ராகவேந்திரன் சார்,
நன்றி! 'கல்யாணப் பெண் போல்' பாடல் ஜாலி ஆபிரகாம் பாடியிருக்கிறார் என்று விளக்கியதற்கு நன்றி! அப்போதே சந்தேகம் வலுத்தது. ஜெயச்சந்திரன், யேசுதாஸ், ஜாலி, ஸ்ரீகாந்த் என்று குரல் குழப்பம் எப்பவுமே ஜாஸ்தி.
Printable View
ராகவேந்திரன் சார்,
நன்றி! 'கல்யாணப் பெண் போல்' பாடல் ஜாலி ஆபிரகாம் பாடியிருக்கிறார் என்று விளக்கியதற்கு நன்றி! அப்போதே சந்தேகம் வலுத்தது. ஜெயச்சந்திரன், யேசுதாஸ், ஜாலி, ஸ்ரீகாந்த் என்று குரல் குழப்பம் எப்பவுமே ஜாஸ்தி.
கிருஷ்ணா!
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பாலுவின் சாதனை பற்றி வெளியிட்ட தகவல்களை இங்கே பதிப்பித்ததற்கு நன்றி!
கிருஷ்ணா!
'கவிஞனும் கண்ணனும்' படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது.
//இன்னிக்கு ஷிப்ட் டேயா நைட்ஆ//
இன்னும் முடிவு பண்ணலே கிருஷ்ணா!:)
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
உங்களின் அன்புக்கு நன்றி . நீங்கள் பதிவிட்ட '' நின்று போன திருமணம் '' நிஜக்கதை - வருத்தமாக இருந்தது .
திரு ரவிக்குமாரின் கருவின் கதை , வாசுவின் அட்டகாசமான '' மயங்கும் '' பதிவு , கல்நாயக்கின் ''பூக்கள் '' பதிவுகள்
சின்னகண்ணனின் கவிதை நடை ,ராகவேந்தரின் திலக சங்கமம் , கலைவேந்தனின் பதிவுகள் ,ராஜேஷ் மற்றும் நண்பர்களின் இனிய பதிவுகள் எல்லாமே அருமை .
வாஸ்ஸூ சார்…
//முகத்தோடு முகம் புதைத்தும், மூக்கோடு மூக்கு உராசியும், பின்பக்கம் வளைத்து உள்வாங்கலும், கழுத்தைச் சுற்றி வளைத்தல்களும், முகவாய்க் கட்டைகளோடு முகவாய்க் கட்டை சேர்த்தலும், கட்டிலில் கட்டிப் பிடித்தல்களும், பாடலை நீலகண்டன் இயக்கவில்லை... ஜெகந்நாதன்தான் இயக்கியிருக்கிறார் என்று படுகிறது. சென்ஸாரும் கொஞ்சம் சென்ஸிட்டிவாய் இல்லை என்றும் தெரிகிறது.// அப்படில்லாம் இல்லை அங்கங்கே ரெண்டு பூ வந்துச்சு :)
//இங்கும் வைக்கோற் போரில் காதலர்களின் அக்கப்போர்தான். வாழை மரங்களும், புடலங்காய் தோட்டமும், கயிற்றுக் கட்டிலும், கிணறும், பரணும், அழகான குடிசையும், அதன் மேல் தாவும் புறாக்களுமாக செட்டோடு சேர்ந்து பாடலும் புழுதி பறக்கிறது.// அதானே.. புடலங்காய் எல்லாம் பிஞ்சா இருந்ததுங்காணும்.. அப்படியே நெலாவாட்டமா வட்டவட்டமா வட்டவட்டமா கட்பண்ணிப் பாசிப்பருப்பு போட்டு கூட்டுப் பண்ணா அட அடடா…ஸ்டமக் கொண்டா கொண்0டாஇன்னும்னு சொல்லும்.!
.
அப்புறம் வைக்கோற்போருக்குள்ள இந்தப்பக்கம் ஜெ அந்தப்பக்கம் ம.தி உள்ள போய்ட்டுவெளிய வந்து ஸ்ட்ரெய்ட்டா பாடறாங்க ..கொஞ்சம் ஸ்லைட்டா அரிக்கறாமாதிரி சீன் வச்சுருக்கணும் டைரக்ஷன் மிஸ்டேக்!
கிணத்துமேலல்லாம் தலை மேல தலைவெச்சு பாட்டு.. காதல்னா ரிஸ்க்லாம் பாக்காதோ..
சின்னாவுக்கு 'quote' பண்ண செம சான்ஸ்// எனக்கு எங்க கோட் பண்ண சான்ஸ் கொடுத்தேள்.. எல்லாம் தோள்வாரியா..ஸாரி விலா வாரியா எழுதிட்டீரே..
