-
-
( 26 )
பிள்ளைகளுக்குப்
புத்திமதி சொல்லும்
தகப்பனிடம்
பரிவும் இருக்கும்.
கண்டிப்பும் இருக்கும்.
"பதட்டத்தில் தவறான முடிவுக்குப் போகாதே.
தாய் சொல்லைக் கேள்."
இதை, நடிகர் திலகம் உச்சரிக்கும் போது கவனியுங்கள்.
இரண்டும் தெரியும்.
-
( 27 )
"ஊமையின்
குழந்தைக்கு
எது தாய்மொழி?"
-என்று நான் எழுதிய ஒரு
கவிதையை, வீட்டிலுள்ளோர்,
நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரும் மிகவும்
பாராட்ட...
ஒரு சாதாரணன்.. நானே
என்னைக் கொஞ்சம் கர்வமாய்
உணர்ந்திருக்கிறேன்.
கடவுள்... புலவனாய் மாறினால்
கர்வமிருக்காதா?
தருமியிடம் வந்து நிற்கும்
போது அவர் முகத்தில்
காட்டும் உணர்வுகளைக்
கவனியுங்கள்.
-
( 28 )
"அழைத்தது நான்தான்"
என்று நாகேஷிடம்
சொல்லும் போது
தன் கம்பீரத்தைத் தெரிவிக்கும்
பாங்கு தெரியும்.
-
( 29 )
தன்னை யாரென்று கேட்ட
தருமிக்கு, "சொற்சுவை,பொருட்
சுவை அனைத்தும் கூட்டி,
சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து,
செந்தமிழ்க் கவி பாடும்
புலவன் நான்" என்று பதில்
சொல்லுவார்.
ஒரு நல்ல தமிழ் வசனத்தை,
ஒரு நல்ல தமிழ்ப் பாடலாக,
அழகாக மாற்றியது
நடிகர் திலகம்தான்.
-
( 30 )
நான் கண்ணை மூடிக்கிட்டு
நின்னப்ப எனக்கு முன்னாடி
வந்து நின்னுருப்பீங்க.நான்
கவனிச்சிருக்க மாட்டேன்."
என்று நாகேஷ் சொல்ல...
"உண்மைதான். கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான்
தெரிவதில்லை." என்று
சொல்லுவார்.
தன்னை இறைவன் என்பதை
மறைமுகமாகத் தெரிவிக்கும்
வசனத்தை, குறுஞ்சிரிப்புடன்
நடிகர் திலகம் வெளிப்படுத்தும்
அழகே அழகு.
-
http://i1039.photobucket.com/albums/...psaccx7ucf.jpg
ராகவேந்திரா சார்
தங்களின் கருத்தும் படமும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.
கல்கி பத்திரிக்கைக்கும் பாராட்டுக்கள்.
-
ஆதவன் ரவி
தங்களின் பங்களிப்புகள் பாராட்டப்படவேண்டியவை.
வாழ்த்துக்கள்
-
( 31 )
"என்னிடம் வா. நான் பார்த்துக்
கொள்கிறேன்." என்று நடிகர்
திலகம் சொல்ல ...
"என்ன..எங்கெங்கே வீங்கியிருக்குதுன்னா?" என்று
நகைச்சுவையாய்க் கேட்க..
நடிகர் திலகம் சிரிக்கும்
அந்த "தெய்வீகச் சிரிப்பு"
சாதாரணமானதா.. ?
எத்தனை ஒத்திகை
பார்த்திருப்பார்கள்?
எப்படி ஒரு இயல்பு.. அந்த
சிரிப்பில்?
-
( 32 )
"நல்லா நடிக்கிறேய்யா நீ"
என்று நாகேஷ் சொல்ல..
"நாடகத்தையே நடத்துபவன்
நடிக்க முடியுமாப்பா?" என்று
நடிகர் திலகம் சிரித்தபடி
சொல்வதைப் பார்க்கையில்
நமக்குத் தோன்றுகிறது...
இவராலா நடிக்க முடியாது?