Meanwhile in real world .........:)
https://pbs.twimg.com/media/B1FhDwtCEAEtU_9.jpg:large
Printable View
Meanwhile in real world .........:)
https://pbs.twimg.com/media/B1FhDwtCEAEtU_9.jpg:large
இளையராஜா கூறுகிறார்...
பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.
“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.
“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.
“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.
அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை./
12 மணி நேரத்திற்குள் உருவானதா அந்த சாகா வரம் பெற்ற பாடல்கள்..? இசைஞானியே.. நீரே இசைவாணி..!
மறக்கமுடியுமா? மறந்தால் நான் மனுஷனா? .... வாலி பிறந்தநாள் விழாவில் இளையராஜா பேச்சு
https://www.youtube.com/watch?v=rboGPy5p3ds
Kavingar Vaali 83th Birthday Celebrations
http://www.tamilstar.com Kavingar Vaali 83th Birthday Celebrations held on 29th Oct 2014 at Kamaraja Arangam, Chennai. Ilaiyaraaja, Vivek, Panchu Arunachalam...
More speeches . All good http://m.youtube.com/watch?v=5C0lhe2_CTY
"தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !
'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...
”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..
‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’
‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?
‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’
‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’
‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!
‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’
“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”
“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..
“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”
“என்ன அதுக்குள்ளேயா?”
‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”
“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.
‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’
‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’
‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’
‘சார்..! அதில்ல சார்..!’
‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’
‘சார்… வந்து... அமெரிக்காவில்’
‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”
உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.
வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.
அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”
பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
'சார்.. ..'
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘அப்டியா சார்?’
‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..
‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’
‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’
’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’
............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!
அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.
நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.
நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…
’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’
எங்கும் அமைதி…!
1…..! 1..2..3..4..
‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.
'....... ...... ....'
'....... ...... ....'
I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.
‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.
அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).
http://www.youtube.com/watch?v=K8qs_TpAWpc
இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..
‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.
‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.
‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.
போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."
இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்
தளபதி பட பின்னணியிசை மற்றும் பாடல்களை ஒலிப்பதிவு செய்வதற்காக ராஜாவுடன் மும்பாய் செல்லும் இசைக்கலைஞர்கள்.
https://scontent-b-ord.xx.fbcdn.net/...9a&oe=54E191EE
Kamalhasan's interview in "The Hindu" - turns 60 on Nov. 7
A progressive film like Aval Appadithan was made in 1978. Do you believe we have grown since then?
We have regressed really. I’m not sure what is causing this decline. It’s perhaps the mass influx of untrained people into the industry because of the success of filmmakers like Bharathiraja and Ilaiyaraaja. Aval Appadithan was a guerilla attack on the industry by insiders like me. It slipped through their fingers, so to speak. With all the attention that films get these days, I doubt we can get away with such a film any more.
People think Bharathiraja and Ilaiyaraaja just came from their villages and became legends here. They don’t know the training and hard work they had to put in to get where they are today. When we were making Raja Paarvai, Ilaiyaraaja would often request to be excused in the evening. I initially thought he probably wanted some sleep. Later, I came to know that he was taking classes in classical music in the evenings. It is such dedication to learning that gets you to the top.
[not sure if these (the information in this piece) were shared already............this are excerpts from Gangai Amaran's conversation with Thuglaq readers ]
Q1: ஒரு நல்ல இசை எங்களுக்குக் கிடைப்பதற்குக் காரணம் - இசையமைப்பாளரின் திறமையா, அனுபவமா, பயிற்சியா?
கங்கை அமரன் : அந்தந்த நேரத்தில் இசையமைப்பாளரின் மூடுக்கு என்ன வருகிறதோ, அதுதான் இசை. அது ரசிகர்களின் மூடுக்கும் ஒத்துப் போய் விட்டால், அது நல்ல இசையாகி விடுகிறது. ‘நாயகன்’ படத்திற்காக கம்போஸிங்கில் ‘தென்பாண்டி சீமையிலே...’ என்ற சோகப் பாடலுக்குப் பதிலாக ‘நிலா அது வானத்து மேலே...’ என்ற பாடலின் ட்யூன்தான் முதலில் ஸ்லோவாகப் போடப்பட்டது. திடீரென்று இளையராஜா ‘தென்பாண்டிச் சீமையிலே’ ட்யூனை வாசித்துக் காட்டவும், அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. உடனே ‘நிலா அது வானத்து மேலே’ ட்யூனை ஃபாஸ்ட் பீட்டிற்கு மாற்றி, அதைக் குத்துப் பாட்டாக ஆக்கி விட்டார் ராஜா. இரண்டுமே சூப்பர் ஹிட்! ‘பாடல்கள் ஒரு கோடி.... எதுவும் புதிதில்லை..’
Q2: உங்களது மௌன கீதங்கள், வாழ்வே மாயம் உட்படப் பல படங்களின் பாடல்களைப் பலர் ‘இளையராஜாவின் பாடல்கள்’ என்று கூறும்போதும், ‘இளையராஜா ஹிட்ஸ்’ சி.டி.க்களில் நீங்கள் இசையமைத்த பாடல்களைச் சேர்த்து விடும்போதும் உங்களுக்கு எப்படியிருக்கும்?
