தினத்தந்தி -19/9/18
http://i63.tinypic.com/10yje69.jpg
Printable View
தினத்தந்தி -19/9/18
http://i63.tinypic.com/10yje69.jpg
மாலைமுரசு -19/9/18
http://i66.tinypic.com/xpoabo.jpg
http://i66.tinypic.com/29y5c41.jpg
மனிதநேயத்தின் மகான் . எளியவர்களை ஏழ்மையாக கூட கருதாத ஏழைப்பங்காளன். உயர் பதவியில் இருந்தாலும் பிறரை தொடுவதற்கு கூட கூச்சப்படும் நாம் இங்கே மனிதநேயத்தின் வடிவமாக ,.முதல்வராக அவர்களின் குறையை நிதானத்தோடு அறிந்து உதவி புரியும் நம் வள்ளலை போல் எவருமுண்டோ. இந்த அழகு உலகில் எந்த தலைவரிடமும் நாம் பார்த்ததுண்டா. மனிதநேய வள்ளலே. தங்கள் புகழ் பாடவே இந்த ஜென்மம் எனக்கு படைக்கப்பட்டுள்ளது. என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks Friends...
இந்த ஒப்பற்ற ஸ்டைல் உலகதிரையில் தோன்றி நடித்த எந்த நடிகராலும் இயற்கையாக வெள்ளித்திரையில் காணமுடியாது. தலைவரின் 100.வது காவியம் ஒளி விளக்கு ( டைட்டிலில்) பல வித உடையில் பல ஸ்டைலை அற்புதமாக படம் பார்க்கும் மக்களுக்கு ரசிகர்களுக்கு கண் இமை மூடாது வெள்ளித்திரையில் வழங்கியிருப்பார் நம் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் ஒளி விளக்கு திரைப்படத்தின் டைட்டில் காட்சி போல் எந்த நடிகருக்கும் அமைந்தது கிடையாது. திரையில் ( டைட்டிலில்).நம் தலைவர் நமக்கு அளித்த ஸ்டைல் போல் எந்த நடிகரும் அவரின் ரசிகர்களுக்கு அளித்தது கிடையாது. காலத்தை மிஞ்சி நிற்கும் காவியம் நம் இயற்கைதிலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒளி விளக்கு ஆகும். அக்காவியத்திற்கு பொன்விழா எடுத்து புகழ் சேர்ப்பது தான் நமது கடமையாகும். விழாவிற்கு உதவிய, ஓத்துழைப்பு தரும் தலைவரின் பக்தர்களுக்கு என்றும் உரிமைக்குரல் மாதஇதழ் கடமை பட்டுள்ளது. தலைவரின் 100 வது காவியத்தின் பொன்விழாவில் பங்கெடுத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். என்றும் கருணைவள்ளலின் வழியில் உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு....Thanks Friends...
