-
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவருக்கும் மற்றொரு வேண்டுகோள்.
இதில் ஒரு திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் அளிக்கும் போது அது சம்பந்தப் பட்ட மேற்தகவல்கள் பதிவிடுவது, மற்றும் ஐயப்பாடுகள், பாடல்கள் போன்றவற்றைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வது உள்பட அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் முடிந்த பிறகு அடுத்த திரைப்படத்தினை நாம் எடுத்துக் கொள்வோமானால் நன்றாக இருக்கும். எனவே ஒவ்வொரு படத்திற்கும் பதிவிட்டதிலிருந்து இரு தினங்கள் வரை நாம் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்வோம். அதனுடன் அப்படத்தை முடித்துக் கொண்டு அடுத்த படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கு செல்லலாம்.
தங்களுடைய மேலான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
-
டியர் வாசு சார்,
நடிகர்திலகம் தன் திரைப்படம் பற்றிய ஒரு வரி விமர்சனம் பற்றிய பதிவு அறிய ஒன்று! தொடருங்கள்.
-
இன்றைய (12.2.13)மாலை மலர் நாளிதழில் வந்துள்ள தகவல் : வசந்தமாளிகை திரை காவியம் மார்ச் 1 அன்று 80 தியேட்டர்களில் வெளியாகிறது !!! நாம் அடுத்த கொண்டாடத்திற்கு தயாராவோம்.
-
அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு
உலகம் பலவிதம் படப்பதிவுகளுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி...
இத்திரியின் வெற்றிக்கு என் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
-
Sivaji Ganesan Filmography Series
23. Mangaiyar Thilagam மங்கையர் திலகம்
http://i1146.photobucket.com/albums/...ps0d0f98f9.jpg
வெளியான நாள் 26.08.1955
தயாரிப்பு – வி.சி.பிள்ளை அளிக்கும் வைத்யா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – வாசு
எஸ்.வி.சுப்பையா – கருணாகரன்
கே.ஏ.தங்கவேலு – கலாமணி
கே.சாரங்க பாணி – ராவ் பகதூர்
நாராயண பிள்ளை – குஞ்சித பாதம்
ஏ.டி.கல்யாணம் – உபாத்தியாயர்
மாஸ்டர் பாஜி – சின்ன வாசு
மாஸ்டர் ரவி – குழந்தை ரவி
பத்மினி – சுலோசனா
ராகினி – நீலா
எம்.என்.ராஜம் – பிரபா
கமலம் – அகிலாண்டம்
கே.ஆர்.செல்லம் – மங்களம்
மற்றும் பலர்
தயாரிப்பாளர் – ஸ்ரீபாத சங்கர்
ஸினாரியோ மற்றும் டைரக்ஷன் – பிரசாத்
ஸ்டூடியோ வாஹினி
வெஸ்டெர்ன் எலெக்ட்ரிக் ஒலி முறையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கதை – வஹிநிஞ்சியா பகாடியா
வசனம் – வலம்புரி சோமநாதன், ஜி.ராமகிருஷ்ணன், டி. நாகலிங்கம்
பாடல்கள் – மருதகாசி, கண்ணதாசன், புரட்சிதாசன்
அடங்காபிடாரி நாடகம் – உடுமலை நாராயண கவி
சங்கீத டைரக்ஷன் - - எஸ். தஷிணாமூர்த்தி
நடன அமைப்பு – ஜெய் சங்கர்
ஒளிப்பதிவு டைரக்ஷன் – பி.எல்.ராய்
ஒளிப்பதிவாளர் – ஹெச்.எஸ். வேணு
உதவி – பி.என்.சுந்தரம்
ஸ்டில்ஸ் – ஆர்.நாகராஜ ராவ்
