-
//Gopalji,
I am eagerly looking forward to the songs of 'Selviyin Selvan' 1968 - Ravichandran and Vijayakumari. It has beautiful songs like 'Konjava Konja Neyram', 'Naan Unggalai Keytkindreyn'. I can't recollect the other two songs which were in the record. For some strange reasons this film and its songs are not given prominence. Hope you will highlight about this film in your usual inimitable style. Regards. //
Dear Mahendraraj anna,
Even I am very keen to search and retrieve these songs from selviyin selvan. For some strange reasons ,this movie and songs are not traceable. K.V.M sirs ever reliable assistant Pugazhenthi did music for only two movies in Tamil. One is selviyin selvan other is Guru Dhakshinai. Konjava konja neram, Pennukku pennu ennadi,Naan ungalai ketkiren are fairly known songs. It is a Debut for Mohan Gandhiraman but due to mis casting (Ravi-Vijayakumari My God) this movie failed to draw the deserved attention. Ravi performance in some scenes are fabulous but not much takers for this reasonably good Film.
-
அருமையான பாடல்.. ஆனால்...
அக்காவும் தம்பியும் டூயட் ஆடுவதைப் போல....படமெடுத்தால்.. எப்படி சார் ஜனங்க தியேட்டருக்கு வந்திருப்பாங்க...
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே... என்று ரவி அழைக்க...
போ அந்த உலகத்தின் மறு பக்கம் அங்கே.. என்று ஜனங்கள் துரத்தி விட்டார்கள்...
ஹீரோயின் மட்டும் மாற்றி யிருந்தால் இந்தப் படம் அட்டகாசமாகப் பின்னியிருக்கும்...
https://www.youtube.com/watch?v=0tKctmioKX4
அதே ஓடும் நதி படத்தில் சூப்பர் பாடல்... சூப்பர் நடனம்...
https://www.youtube.com/watch?v=DyqNnDKWTjE
-
Thanks Gopali - looking forward eagerly!
-
எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
முதல் முதல் கலை நிலவுக்கு ,பாடும் நிலாவின்
ஆரம்பம் .
https://www.youtube.com/watch?v=hotr2MsnbLQ
பொட்டு வைத்த முகத்தோடு சேர்ந்து வெளியான ரெட்டை சகோதரன்.எம்.எஸ்.வியின் சிஷ்ய நண்பர் ,கலை நிலவுக்கும் பாடும் நிலவுக்கும் தந்த அதிசய பரிசு.
https://www.youtube.com/watch?v=BAlryz7Jl2Q
கலை நிலவு கதாநாயகன் . இயக்குனர் சிகரத்தின் முதல் வண்ணம்.அழகனும் ,அழகியும் மைனாக்களாக .
https://www.youtube.com/watch?v=fOen-ZcPRAY
-
இளைஞர்கள் மாற தொடங்கிய காலம். பழங்கால மூட தனங்களை திராவிடம் (எந்த காரணங்களுக்காக இருப்பினும்)முறியடிக்க, ஆங்கில படங்கள் counter culture என்பதை நிறுத்தி,என்ன காரணங்களாலோ வெறுப்புற்று இலக்கின்றி இருந்த அமெரிக்க இளைஞர்களை ஹிப்பிகளாக்கி தள்ள (வியட்நாம் போரும் ஒரு காரணம்) ,இந்திய ஆண்கள் கல்லூரிகளை எட்டி பார்த்தல் அதிகரிக்க, யுவதிகளும் தொடர, ஹிந்தி படங்களில் ஷம்மி போன்றோர் திலிப்-ராஜ்-தேவ் அனைவரையும் விழுங்கி தலையை ஆட்டி ,ரசிகர்களை பைத்தியமாக்க ,தமிழக இளைஞர்கள் பாவம்.
அப்பாவி தமிழ் இளைஞர்கள் ,பொறுப்பற்ற பெற்றோரால் சுமத்த பட்ட பொறுப்புகள் ஒரு புறம் (சொத்தும் ஒன்றும் தேறாது), பிற்பட்ட கலாசார மதிப்பீட்டில் ,செக்கு மாடுகளாய் உழன்று,பெண்களை
பார்ப்பதோ,பேசுவதோ பாவம் என்று பொய் கலாசார சுமைகள் என்று வெறுப்புற்றிருந்தோம்.
