Another similar one with Singapura minor :Quote:
Originally Posted by saradhaa_sn
Minor : Yov vaithy, Nagapattinathila...
Vai : Enna, puyal varudha - theriyume, adhan varusha varusham varudhey, adukkenna ??
Printable View
Another similar one with Singapura minor :Quote:
Originally Posted by saradhaa_sn
Minor : Yov vaithy, Nagapattinathila...
Vai : Enna, puyal varudha - theriyume, adhan varusha varusham varudhey, adukkenna ??
Vanakkam Rangan Sir
That dialogue of yours will be initiated by Vadivu no ? :roll:
Another Gem from vaithy as he tries to get inside auditorium to see the dance of Mohana.
Gatekeeper: Yov, nilluya enga pora ulla nee
Vaithy : ( looking up and down) yei, naan yaar theriumaa?
GK: ( Konjam thayakatoda) theriyaadhu
Vaithy: Naan Maharaaja kooda vandhavan
GK: (with atmost meekness) sorry sie , neenga ulla ponga
Vaithy : (victorius) seri, enna thaduthu niruthinadha yaar kittayum sollaadha, unakku vela poidum
இதுக்கு நடுவுல இன்னொரு வசனமும் வரும்.Quote:
Originally Posted by saradhaa_sn
காலைல எழுந்ததும் பூபாளம், ராத்திரி படுக்கும் போது நீலாம்பரி இதெல்லாம் கூட உனக்கு தெரியாதா
avanga thurathum podhu odi poittu ange irundhe thirumbi thirumbi gudhippar. NT ennaya nu kettadhum , en thundu en thundu sollra azhage thani. Simply Nagesh style
Tks BG Sir !! :)Quote:
Originally Posted by Billgates
Engey neenga idhai kekkama poiduveengalonnu ninaichen. Very good that a "Theevira NT (University of acting) rasigar like you has pointed out this. :ty:
திரு ஜோ அவர்கள் எனது அபிமான படங்களின் ஒன்றான நெஞ்சிருக்கும் வரை படத்தைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி சில சம்பவங்கள். இடம் சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில். நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வீ. கோபாலகிருஷ்ணன். பாடல் காட்சி. கூட்டமான கூட்டம். அத்தனையும் மெய் மறந்து லயித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் தடுமாறுகிறார். அவர் கோபாலகிருஷ்ணன். மற்ற அனைத்துக் காட்சிகளிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர் அப்பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சில முறை அவரால் படப்பிடிப்பு டேக் வாங்கியது என்றால் சில முறை ரசிகர்கள் மற்றும் பொது மக்களால் சில டேக் வாங்கியது. இருந்தாலும் நடிகர் திலகத்தின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் அமைதி காத்தனர். அந்த படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தது. அந்த ஸ்டைலான நடையை நேரில் பார்க்க ரசிகர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செஇதிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன். இது எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. மற்றபடி அந்த படத்தில் சிறீதர் அவர்கள் சிறிது தடுமாற்றம் அடைந்தார் என்று தோன்றுவது இயற்கையே. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.Quote:
Originally Posted by joe
ராகவேந்திரன்.
ஜோ,
நெஞ்சிருக்கும் வரை படத்தை பொறுத்தவரை நீங்கள் சொல்வது உண்மையே. அதாவது ஒரு உயர்ந்த தளத்தில். தமிழில் அபூர்வமாகவே நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு யதார்த்தமான தளத்தில் பயணிக்கக்கூடிய இந்த படம் இடைவேளைக்கு பிறகு மாறுபட்டு சஞ்சரிக்க தொடங்கும். இதை ஸ்ரீதர் அவர்களே வருத்தப்பட்டு எழுதியிருந்தார். " அதுவரை என் சொந்த கண்ணோட்டத்தின்படி எடுத்து வந்த நான் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சியமைப்புகளை விநியோகஸ்தர்கள் விருப்பப்படி மாற்றாமல் இருந்திருந்தால் ----" என்று வாக்கியத்தை முழுமையாக்காமல் விட்டிருந்தார். ஆனால் முத்துராமனின் பாத்திர படைப்பை பற்றிய உங்கள் பார்வையுடன் முற்றிலுமாக ஒத்து போக முடியவில்லை.
நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால் தன்னுடன் பழகிய நண்பனையும் நேசித்த காதலியையும் எப்படி புரிந்து கொள்ளமால் இப்படி சந்தேகப்படலாம். அது அந்த பாத்திர படைப்பை ஊனப்படுத்தி விடுகிறது என்பது உங்கள் வாதம். கொஞ்சம் யோசித்தால் அது வெளியே இருந்து பார்க்கும் ஒரு மூன்றாவது மனிதன் கருத்தாக உங்களுக்கு தோன்றவில்லையா? என்னதான் நட்பின் புனிதமும் காதலின் ஆழமும் தெரிந்தவனாக இருந்தாலும் தனக்கு என்று வரும் போது அவன் மனதில் ஒரு சந்தேகம் தோன்றுவது மனித இயல்பு, பலவீனம். மனோதத்துவ முறையில் பார்த்தாலும் முதலில் பழகும் போது தன் காதல் வெற்றி பெறுமா என்ற மனோநிலையிலே இருப்பவன் பெங்களுர் சென்று வேலை கிடைத்தவுடன் தான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் என்று தன் மனதில் அந்த பெண் மேல் ஒரு உரிமையை ஏற்படுத்திகொள்கிறான். தனக்கு சொந்தமான பொருளை வேறொருவன் உரிமை கொண்டாடி விட்டான் என்று கேள்விப்பட்ட போது ஒரு சராசரி ஆணாகத்தான் அவனால் சிந்திக்க முடிகிறது.