ஒலிப்பதிவு டைரக்ஷன் – ஏ.கிருஷ்ணமூர்த்தி
ஒலிப்பதிவாளர் – கே.விஸ்வநாதன்
உதவி – நரசிம்ம மூர்த்தி, ராமன்
அரங்க நிர்மாணம் – சி.குப்புசாமி நாயுடு, கே.ஸ்ரீநிவாசன்
காட்சி அலங்காரம் – கே.எஸ்.என். மூர்த்தி
மேக்கப் – ஹரிபாபு, கே.ஏ.நடராஜன், ஏ.ராம்தாஸ்
சிகை அமைப்புகள் – ரேபா ராவ்
உடைகள் – சி.கே கண்ணன்
பிராசஸிங் – எஸ்.ரங்கநாதன்
லேபரட்டரி – விஜயா லேபரட்டரி
எடிட்டிங் – என்.எம்.சங்கர்
செட் நிர்வாகம் – எஸ்.ராமாநுஜம், சி.எஸ். பிரகாஷ் ராவ்
ஸ்டூடியோ நிர்வாகம் – விஜயா புரொடக்ஷன்ஸ்
ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் – சி.எஸ்.ஐயங்கார், எஸ்.கங்காதரன்
உதவி டைரக்ஷன் – ஜி.ராமகிருஷ்ணன், என்.ஸ்ரீகாந்த்
பாடல்கள்
1. அன்பு என்றும் அணைந்திடாத தீபமாய் – ஏ. மருதகாசி - கே.ஜமுனா ராணி குழு
2. கண்டு கொண்டேன் – கண்ணதாசன் - ஜிக்கி
3. அடங்காப் பிடாரி இசை நாடகம் – கெட்ட பெண்மணி – உடுமலை நாராயண கவி – டி.வி.ரத்னம், எஸ்.சி.கிருஷ்ணன், வடிவாம்பாள், காந்தா, செல்லமுத்து, பொன்னுசாமி,
4. புரிந்து கொள்ள வில்லை – ஏ.மருதகாசி – ஏ.ரத்னமாலா, எஸ்.சி.கிருஷ்ணன்
5. நீல வண்ணக் கண்ணா வாடா – ஏ.மருதகாசி – ஆர்.பாலசரஸ்வதி
6. தேவா சதா சோகத் திருநாளா – கண்ணதாசன் – பி.லீலா
7. நீ வரவில்லை யெனில் – மருதகாசி - சத்யம்
பிற்சேர்க்கை - 24.02.2013
மங்கையர் திலகம் சென்னையில் வெளியான திரையரங்குகள் - சித்ரா, பிரபாத், சரஸ்வதி
100 நாட்கள் ஓடிய திரையரங்கு - சேலம் ஓரியண்டல் - 100 நாட்கள்
-
மங்கையர் திலகம் படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்களை 15ம் தேதி வரை வைத்துக் கொள்வோம். 16ம் தேதி அடுத்த படத்தின் தகவல்கள் பதியப் படும்.
இது ஒரு வரையறையாக இருந்தால் முழுமையடையும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
-
-
-
-
http://i1087.photobucket.com/albums/...9b1eed6979.jpghttp://i.ytimg.com/vi/sfDA-xwvAgU/0.jpg
நடிகர் திலகத்திற்கு சுப்பையா அண்ணனாகவும், பத்மினி அண்ணியாகவும் நடித்த காவியம். செண்டிமெண்ட் நிறைந்த குடும்பக்கதை. கணவரின் சிறுவயது தம்பியை தன் சொந்த மகனாக எண்ணி வளர்த்த அன்பான அண்ணி, அண்ணியையே தெய்வமாக நினைத்து பூஜிக்கும் வாசு(நடிகர் திலகம்) இவர்களுக்கிடையே மிளிரும் பாச உறவுகளை பறை சாற்றிய படம்.
இப்படத்தின் மூலம் தாய்க்குலங்களின் நீங்காத இடத்தை பிடித்தார் பத்மினி. அதுவரை நாட்டியத் தாரகையாகவும், பின் கதாநாயகியாகவும் வலம் வந்த அவர், நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்திருந்த அவர், இப்படத்தில் நடிகர் திலகத்தின் அண்ணியாக சவாலான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்து நீங்காப் புகழ் பெற்றார். அற்புதமான குடும்பக் காவியம்.
நடிகர் திலகத்திற்கு இப்படத்தில் வாசு என்று பெயர். அந்தப் பெருமை ஒன்று போதாதா எனக்கு! அதனாலேயே மறக்க முடியாத படம்