தமிழ் சினிமாக்களோ கேட்கவே வேண்டாம். ஒரு புறம் சோகம்,அதீத குடும்ப சுமை,அங்கங்கள் இழப்பு என்று ஒரு புறம், இன்னொரு புறம் நேர்மையற்ற தற்பெருமை,போர் அடிக்கும் பிரச்சாரம், பொய் நீதிகள் , முதுமை என்று மற்றொரு புறம் . ஹிந்தி படங்கள்
பார்க்கையில் பொறாமையாக இருக்கும். முன்னேறி கொண்டிருந்த சிலர் முதலுக்கே மோசம் ரகம்.(முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜன்,மெர்சி ஹோம் )
இந்நிலையில் ரவி சந்திரன் வருகையை பார்க்க வேண்டும்.10 முதல் 25 வயது படித்த ,படித்து கொண்டிருந்த இளைஞ,இளைஞிகளின் ஆறுதல்.சிவாஜியை ஒத்த ஸ்டைல், அழகு, இன்னொரு புறத்திலிருந்து entertainment quotient மட்டும் (குமரிப்பெண் ராமண்ணா உபயம்)எடுத்து, அதுவரை நாம் பார்க்காத liberated ,uninhibited execution .அதுதான் ரவி. இந்த திரியை இவ்வளவு ஈடுபாட்டோடு நான் செலுத்தும் அளவு உத்வேகம் பெற அந்த பதின்ம பருவத்தில் பெற்ற உற்சாகம்,புதுமை,கட்டற்ற இளமை துடிப்பு இவையே உந்து சக்தி.
ஷம்மியை பற்றி வட இந்தியர் பேசும் போது அவர் நடிப்பு திறனை குறிப்பதில்லை. அது தேவையும் இல்லை. உலகிலேயே ஒருவனே என உன்னதமான திறன் பெற்ற நடிகரை வைத்து நாம் அப்போது எடுத்தது பழனியும்,அன்பு கரங்களும் தானே?அது போல ரவியை பற்றி நாம் பேசும் போது இளமை,அழகு, நளினம் (Grace ),நடன திறமை,சண்டை காட்சிகளில் காட்டும் சுறுசுறுப்பு, ஸ்டைல் தடையற்ற உற்சாக சக்தி இவைகளை குறிக்க வேண்டும்.
சிங்கபூரு மச்சான், ,யாரடி வந்தார், கண்ணுக்கு தெரியாதா,பொம்பள ஒருத்தி,என்னடி ஆட்டம், ஜாவ்ரே ஜாவ்,விஸ்வநாதன் வேலை வேணும்,ராஜா கண்ணு போகாதடி,ஆடு டூ டூ ,இரவில் வந்த குருவிகளா,ஒத்தையடி பாதையிலே,நான் போட்டால் தெரியும் போடு ,வாலிப விருந்து,மணமகன் தேவை,தங்க சலங்கை,வாடா மச்சான், என்று பாருங்கள்.
ஒரு நடன பாங்கும்,ஒருங்கமைவும் கெடாமல் சுதந்திர வெளிப்பாடு,வேகம், உற்சாகம்,எதிர்பாராத கடின நடன வெளியீடு,என்று பின்னும் போது நமக்கு இளம் சிறகுகள் முளைத்து விட்ட உணர்வு.
இதை பின்னால் வந்த ரஜினி,கமல் கூட தர முடிந்ததில்லை.
தயாரிப்பாளருடன் ஒத்துழைக்காமல்,உடலை பராமரியாமல்,strategy இல்லாமல் கண்ட படி நடித்து,குடித்து, அரசியலில் பொடித்து,தடித்து தானே தனக்கு வெடி வைத்தவரின் பிற்கால பிரபல்யத்தை ஆராயாமல், அவர் உற்சாகமாக இருந்த நாட்களின் 1964 முதல் 1972 வரை பரவச உணர்வை சுகிப்போமே? அந்த நாட்களுக்கு சென்று சுவைத்து மீள்வோமே?
வண்ண வெள்ளிவிழா அழகனின் திரிக்கு வாருங்கள் ,எண்ணங்களை ,படங்களை,காட்சிகளை பகிருங்கள்.
-
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி -1966
அதுவரை Road movies என்ற genre ,hollywood காரர்களுக்கே ரொம்ப அரிது.(You only live twice,Persons in Hiding (1939??),They live by night,Gun Crazy,Breathless(1960),The Sadist(1964) போன்ற ஒரு சில.
இந்திய அளவில் Road movies முன்னோடி ,மெட்ராஸ் டு பாண்டிச்சேரியே .
