-
திருச்சி கெய்ட்டியில் தாய்மார்கள் ஆதரவோடு நல்ல வசூலுடன் வெற்றி நடை போடுகிறது வாழ்க்கை சற்று இக்காவியத்தின் வரலாற்று சாதனையை பின்னோக்கி பார்ப்போம் --14/04/1984 வெளியான இப்படம் திருச்சி மாரிஸ் ராக் திரையில் 48 நாட்கள் மதியம் மற்றும் மாலை காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் (அந்த நேரம் சில கெடுபிடிகள் காரணமாக மக்கள் இரவு காட்சிக்கு அதிகம் வருவது குறைவு )--இப்படம் மாரிஸ் காம்ப்ளெக்ஸில் 84 நாட்கள் ஓடியது -- இதற்கு போட்டியாக வெளிவந்த(20/04/1984) ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு ரம்பா தியேட்டரில் 49 நாட்கள் ஓடியது --தலைமுறை கடந்து சாதனை படைத்த ஒரே நடிகர் சிங்கத்தமிழன் சிவாஜி
-
நடிகர் திலகத்தின் படங்கள் செய்யும் சாதனையை நாங்கள் வெளிப்படுத்தினால்
தங்களது படங்களின் சாதனைகள் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குதரம் இறங்கிவிடுவதனால்
குய்யோ முறையோ என கூக்குரல் இடுவது பொய்யுரைப்பது கண்டமேனிக்கு திட்டுவது
இல்லாதபொல்லாதவற்றை எழுதுவது நடிகர் திலகத்தின் பட போஸ்ட்டர்களை கிழிப்பது
சாணி அடிப்பது மற்றும் பலவற்றை ஸ்டணட் நடிகரின் ரசிகர்கள் அந்தக்காலத்தில்
இருந்தே செய்து வருகிறார்கள் .என்ன செய்தும் என்ன பிரயோசனம் நடிகர் திலகத்தின் சாதனையை
இல்லாமல் செய்ய முடிந்ததா? அல்லது மறைக்கத்தான் முடிந்ததா?
-
சிவாஜி கணேசன் அவர்களைப்பற்றி
தரக்குறைவான விமர்சனம், அவதூறுப்பிரச்சாரம் போன்றவற்றை
தான் நல்லபிள்ளைபோல நடித்துக்கொண்டு ஸ்டண்ட் நடிகர்
கைக்கூலிகளை வைத்து செயல்படுத்திவந்தார்.
அப்படியான கைக்கூலிகளின் செயல்பாடு இன்றும் தொடர்கிறது.
-
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)
தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?
தொடர்ந்து பார்ப்போம்....
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
அந்தநேரத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் திருமணத்தன்று வேறு ஒரு சம்பவமும் நடந்தது,
ஸ்டண்ட் நடிகர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது
உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசத்தெரியாத நடிகர் திலகம் அவர்கள் அது பற்றி அன்றைய அவரது
திருமண நாளில் பேச்சு வந்தபொழுது ஸ்டண்ட் நடிகரை பார்த்து அண்ணே உங்களுக்கு கோட்டு சூட்டு போட்டு நடிக்கிறதைவிட
வாள் வீச்சுத்தான் எடுபடும் என்று மனதில் ஒளிவு மறைவு இல்லாம வஞ்சகம் எதுவுமின்றி கூறிவிட்டார்.
அந்தக்கூற்று வஞ்சகம் பொறாமை கொண்ட ஸ்டண்ட் நடிகரின் மனதில் பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது,
இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று வன்மத்துடன் கறுவிக்கொண்டார்.
தொடரும்.......
-
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...77&oe=5DE5950B
நன்றி Vijiya Raj Kumar(முகநூல்)
-
படித்ததில் பிடித்தது.ஒரு சகோதரரின் ஆதங்கம்பாரதியாரும் பாரதிதாசனும் தனி நபரை புகழ்ந்து கவிதை பாட மாட்டார்கள். பாரதிக்கு எட்டையபுரம் மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேலை தந்தார். ஆனால் பாரதி அந்த வேலையை வேண்டாம் என உதறி தள்ளி விட்டு தமிழ், தாய்நாடு பற்றி பாடினார். காந்தியைப் பற்றி பாடுவது வேறு விஷயம். அவர் தியாகி. அதே மாதிரி பாரதிதாசனும். ஆனால் அவரே 1959 ஏப்ரல் 29ந் தேதி குயில் ஏட்டில் சிவாஜியின் கொடை செய்தியை பாராட்டி கவிதை பாடியுள்ளார். 1959லியே காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ...ஒரு லட்சமும் மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூ இரண்டரை லட்சமும் வழங்கிய செய்தி அப்பாடலின் மைய கரு. இக்கவிதையை கோவிந்தராஜுலு பாலகிருஷ்ணன் என்ற சிவாஜி ரசிகர் யூடியூப்பில் பதிவிட்டு அதைப்பார்த்து தான் அதை நான் சிவாஜியின் கொடை செய்தியில் குறிப்பிட்டுள்ளேன். நான் இக்கவிதையை எல்லோரது கவனத்திற்கு கொண்டு வந்த அந்த ரசிகரை பாராட்டிய போது அவர் " சார், நீங்கள் சிவாஜி பற்றி நிறைய எழுதுறீங்க. உங்கள் பணி பெரியது. அதோடு ஒப்பிடுகையில் நான் ஒன்றும் செய்யவில்லை " என அடக்கமாக பதில் தந்தார். நானும்" ஐயா, சிவாஜி நிறைய செய்துள்ளார் *. அதை உலகறிய செய்தல் என் கடமை " என பதில் போட்டேன். நீங்களும் அந்த ரசிகர் பெயரை யூடியூப்பில் பார்த்திருக்க கூடும்.
இது நிற்க.
சிவாஜி 1959 லேயே நமக்கு தெரிய ரூபாய் மூன்றரை லட்சம் தந்துள்ளார். அன்று ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்று மூன்று கோடிக்கு போகிறதெனில் சிவாஜி தந்த 3.5 லட்சத்தின் பண மதிப்பு இன்றைய காலத்தில் என்ன என்பதை கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள். இது ஒரு துளிதான். ஆனால் அவர் செய்த அத்தனையையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? எதற்காக சொல்கிறேன் எனில் பாரதிதாசன் கவிதை பாடிய ஆதார செய்தியை எவனாவது மறுத்தால் அவனைவிட முட்டாள் உலகில் எவனும் இல்லை . நன்றி கெட்ட நாய்கள். சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் அவரை தோற்கடித்த நன்றி கெட்ட நாய்கள் வாழும் மாநிலம் தமிழகம். தகுதி மிக்க தமிழனை ஏற்காதவன் தமிழன். எண்ணிக்கையில் எட்டப்பர்கள் தமிழகத்தில் அதிகம். ஜனநாயகத்தில் தலைகள் எண்ணப்படுவதால் அது வெற்றியாகிறது. தலைக்குள் மூளை உள்ளதா என எவனும் பார்ப்பதில்லை. இது ஆதங்கத்தின் வெளிப்பாடு. சரிதானே?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...11&oe=5DCB8BAC
நன்றி Vijiya Raj Kumar(முகநூல்)
-
-
-
ஆவணப் பொக்கிஷங்கள்
மிக அரிய ஆவணம்
'காத்தவராயன்' படப்பிடிப்பில்.
... இயக்குனர் ராமண்ணா மற்றும் ஓ.ஏ.கே. தேவருடன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...7b&oe=5DE3D046
நன்றி Vasu Devan (முகநூல்)
-