பாட்டு முன்னமே கேட்டு ரசிச்ச பாட்டுதான் என்றாலும் கலை சொல்வது போல இவ்வளவு ஆழமாக அகலமாக நீளமாக இன்னும் என்னவெல்லாமோ க போட்டுக் கேட்டதில்லை ரசித்ததில்லை.. நீங்கள் செய்ததால் நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போலே நானும் ரசித் ரசித் ரஞ்சிதா ஸாரி டைப்போ ரசித்தேன் மிகவும்..! :)
கணவன் படம் பார்த்ததில்லை..
யூ நோ ஒன் திங்க்..
முக நூல் நண்பர் ஒருவர் இந்த நீங்கள் சொன்ன பாடலைப் போல பலப் பல ஆண்டுகள் கழித்துக் கொஞ்சம் விரசமாகவும் இளசுகளை எல்லாம் நிறையக் கேட்கவைத்த ஒரு ஹிட் பாடலான நிலாக் காயுது பாட்டிற்கு ஒரு சிந்துப் பாட்டு எழுதியிருந்தார்.. ( என்ன இந்தப் பாட்டுல புடலங்கா வைக்கப் போர் மிஸ்ஸிங்க்.. ஸீ என்னமா காப்பி அடிக்கறாங்க ம்ம் என்னமோ போங்க)
அதற்கு ப் பதிலாக..அல்லது அந்தப் பாட்டைப் பற்றியே யாரோ ஒரு வயதானவர் ( யாரு..யாரோ!) சொல்வது போல சிந்து எழுதியிருந்தேன்..
இரவினில் பாடிய பாடல் – நெஞ்சில்
உறவுடன் மோதிடும் சாரல் –இன்று
கேட்கவும் கூட்டிடும் ஆடல் – பின்னர்
நாடல்- நெஞ்சில்
ஆறல் -பருவம்
ஓடிய தெண்ணியேச் சாடல்..!
ம்ம் என்னபண்றது..மயக்கத்தை தந்தது யாரடி!
*
கிருஷ்ணாவின் பக்கெட்டிற்கான அர்த்தம்புரியவில்லையே.. பிங்க் கலர் ஃபளவர்ஸ்..ம்ம் அதில் தண்ணீரும் இல்லை.. ஐயாம் நாட் இண்ட்டரஸ்டட்!
*
கலைவேந்தன்.. நன்றிங்க்ணா.. கொஞ்சம் ஃப்ரீயாகும் போது ஒரு குழந்தைப் பாட்டு கொண்டு வாங்க..!
(அனேகமா சிக்கமங்கு சிக்கமங்கு பாட்டா இருக்கும்!)
*
எஸ்வி நன்றி.
*
ஆதிராம்.. என்னங்க இப்படிப் பச்சப் புள்ளையா இருக்கீங்க..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட்ட்ட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக
நல்ல பாட்டு தான் இல்லேன்னு சொல்லலை.. மா பலா வாழை இருக்கான்னு பார்த்தீயளா..
*
//குகன் என்ற கதா பாத்ரம் சொல்வதாக இப்படி அமைந்த பாடல் எவ்வளவு நேர்த்தியாக வெண்பாவாக வந்திருக்கிறது பாருங்கள் சந்தத்தோடு கம்பருக்கு:
அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையா லரசெய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரமென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ மன்னவர்
நெஞ்சினில் வேடர் விடும் சரம் பாயாவோ?'''//
கிருஷ்ணா அது வெண்பாவில்லை.. கலித்துறைன்னு நினைக்கறேன்.. நேத்துக்கூட ஒண்ணு ட்ரைபண்ணேனா.. அதை அப்புறம் சொல்றேன்..
திக்குத் தெரியாத காட்டில் விளக்கம் அருமை கிருஷ்ணா ஜி.. எனக்கு மிகப் பிடித்த பாரதி பாடல்களில் ஒன்று..
துள்ளித் தந்தாரொரு பாட்டு –அதில்
தோயும் இளமனமும் கேட்டு – முகம்
அல்லி மலர்ந்தது போலும் –அங்கே
அழகாய்ப் பொலிந்ததுவே பாரும்..!
நன்றி கிருஷ்ணா..
*
கல் நாயக் ஏன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வர்றார்.. தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ்ல ட்யூட்டியா என்ன ( அந்தக்காலத்தில சென்னையில் ஈவ்னிங்க் 5 மணிக்கு ஏறினா மறு நாள் முழுக்க ஓடி அதற்கு மறு நாள் விடிகாலை டெல்லி போகும் …இப்பவும் அப்படியா தெரியாது!)
