எம்ஜிஆர் .
உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது .
எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் 15.7.2018 அன்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உலக எம்ஜிஆர் மன்ற பேரவை சார்பாக வேல்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் மிக சிறப்பாக நடந்தது .அமேரிக்கா , பிரான்ஸ் , மலேசியா சிங்கப்பூர் இலங்கை மற்றும் இந்தியாவில் பல் வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 8000 பிரதிநிதிகள் மேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக கண்ணைக்கவரும் வண்ணப்பபதாகைகள் & 20 அடி உயர கட் அவுட் ராட்சத பூமாலைகளுடன் அலங்கரித்திருந்தது காண்போரின் கண்களை கவர்ந்தது . எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி மனதிற்கு நிறைவு ,
மேதகு ஆளுநர் அவர்கள் எம்ஜிஆரின் ஆட்சியை பொற்காலம் என்றும் எம்ஜிஆர் மகாபாரத கர்ணனாக வாழ்ந்தவர் என்றும் திரைஉலகில் வசூல் மன்னர் என்றும் விவரித்தார் .
வைரமுத்து
புலமைப்பித்தன்
சைதை துரைசாமி
ஐசரி கணேஷ்
ஜி .விஸ்வநாதன்
பிரபுதேவா
நடிகைகள்
சரோஜாதேவி
லதா
வெண்ணிற ஆடை நிர்மலா
மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பேசினார்கள் .,
நிறைவாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு - முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு விருந்து .
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிய நாள் .
பெரும்பாலான அரசியல் தலைவா்களின் புகழ் என்பது செயற்கையாக கட்டமைக்கப்பட்டதுதான். பணத்திற்காக , பதவிக்காக, அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அல்லது வேறு ஏதாவது ஒரு ஆதாயத்திற்காக அவா்களை மற்றவா்கள் புகழ்வாா்கள்,உயா்த்தி பேசுவார்கள். ஆனால், கடுகளவுகூட எந்தவித பிரதிபலனும் எதிா்பாராமல் லட்சோபலட்சம் மக்கள் போற்றி புகழ்ந்து தங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும
courtesy fb