கங்கை அமரன் : மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். ஒருமுறை நானும், இளையராஜாவும் கம்போஸிங்கில் இருந்தபோது வெளியேயிருந்து ‘நீதானா நிசந்தானா... நிக்க வச்சு நிக்க வச்சுப் பார்க்கிறே’ என்ற பாடல் ஒலித்தது. உடனே இளையராஜா ‘இந்தப் பாட்டை எந்தப் படத்துக்குடா போட்டேன்?’ என்று கேட்டார். ‘அது நீ போட்ட பாட்டில்லை. நான் போட்ட பாட்டு’ன்னேன். (சிரிப்பு). அவரை மாதிரி நான் இசையமைச்சிடுவேன். ஆனால், ஆர்கஸ்ட்ரேஷன் அவர் மாதிரி என்னால் பண்ண முடியாது. இரண்டு பேரின் இசையமைப்பும் ஒரே மாதிரி தெரிஞ்சாலும், ஆர்கஸ்ட்ரேஷனைக் கவனிச்சால் வித்தியாசம் கண்டுபிடிச்சிடலாம்.
Q3: மற்றவர்கள் இயக்கிய 187 படங்களுக்கு இசையமைத்த நீங்கள், உங்கள் படங்களுக்கு மட்டும் இளையராஜாவை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டது என்ன நியாயம்?
கங்கை அமரன் மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இளையராஜாவை அணுகிச் சம்மதிக்க வைப்பது கடினம். ராஜா அப்போது அவ்வளவு பிஸியாக இருந்தார். ஆனால், நான் பக்கத்திலேயே இருக்கிறவன் என்பதால், எனக்கு அது ஈஸி. இளையராஜாவுக்கு அப்போது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ராஜாவின் இசையிருந்தாலே படங்கள் விற்றுப் போகும் என்கிற அளவுக்குச் செல்வாக்கு நிலவியதால், என்னை இயக்குனராகப் போடும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், நான் இளையராஜாவின் இசையைப் பயன்படுத்திக் கொண்டேன். என் இசை எப்போதும் இளையராஜாவுக்குக் கீழேதானே ஸார்? அவர் இசையைப் பெறும் வாய்ப்பு இருக்கும்போது அதை நான் ஏன் விட வேண்டும்...?
Q4: ‘மௌன கீதங்கள்’ படத்தின் டைட்டிலில் ‘இசை - கங்கை அமரன்’ என்று கார்டு போடும்போது, இளையராஜாவின் நோட்ஸ்களை நீங்கள் திருடித் திருடி நோட்ஸ் எழுதுவது போன்ற கார்ட்டூனைப் போட எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?
கங்கை அமரன் : அது காமெடிக்காக பாக்யராஜ் செய்தது. அந்த நேரம், இளையராஜா ஸ்வரங்கள் எல்லாம் எழுதி வைக்கும் ஒரு நோட்டு, ரிக்கார்டிங் தியேட்டரில் தொலைந்து போனது. அது நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியாகி விட்டது. அந்த நேரம் மௌன கீதங்கள் படத்திற்கு, காமெடியான கார்ட்டூன் டைட்டில் கார்டுகளை பாக்யராஜ் ரெடி செய்து கொண்டிருந்தார். இந்தச் செய்தியைப் பார்த்ததும், ‘பாட்டெல்லாம் நம்ம படத்தில் நல்லா வந்திருக்குது. அந்த நோட்டு இவர் கிட்டதான் இருக்குமோ?’ என்று காமெடி செய்தபடி, அப்படி ஒரு டைட்டில் கார்டை வைத்தார் பாக்யராஜ். என் ஒப்புதலோடுதான் அந்தக் கார்ட்டூன் போடப்பட்டது. அதுதான் என் முதல் படம் என்றால், கொஞ்சம் யோசித்திருப்பேன். அதற்கு முன்னாடியே 15 படங்களுக்கு இசையமைத்து, என்னை ஓரளவு நிலை நிறுத்திக் கொண்டதால், அந்தக் கார்ட்டூனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல பேர் என்னை இசையமைக்க அழைத்ததன் காரணமே, இவன்கிட்டே இளையராஜாவின் நோட்ஸ் நிறைய இருக்கும் என்ற நம்பிக்கைதான் என்பது எனக்கும் தெரியும்
Yuvan marrying for third time and Maestro not happy with this development. Thank God, that Maestro was so laser focused and committed to his work and creation of world class music at Yuvan's age. If only Yuvan could adopt a little bit of discipline like his father. Yuvan's music is sub-par as compared to his dad. At Yuvan's age, Raaja was trailblazing in his career and churning out super duper hits. Watch Raaja (at Yuvan's current age) receiving the award for AVM's Sakalakala Vallavan's silver jubilee celebration (Raaja comes in at 1:20). We are truly blessed.
https://www.youtube.com/watch?v=XTqd...=TLMW9r_qzCtz0
http://www.indiaglitz.com/shamitabh-...il-news-117983
looking forward for the movie and its music.... in the reverse order