*
ஹை..கண்ணா சமர்த்து.. ஹோம் ஒர்க் முடிச்சுட்டேனே :)
மறந்து போன பாடல்களின் தொடர்ச்சி
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது (கல் நாயக் நானும் உங்கள் பூவை திருடிவிட்டேன் மன்னிக்கவும்)
மு.மேத்தாவின் வரிகள் இசையரசியின் குரல்
https://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc
எனது விழி வழி மேலே கனவு பல வழி மேலே
ஜெயசந்திரன் ஜானகி குரலில் அழகான பாடல்
வரிகள் வாலி
https://www.youtube.com/watch?v=fGb82FXkYZc
வி.எஸ். நரசிம்மனின் இசையில் விழிகளில் கோடி அபிநயம்
கண் சிமிட்டும் நேரம் (சரத்குமார் தயாரிப்பாளராக இருந்த காலம்.. சிறிய வேடத்தில் வருவார்)
https://www.youtube.com/watch?v=U2-QrZwSMQ8
*
ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “என் வீட்டில் மா, பலா, வாழையெல்லாம் வளர்த்திருந்தோம் தெரியுமா “ என்றார்..
இப்போ இருக்கா என்ன
ம்ஹூம் அதெல்லாம் ஒரு இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னமேயே வித்து ப்ளாட்டா பண்ணிட்டாங்க..அதுல ஒரு ஃப்ளாட் எங்களுக்கு..
கஷ்டம் தான் இந்த மாதிரி மரங்கள் வளர்ந்திருக்க அவற்றை விற்றுவிடுவது..அதுவும் பலா மரம் வளர்வது என்பது கஷ்டம்
*
ஸோ இந்த முக்கனின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா பழைய பாடல்கள்ல நிறைய பாடல்கள் இல்லை யுவர் ஆனர்..
புதுப் பாட்டுல நிறைய கொட்டிக் கிடக்கு. எனிவே பழைய பாடல்னு வந்தா மூணு பாட்டு நினைவில்..
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளித் தெளித்த பொன் மாடமெங்கே..
சரி மூணாவது.. ஹை..அவ்ளோ சீக்கிரமா போகமுடியுமா அதுக்கு
இந்தக் காதல் வயப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் பாருங்கள்..எல்லாருமே வித்தாரக் கள்ளிகள்!
*
செந்தேன் இதழில் சிதறாமலே மென்மைப் பூவாய்
வெண்மைச் சிரிப்பில் விளையாடிடும் பாடல் கேட்டே
கண்ணின் இமைகள் களிகொண்டிட மெல்ல ஆட
வந்தாள் கனிவாய் விகசித்திடும் வண்ணங் கொண்டே
(கலித்துறை முயற்சி- கொஞ்சம் ட்ரை பண்ணினேன்)
இப்படித் தான் காதலன் எதிர்பார்க்கறச்சே எதுவும் அறியாத பசுவாய் (வாசு போல) கொய்ங்க் கொய்ங்க்னு குட்டிப் புறா கணக்கா நடந்து வந்து கருவண்டுக் கண்களின் மேல் இருக்கும் சிறகினைப் போன்ற இமைகள் மெல்ல மெல்ல கொட்டக் கொட்ட பாக்கற நம்ம ஆள் கொட்டக் கொட்ட முழிப்பான்..மனசும் மெல்ல மெல்ல முரசு தட்ட ஆரம்பிக்கும் சந்தோஷத்தில்..
ஹப்புறம் என்ன ஆகும்
என்ன புள்ள சுகம் தன்னே
ம்க்கும் புறா பக்கும் பக்கும் சொல்லும்..
என்ன ரொம்ப அலட்டிக் கொள்கிறாய்
ம்ம் போங்க
இங்கிட்டு வாவேன்..
என்னவாம்..
ஒண்ணு கொடேன் கன்னத்திலே
போய்யா உனக்கு வேற வேலை இல்லை நான் போறேன் – ஆனால் போகமாட்டாள்.
அப்புறம் இப்பக் கொடுத்தா ஒண்ணோட போய்டும் அப்படி இல்லாங்காட்டி
இல்லாங்காட்டி – மென்னகை புரிந்து தூண்டும் புறா..
நூறு தரவேண்டியிருக்கும்..
ஹச்சோ ஓஓ.. என் கன்னம் இன்னாபா ஆகும்… எனப் பொய்வெட்கம் கொள்வாள்.அருகில் கன்னத்துடன் கன்னம் இணைக்க வருவது போல் வந்து கிள்ளியும் விட்டு விடுவாள் ..(இது ரொம்ப மோசமில்லா).
இதையே அந்தக் காலச் சின்னக் கண்ணனார் என்னவா எழுதியிருக்கார்னா..
தாநூறு என்றாலோ சட்டெனவே கண்சிவந்து
தேனூறும் தெள்ளுதமிழ்ப் பேச்சினிலே - வானூறும்
தூறலென மென்மையினைக் கன்னத்தில் சுட்டியே
பூடகமாய்க் கிள்ளியதே பூ!
