-
Sure. but adhu cinema paattu :P
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா
நின் தாள் துணை நீ தா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா
-
Thank u NOV..
film song a?
give me the link pl........ enna padam.. yar nadichadhu....
-
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி
இசை: பெண்ட்யால நாகேஸ்வரராவ்
வெளிவந்த வருடம்: 1957
-
I couldnt find the movie link. But this is the song link.
http://www.youtube.com/watch?v=a76oXDsdjJQ
-
-
film songs of TMS..
ADikadi kaetkum songs
1. Orae padal unnai azhaikum
2. Nilavai parthu vanam sonnadhu
3. yar andha nilavu
Sivaji - Ivarukaga - padum style......
MGR - Ivrukaga - padum style
Really Amazing............
-
ippadi ellaam avar paadalgalai oru kurugiya vattaththil pOda mudiyaadhu...
SA Asokanukku avar paadiya paadalgal EPIC level kku pOyirukku!
நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனை பிறிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
இந்த மானிடர் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாஸமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்
இந்தக் காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்
-
A song for all seasons!
Again for SA Asokan
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
-
TMS is dictionary for all kinds of songs sogam/duet/thathuva padl/bakthi padal.
I think he only gave break for Valli through this song(may not be correct also)
KARPAGA VALLINIL PORPANTHANGAL PIDITHE NARGATHE ARULVAYYAMMA
THEIVIGA KURAL
As mentiioned by tv sankar. MURUGAR PADAL is all time great. I think he only composed all these songs.
regards
ramesh
-
கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா தேவி
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோயில் கொண்ட
கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நானினத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாக்கி வைத் திடும் நாயகியே நித்ய கல்யாணியே...
கல்யாணியே கபாலி காதல் புரியம் அந்த
உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா
கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனை காப்பாய்
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே... பாகேஸ்ரீ தாயே....பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா
கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சி குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா
http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4