மேலும் அவன் அந்த வீட்டை விட்டு கிளம்பும்போது காதலியின் தந்தை (வி.எஸ்.ராகவன்) மற்றும் நண்பன் பீட்டர் (வி.கோபாலகிருஷ்ணன்) உயிரோடு இருக்கின்றனர். ஆனால் திரும்பி வரும் போது காதலியின் தந்தையும் இல்லை, நண்பனும் இல்லை. நடிகர் திலகமும் விஜயாவும் தனியாக அந்த வீட்டில் வசிக்கின்றனர் என்பதை கேள்விப்படும்போதும் நேரில் பார்க்கும் போதும் அவனால் நிதானமாக சிந்திக்க முடியவில்லை. சந்தேகம் அவனை ஆட்கொண்டு விடுகிறது.
ஜோ, நாம் வேறொன்றையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளே மாறி போன சூழ்நிலையில்,ஆண் பெண் நட்பு பற்றிய கண்ணோட்டங்களும் மாறுதல்கள் அடைந்திருக்கின்றன. படம் நடக்கும் கால கட்டம் 1966 -67. இன்றைய நமது சமூக பார்வையோடு அன்றைய மனிதர்களை எடை போடுவது என்பதும் முழுக்க சரியாக இருக்காது என்பது என் எண்ணம்.
ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். முத்துராமன் விஜயாவிடமோ நண்பனிடமோ பேசி தெளிவுபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதே அது. ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச எல்லோராலும் முடியாது. மேலும் பேசி விட்டால் கதை முடிந்து விடும்.
அன்புடன்
PS: ஜோ படத்தை பற்றி உங்கள் பார்வையை மேலும் தொடருங்கள்
Groucho, come out with a post atleast for this, one of your top drawer favourites.
டியர் முரளி.
ஜோ அவர்கள் முத்துராமனின் பாத்திரப்படைப்பின் குறைபாடுபற்றிக் குறிப்பிட்டபோது, அவருடைய கோணத்தில் அது சரியென்று பட்டது. உங்கள் விளக்கம் படித்தபின் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. எனினும், தான் அடைய விரும்பிய ஒருத்தியோடு திருட்டுத்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாக தன்னால் சந்தேகிக்கப்படும் தன் நண்பன், மனமுவந்து அவளைத் தனக்கு வலிய வந்து திருமணம் செய்து வைக்க நினைப்பானா, அத்துடன் அதற்காக வாதாடுவானா என்று முத்துராமன் ஏற்ற பாத்திரம் நினைத்திருக்க வேண்டும். அதுவும் அவளுடைய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளை தனக்கு திருமணம் செய்து வைத்த பின்னும் நண்பனையும், மனைவியையும் சந்தேகக் க்ண்ணோடு பார்ப்பது கொடுமை. (ஆனால் அப்படிப்பட்ட அவலங்கள் இன்னும் கூட சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நிதர்சன உண்மை என்பதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன). இந்த இடத்தில் இயக்குனர் சற்று சறுக்கி விட்டார் என்றாலும் கூட, அதுதானே மீதிப்படத்தை இழுத்துச்செல்ல உதவுகிறது?.
'நெஞ்சிருக்கும்வரை' படம் பற்றி ஒருமுறை இயக்குனர் SREEDHAR சொன்னபோது "நான் எடுக்க நினைத்த கதை வேறு, ஆனால் எடுத்து முடித்த கதை வேறு" என்று சொல்லியிருந்தார். (1981ம் ஆண்டில் வெளியான 'பொம்மை' மாத இதழில் வந்திருந்த அவரது பேட்டி)
நான் நினைத்ததை அப்படியே சொல்லிவீட்டீர்கள்.Quote:
Originally Posted by saradhaa_sn
முரளி சார் ,
உங்கள் கருத்துக்கு நன்றி ..சில தெளிவு ஏற்பட்டது .ஆனால் முத்துராமன் அப்படி மாறவே கூடாது என்பதல்ல என் எதிர்பார்ப்பு .ஆனால் முத்துராமன் ஒரேடியாக தலைகீழாக மாறிவிடுவதற்கு நியாயமான பின்புலமும் காட்சியமைப்புகளும் (60-களின் சமூக நிலையை கணக்கிலெடுத்துக்கொண்டாலும்) வலுவாக அமைக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
What a beautiful song...
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - எங்க மாமா
http://youtube.com/watch?v=sC2pTtBRv6o&feature=related