விவித பாரதி என்ற வினோத banner இல் பீம்சிங் மேற்பார்வையில் திருமலை மகாலிங்கம் இயக்கிய இந்த படம், suspense ,thrill ,நகைச்சுவை ,romance ,புதுமை அத்தனையும் கொண்டு A ,B ,C அனைத்து தரப்பினரையும் ஒரு சேர சந்தோஷ படுத்திய படம்.கதை-வசனம் -உசிலை த. சோமநாதன் (சபாஷ்). மகா வெற்றி பெற்ற ஆரம்ப ரவிச்சந்திரன் படங்களில் ஒன்று (B .S .ரவிச்சந்திரன் என்று டைட்டில் ) .கொஞ்சம் சரோஜாதேவி சாயலடிக்கும் கன்னட நடிகை கல்பனாவின் ஒரே தமிழ் படம்.அழகன் ரவியின் இணையில் ஜொலிப்பார். ரவியும்,வில்லன் கள்ளபார்ட் நடராஜனும் பின்னுவார்கள்.நாகேஷ்,கருணாநிதி,பக்கோடா காதர் என்று செம காமெடி அணிவகுப்பு. படம் போவதே தெரியாது.
படத்தின் மற்றுமொரு சிறப்பு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி யின் இசை. பிரிந்த பின் இவரை ஆதரித்தவர்கள் முக்தா, மேகலா ,ராமண்ணா, பீம்சிங் போன்றோர். ராமமூர்த்தி ,கண்ணதாசனை தவிர்த்தே வந்தார். (இந்த படத்திற்கு 5 பாடலாசிரியர்கள்.)கண்ணதாசன் ,தன் சுயநல நோக்கிற்கு,இரட்டையர்களை பிரித்தார். (இதை பற்றி ஏற்கெனெவே, எழுதியுள்ளேன்)இந்த படத்தில் ஹாய் Friend dear க்கு என்ன, மலரை போன்ற,பயணம் எங்கே,என்ன என்ன நெஞ்சுக்குள்ளே என்ற ஜாலி பாடல்கள் ,ரவியின் நடன திறமை,சின்னி-சம்பத் choreography யில் மிளிரும்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அசைய விடாமல் அசத்திய இந்த வெற்றி படம் பாம்பே டு கோவா என்று எஸ்.ராமநாதன் (தமிழிலிருந்து ஹிந்தி ரீமேக் புகழ்,இருதுருவம் இயக்குனர்) ஹிந்தியில் எடுத்தார். அமிதாப் பின் ஆரம்ப கால சுமார் வெற்றி படங்களில் ஒன்று. (ஒரிஜினல் கிட்டே வர முடியவில்லை)இதில் பயணம் எங்கே பாடலின் ஹிந்தி பதிப்பான தேக்ஹா நா ஹைரெ சொஜானா என்ற பாடல் அந்த கால மாணவர்களின் விருப்பம். (ஜெய் ஜெய் சிவ சங்கர் இன்னொன்று.)
https://www.youtube.com/watch?v=OybNT11fIvg
https://www.youtube.com/watch?v=-Ju_SPo1tKQ
-
"அதே கண்கள்"-1967 (A Tribute to A.C.Thirulokchandar)
உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.
வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. (அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். படம் பார்க்கும்போது, எதாவது குகைக்குள் அவர் நுழையும் சமயம் "அண்ணே போகாதீங்க. அங்கே நம்பியார் ஒளிஞ்சிருக்கான்" என்று ஆடியன்ஸ் கத்துவார்களாம். அதுபோல நமக்கும் இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).
நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).
ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.
படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.
'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.
அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.
விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).
முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.
கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.
ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.
பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.
"வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.
திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.
A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
By Shardha.
-
-
'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்! Posted by: Manjula Published: Wednesday, June 15, 2016, 15:33 [IST]
சென்னை:பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இயக்குநர் மிஷ்கின் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் ரவிச்சந்திரன். இவரது பேத்தி தான்யா தற்போது மாடலிங் செய்து வருகிறார். இந்நிலையில் தான்யாவை ஒரு புகைப்படத்தில் பார்த்த மிஷ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். மிஷ்கின் நடித்து வரும் சவரக்கத்தி படத்திற்குப் பின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார். இந்த 2 படங்களுக்குப் பின் தான்யா நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். நாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர். ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாத்தா போல பேத்தியும் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ரவியின்(இரு வேடங்கள்) படங்களில் சுவாரஸ்யமான படங்களில் ஒன்று பணக்கார பிள்ளை. என் நண்பர் மகேந்திரன் கதை,கே .ஆர்.பாலன் தயாரிப்பு. செம வெற்றி படம். இரட்டை நாயகியர்.
ரவி அரசியல் என்ற படு குழியில் தேவையில்லாமல் நேரடியாக
விழுந்த படம். நமது அரசு,நமது நாடு என்ற திராவிட முழக்க பாடல்.
இரட்டையரில் ஒரு நாயகி ஜோதி லட்சுமி.
பட்டம் விட்டது போலெ.டி.எம்.எஸ் -எல்.ஆர்.ஈ .சுப்பையா நாய்டு இசை.
https://www.youtube.com/watch?v=Pdj8wXyPJRI