"ஓளி விளக்கு" என்றும், இன்றும், நாளையும் மங்கா வசூல் பிரளயம் உண்டு பண்ணும் திகட்டாத மக்கள் திலகம் காவியம் இன்று 20-09-2018 ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்று 51 ம் வருடம் தொடக்கம் காண்பதற்கு நல்வாழ்த்துக்கள்...👌 👍
தலைவரின் 100.வது திரைப்படமான ஒளிவிளக்கு காவியத்திற்கு பொன்விழா எடுப்பது நமக்கு ( தலைவர் பக்தர்களுக்கு) பெருமையாகும். ஏன் என்றால் 1968.ல் தலைவர் நடித்த 7 வது காவியம் ஒளி விளக்கு. சென்னையில் (.குறிப்பாக. வடசென்னை பகுதியில்).பிராட்வே 1100 இருக்கைகள்,( 92 நாட்கள்) .அகஸ்தியா 1200 இருக்கைகள் (.31நாட்கள் )என இரண்டு மிகப்பெரிய அரங்கில் கிட்டத்தட்ட 31நாள் தினசரி 6 காட்சி
ஸ்பெஷல் காட்சிகள் என சாதனைகள்( 92 +31)மொத்தம் 123 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. 5 மிகப்பெரிய திரையரங்கில் வெளிவந்து (பிராட்வே அகஸ்தியா மிட்லண்ட் நுர்ஜகான் மகாலட்சுமி) சாதனை படைத்த திரைப்படமாகும். மதுரை நகரில் முதன் முறையாக 125 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மினாட்ஷியில் அரங்கில் 147 நாட்கள் ஓடி அவ்வாண்டில் அதிக நாள் ஓடிய படமாக திகழ்ந்தது. திருச்சி 116 நாள். கும்பகோணம் 100.நாள். கடல் கடந்த நாடான இலங்கையில் இரு பகுதியில் கொழும்பு கிராண்ட்பாஸ் அரங்கில் 169 நாட்களும்,யாழ்பாணம் ராஜா அரங்கில் 161 நாட்களும் மற்றும் பல பகுதியில் ஓடி 8 மாதத்தில் அன்றைய கட்டணத்தில் 15 லட்சத்தை வசூலாக கொடுத்தது. இலங்கை வரலாற்றில் தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மட்டும் தான் தொடர்ந்து 5 முறை வெளியாகி 5 முறையும் 100 நாளை கடந்துள்ளது. 1969,.1974,1979,1984, 1993 இப்படி இலங்கை நாட்டில் மிகப்பெரிய வெற்றியை படைத்த ஓரே காவியம் மக்கள்திலகத்தின் ஒளி விளக்கு ஒன்றே!. அதே போல் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒளி விளக்கு திரையிடப்பட்டு சாதனை புரிந்தது போல் எந்த நடிகர் மொத்தப்படங்களை கூட்டினாலும் இச் சாதனையை நெருக்க முடியாது. 1984,85,86,87,88,89,90 91,92,93, இந்த 10 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பலமுறை திரையிட்டு சுமார் 500 வாரங்கள் ஓடி கோடிகளை தந்த திரைக்காவியமாக திகழ்ந்து 1994 முதல் 2018 வரை (.24 ஆண்டுகளில்) திரையிட்ட அரங்குகள் 40.அதில் கிட்டத்தட்ட. 1000 ம் வாரங்கள் மீண்டும் மீண்டும் திரையிட்ட வாரங்களாகும். மகாலட்சுமி அரங்கில் மட்டும் கடந்த 12.ஆண்டுகளில் 15 முறை திரையிட்டு 22 வாரங்கள் ஓடி சாதனை. இப்படி யாராலும் ஒளி விளக்கு திரைப்பட.ம் ஓடியதை கணிக்கமுடியாது. கேரளா,கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரி மற்றும் பிற வெளிநாடுகள். இப்படி பற்பல சாதனையில் இன்றும் என்றும் வெள்ளித்திரையில் வெற்றி மேல் வெற்றியை பெற்று வரும் உலகத்திரையின் உண்மை நாயகனாம் நம் கலைவானிள் நல்முத்து பொன் முத்துக்கு பொன்விழா எடுத்து இன்னும் பல சாதனையை பொன்விழா மலரில் பதிய வைத்து எட்டாத வானில் ஒளி வீசும் நம் (.ஸ்ரீ ராமசந்திரனுக்கு) எட்டும் அளவில் விழா எடுத்து புகழாரம் சூட்டிமகிழ்வோம். வாருங்கள் நம் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உண்மை உள்ளங்களே.... என்றும் 81 ஆண்டுகள் திரையில் மின்னும் ஓரே ஒப்பற்ற கலைபிரம்மாவின் வழியில் உரிமைக்குரல் ஏடு... Thanks Friends...
இன்று முதல் (21/9/18) காவேரிப்பட்டினம் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) சரோஜா அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/dnm6jb.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .