-
இளையதிலகத்தின் பட வரிசை.
06.சின்ன மாப்பிள்ளை.
14.01.93
http://uploads.tapatalk-cdn.com/2016...dba4e81eb6.jpg
இளையதிலகம் பிரபு
சுகன்யா, ராதாரவி, விசு, சிவரஞ்சனி, வினு சக்கரவர்த்தி, ஆனந்த், மற்றும் பலர்.
இசை :இளையராஜா
இயக்கம் :சந்தான பாரதி
ஆளவந்தார்(ராதாரவி)ஒருமிராசுதாரர்.தன்னை விட வசதி படைத்தகுடும்பத்தை சேர்ந்த மணமகனுக்குத்தான் தன் மகளை திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.அதனால் தன்னை விட வசதி குறைவானவர்கள் பெண் கேட்டு வரும்போது அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.இப்படி அவமானப்படும் தரகர்களில் ஒருவர் அம்பலவாணன்( விசு.)இந்தளவுக்கு பண திமிறும், அகந்தையும் கொண்ட மிராசுதாரருக்கு சரியான பாடம் புகட்ட நினைக்கிறார்.அந்த எண்ணத்தில் அவர் இருக்கு போது அவருக்கு அறிமுகமாகிறார் பிரபு.அவர் பஸ்நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்பவர்.
இவரை பெரும் பணக்காரர் என்று கூறி சில ஏமாற்றுத்தனங்கள் செய்து ஆளவந்தாரின் மூத்த மகளான ஜானகிக்கு (சுகன்யா) திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
பேருந்து நிலையத்தில் தன் மாப்பிள்ளை போர்ட்டராக வேலை செய்வதை பார்த்து விடுகிறார் ஆளவந்தார்.மனைவியிடம அது தான் அல்ல, உதவாக்கரை தம்பிதான் போர்ட்டர் வேலைசெய்கிறான் என்றுசமாளிக்கிறார்.ஆனால் அது வேறு பிரச்சினைகளை கொண்டு வருகிறது.அவற்றை சமாளிக்க ஒவ்வொரு பொய்யாக சொல்லுகிறார்.இறுதியில் உண்மை தெரிகிறது.ஆளவந்தாரும், ஜானகியும் அவரை ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதுதான் முடிவு
***
விஸ்வநாதன் -ராமமூர்த்தி என்று அறிவிக்கப்பட்டு சின்ன மாப்பிள்ளை என்று வெளியான படம் .
ஆபாசம் இல்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத முழுநீள காமெடி படம்.
இளையதிலகத்தின் சிறப்பான நடிப்பை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காணலாம்.போர்ட்டராக அவர் பஸ் நிலையத்தில் வேலை செய்யும் காட்சிகளில் நிஜ போர்ட்டராகவே வாழ்ந்திருப்பார்.
அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக்கட்டி நடப்பதும், காது கிழிய விசில் அடிப்பதும், பஸ்ஸின் மீது விரைந்து ஏறுவதும், துண்டை தலையில் கட்டி லக்கேஜ்களை தூக்கி வருவதுமாயும் சுமை தூக்கிகளின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்துள்ளார்.
காமெடி படமென்றாலும் பாடல்காட்சிகள், சண்டைக்காட்சிகளும் அருமையாக அமைந்த படம் இது.
காதோரம் லோலாக்கு பாடல் செம ஹிட் பாடல்.
காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல,
கண்மணிக்குள் சின்னச் சின்ன
பாடல்களும் கேட்க இனியவை.
படத்தில் இடம் பெறாத பாடல்
"வானம் வாழ்த்திட"பாடல்.
சின்ன மாப்பிள்ளை பிரபுவின் திரைப்பாதையை மேலும் சிறப்பாக்கிய படம்.
100நாள் வெற்றிப்படம்.
-
-
-
-
இளையதிலகத்தின் பட வரிசை.
97.உத்தமராசா
http://uploads.tapatalk-cdn.com/2016...6725b63ac8.jpg
இப்படத்தை பொறுத்தவரை முதலில் பேசப்படுவது பிரபுவின் சிகை அலங்காரம்.அந்த வித்தியாசமான கெட்டப் எதன் பாதிப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் பிரபுவின் பாணி தனி.அந்த கேரக்டருக்கு தான் எவ்வளவு பொருத்தமானவர் என்பதை நிரூபித்து இருப்பார்.சகல அம்சங்களும் சரியான விகிதத்தில் அமைந்த படம்.
இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று உடுமலை திருமூர்த்தி மலை கோவிலில் நடைபெற்றது.அப்போது எதிர் பாராத விதமாக பிரபுவின் காலில் பலமாக அடிபட்டு விட்டது.அந்த காட்சி படத்தில் ஸ்லோமோஷனில் காட்டப்படும்.சில நாட்கள் ஓய்வுக்கு பின் வலியுடனே மீதி படத்தையும் நடித்து முடித்தார்.படத்தின் சில காட்சிகளில் அவர் நடையை பார்த்தால் இது தெரியும்.
பாடல்கள்;
நல்ல நேரம் எதைத் தொட்டாலும் பொன்னாகுது
SPBயின் குரலில் டைட்டில் சாங் இது.இதில் வரும், கட்ட பொம்மன் வாரிசாக கர்ஜிக்க வந்தவன் யாரு,
போன்ற அவரின் புகழ் பாடும் வரிகளும் ரசிகர்களை குஷிப்படுத்தும்.
அடுத்து,
உன்னை மாத்தி காட்டத்தான், பாடல்.
மூன்றாவதாக,
பாவலரு பாட்டு இது பண்ணைபுர பாட்டு,
இதுவும் அருமையாக அமைந்த பாடல்.
அடுத்து,
மாமனோட மனசு மல்லிகைப்பூ போலே, பாடல்.
இது சூப்பர் ஹிட் பாடல்.
அடுத்து ஒரு சிறிய பாடல்,
எண்ணம்போலே வாழ்க்கை,
அருமையான மெலடி இது.
கடைசியாக ஒரு அம்மன் பாடல்.
படத்தின் சிறப்புக்கள்:
பிரபுவின் கம்பீரமான உருவம்+அதற்கேற்ற நடிப்பு, மற்றும் மனோரமா, குஷ்பூ, ராதா ரவி கேரக்டர்களின் வடிவமைப்பு, இளையராஜாவின் பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, காமெடி, திரைக்கதை அமைப்பு, சீரான இயக்கம்.
100 நாள் வெற்றிப்படம்.
-
-
-
இளையதிலகத்தின் பட வரிசை.
98.தர்மசீலன்.
16.03.93
http://uploads.tapatalk-cdn.com/2016...5d86cf35a7.jpg
இந்து , முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதங்களை ஒன்றினைத்து திரையாக்கப்பட்ட பாவமன்னிப்பு காவியத்திற்கு பின் நீண்ட காலமாய் மூன்று மதங்களை மையப்படுத்தி எந்த திரைப்படமும் வெளிவரவில்லை.நீண்ட இடைவெளிக்கு பின் மூன்று மதங்களை மையப்படுத்திய படம் இந்த தர்மசீலன்.
அது காவியம் என்றாலும் இதுவோஆக்ஷன் கதை, காலத்திற்கு தகுந்தவாறு வித்தியாசமாக எடுக்கப்பட்ட திரைக்கதை.
பிரபுவின் இரட்டை வேட நடிப்பில் உருவான படம்.போலீஸ் அதிகாரியாக கம்பீரமான தோற்றத்தில் அட்டகாசப்படுத்திய படம்.வில்லன் சலீம்கவுசும் இன்ஸ்பெக்டர் பிரபுவும் மோதும் காட்சிகள் மிரட்டலான காட்சிகள்.ரயில் நிலைய சண்டை, அதைத் தொடர்ந்து பிரபு கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடுதல், இறக்கும் தருவாயிலும் நெப்போலியனிடம் உருகும் காட்சிகள் என இன்ஷ்பெக்டர் பிரபுவின் நடிப்பு படத்திற்கு அஸ்திவாரம்.
வில்லனாக வெற்றிவிழா புகழ் சலீம் கவுஸ் படு அசத்தல்.அருமையான கேரக்டர்.பிணத்தை வைத்துக் கொண்டு அவர் பேசும் காட்சிகளும், உண்மையிலேயே பீதியை ஏற்படுத்தும் நடிப்பு.
படத்தின் தொழில் நுட்பங்கள் வெகு நேர்த்தி.ரயில் பாடல், ரயில் சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு வித்தியாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும். மரவீடு செட்டும் பாராட்டப்பட வேண்டிய கலை வேலைப்பாடு.
குழப்பம் ஏற்படுத்தாமல் திரைக்கதையை தெளிவாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு சென்ற இயக்குனரை பாராட்டலாம்.கடைசிவரை சஸ்பென்ஷ், திகிலாக படத்தின் திரைக்கதை அமைந்திருப்பது சிறப்பு.
மகனாக வரும் பிரபுவின் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
கிண்ணாரம் கிண்ணாரம் அருமையான மெல்லிசை பாடல்.
நாகூர் அனிபா பாடிய
" எங்குமுள்ள அல்லா" படத்தின் சிறப்பு பாடல்.SPB யும் இணைந்து பாடிய இப்பாடலும் அருமையான ஒன்று.
-
-