*
இதே மாதிரிதான் அந்தக்காலத் திரைப்படத்துல ஒரு பாட்டு..(எல்லாம் வாசு சாரினால் வந்த வினை.. என்னை கிள்ளி விட்டுட்டார்..)
ஒயிலா அந்த இள நங்கை வர்றா.. வர்றாளா.. காதலனைப் பார்த்து எதுவும் கேக்கலை.. தன்னழகைத் தானே ரசிச்சுக்கிட்டு பாடறா..
கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்
அவன் என்னவாக்கும்சொல்றான்
வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு
சேர்ந்து இசை பாடும்
இப்படிப் பாடறச்சயே அவளோட அழகோட சி.வியான சி.இ யைப் பார்த்துடறானா தடுமாற்றமா சின்ன இடையோ டு டு டுன்னு பாடிடறான்..
சரி நம்ம காதலி தான்..பார்த்தா ரசகுல்லாக்கு கண் காது வாய் மூக்கு கண்மை கூந்தல் பொட்டு வெச்சா மாதிரி முகம் அதில் தவழும் ஜீரா போன்ற குறும்பு, சூப்பர் டூப்பரான புடவைக் கட்டு அதைக்கட்டியிருப்பவளின் நளினம், சொற்செட்டான பாட்டு என சொய்ங்க் சொய்ங்க்னு மயங்கிக்கிட்டே இருக்கறச்சே டவுட் வருது..கேட்டுடறான்..
கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
எண்ணங்கள் பொங்கி வருமோ
இன்பத்தை பங்கு தருமோ
**
பாக்கறா காதலி.. அவளுக்கு சிரிப்பு மேலே மேலே வருது.. லூஸுன்னு திட்டலாம்..ஆனா ஆண்கள் காதல்னா லூஸாத்தான் ஆகிடுவாங்கன்னு தெரியுமே..அவள் மட்டும் என்ன வாழுதாம்
அவளுக்கும் அவன் வேண்டுமே.. வெளிப்படையா சொல்ல முடியாது..
கட்டிப் பிடித்திடக் காளையைக் கூப்பிடலாம்
வெட்கம் தடுக்குமே ஆம்..
சரி பதில் பாடிப் பார்க்கலாம்
தானாக ஓடி வருமோ
தழுவாமல் ஆசை தீருமோ
நாணத்தை பெண்மை விடுமோ
நான் என்ன சொல்ல வேண்டுமோ
*
பாக்கறான் நம்ம காதலன் பயபுள்ள.. சரி சரி.. அம்மா கொஞ்சம் மென்மையா ஒரு வழியா அதாவது ஒரு மார்க்கமாத் தான் இருக்காக.. கொஞ்சம் பாராட்டிடலாம்னு எடுத்து விடறான்
*
முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ
சேர்ந்ததும் முடிவுரையோ
*
அவளுக்கோ வெட்கம், நாணம், ஆசை.. கொஞ்சம் கோபமும் கூட..அரை லூசு என்னமெல்லாமோ உக்காந்து ரூம்போட்டு நம்ம அழகை வர்ணிக்குது பாரேன்.. நாம என்ன அவ்ளோ அழகாவா இருக்கோம்.. பாட்டு முடிஞ்சதும் ஹேண்ட்பேக் எடுத்து குட்டிக் கண்ணாடில்ல முகம் பாத்துக்கணும்..!
இது என்ன கொஞ்சம் லைன்ஸ்லாம் பார்த்தா வம்பா இருக்கே..புள்ளையாண்டான் ஜொள் கொஞ்சம் ஓவர் தான்..சரி அவனுக்குத் தான் நூல் விடத் தெரியுமா.. நாம வேணும்னா நூலிடை விட்டுப் பார்க்கலாம்!
*
பெண்மேனி ஊஞ்சல் வேண்டுமோ
பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்த வேண்டுமோ
பசியாறித் தூங்க வேண்டுமோ
*
அம்புட்டு தான் அப்புறம் என்ன ஆச்சா
இரவினில் நிலவு மின்ன
..இளையதாய் மேகம் ஒன்று
உறவினைக் கொள்ள மதியை
..ஓடியே மூடும் போலே
கரகர வென்றே காளை
..கட்டெலாம் விட்டே அங்கு
சரமென அன்பைக் காட்ட
..சாய்ந்ததே மாலை அன்றோ..!
அம்புட்டுதேன்.. தே லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்..!
*
நீங்கள்ளாம் கேட்ட பாட்டு தான்.. இளமை+அழகு+குறும்பு த்ரீ இன் ஒன்னாய் ஜெயந்தி.. நடனத்தில் வல்லவராய் நாகேஷ்.. படம் நீர்க்குமிழி..
https://youtu.be/kjePOCQCbNM
பின்ன வாரேன் :)