http://www.youtube.com/watch?v=dvTbCMoytAM
Printable View
https://soundcloud.com/ks-suka/r0uiajum3jv0
பாடகி சித்ரா தான் பாடிய பாடல்களிலேயே பிடித்த பாடலாக இந்தப் பாடலைச் சொல்கிறார். இதன் சரணங்களில் வரும் தாள மாற்றத்தை(Rhythm change) சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார், இந்தப் பாடலுக்கு live -ஆக Drums வாசித்த திரு. புருஷோத்தமன். இந்தப் பாடலுக்கு கீ - போர்டு வாசித்தவரின், அப்போதைய பெயர் ஏ.எஸ். திலீப்குமார். இப்போதைய பெயர் ஏ.ஆர்.ரஹ்மான்.
-- Ks Suka
பாடலாக்கத்தில் ராஜா நெய்யும் வெவ்வேறு தாளக்கட்டுகளை நம்மளைப் போலவே சித்ராவும்..
இன்று அதிகாலை நேரம்.. மகனை சாக்கர் டோர்ணமேண்டுக்காக காரில் அழைத்துச் செல்கையில் "சின்ன மணிக்குயிலே" பாடல் பாடலை கேட்க நேர்ந்தோம். அப்போது எனக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்..
அப்பா! who is the composer? Ilaiyaraja??
Yes.. you liked this song?
yeah.. very much.. the way the flute follows the male voice throughout the song is wonderful. Can you play it one more time?
http://www.youtube.com/watch?v=ha-7LXrSmrs
பிறந்த நாள் வாழ்த்துகள்!! வாழ்க பல்லாண்டு!
ஒ வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்....
புதிய ஸ்வரங்கள் வெளி வராமல் போனதால் ஒரு முத்து அவ்வளவு அதிகம் பேசபடவில்லை.
இதே பாடல் யேசுதாசும் உமாரமணனும் பாடி டுயட்டாக வந்திருந்தாலும், ராஜா சார் பாடியதில் ஒரு வலி இருக்கிறது. இடை இசைக்கு இவர் பயன் படுத்திய கன்னகோல் ஜதிக்கு யாரால் என்ன விலை கொடுக்க முடியும்?
கேளுங்க, கேளுங்க, இன்னும் அதிக முறை இந்த பாடலை கேட்க தோணும் உங்களுக்கு.. அலுக்காது.
http://ramachandrababu.blogspot.co.u...l-films-1.html
http://www.youtube.com/embed/dZPxQJ7o0Uc
கேட்பதற்கு மிகவும் எளிதான இனிமையான பாடல். அதை விட, மிகவும் எளிதாக, சிரம படாமல் ராஜா சார் இந்த பாடலை வடிவமைத்திருக்க கூடும்.
பாடலை எழுதிய வாலியும் வார்த்தைகளை அள்ளி தெளித்து இசைக்கு வார்த்தைகளை ரொப்பி இருக்கலாம். நடித்து கொடுத்த மோகனும் ரேவதியும் எளிதாக வாயசைத்திருப்பார்கள். ஊட்டியும், ராஜராஜன் காமெராவும் - பிரமாதம்
ஜெயந்திரனும் ஜானகியும்... கஷ்டமெல்லாம் அவர்களுக்கு தான். அதனாலோ என்னவோ, இந்த மாதிரியான பாடல்களை சூப்பர் சிங்கரில் காண்பது அரிது.
நான் அதிகம் நேசித்த பாடல்கள் வரிசையில், 1986ல் வெளிவந்த ஒரு முத்து. ... 1:14 முதல் 1:26 வரை வரும் இசையை என்ன சொல்ல? மீண்டும் மீண்டும் கேட்டால் என்ன உணர்வு ஏற்படும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=XYPllqyAF08
அழகாக சிரித்தது அந்த நிலவு - அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது - இதுதான் வயதோ
மழை காலத்தில் - லல லல லா
நிழல் மேகங்கள் - லல லல லா
மலையோரத்தில் - லல லல லா
சிறு தூறல்கள் - லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம் - லல லல லல
(அழகாக சிரித்தது...)
நதியே நீராட தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூட தான் நாள் பார்த்தேன்
நாணல் நான் ஆகத்தான் காத்து கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே எடுத்து கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திரு நாள் இதுதான் வரவோ
நாணம் என்ன? அச்சம் என்ன?
(அழகாக சிரித்தது...)
உன்னை நான் அல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ இரு விழி சிவந்திட
(அழகாக சிரித்தது..)
^^ எக்காலத்தில் கேட்டாலும் புத்துணர்ச்சியாய் பொலிவாக இருக்கும் பாட்டு அது. கார் பிரயாணங்களில் அடிக்கடி கேட்கும் பாடல். பகிர்ந்ததற்கு நன்றி.
ராஜாவே எழுதி இசை அமைத்து இருக்கும் பாடல். காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே"
மிக அருமையான பாடல். " படித்த படிப்பினால் நல்ல பண்பு வளரனும்" .
இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதி இருக்கார்.
The Whole movie is here. To listen to this song "just listen first 4 minutes".
https://www.youtube.com/watch?v=5hMFC0xE96w
ராஜா அவர் இசை அமைக்கும் படங்கள் எல்லாவறிலும் "டைட்டில் கார்டு" போடும் பொழுது அவர் பெயர் வரும் இடங்களில் அப்படியே அந்த இசையின் சுருதி லயம் மாற்றி வேறு ஒரு லெவெலுக்கு கொண்டு போவார். அது மிகவும் நன்றாக இருக்கும்.
An art must go directly to our feelings,deep down into the dark rooms of our souls - Bergman// ராஜாவின் இசையில் அறிந்துணர்ந்த தெய்வீகம் இது!
-xyz
https://www.youtube.com/watch?v=Zv77k8nSo0o