-
PP,RR and Roshan
all of your kind words are good medicine for my situaton.
RR,
I always feel this forum as home for my little writings. In last six months, i had to write these two writings. I am sorry that i used this site to express my sadness only. Soon I will try something different and share with all of you.
Kajan
-
நிலவாக நானிருந்தால்
This is in another thread but not in unicode and also this is part of the whole article. Here I am putting it to access it easily
wrote ithis in 2004
நிலவாக நானிருந்தால்
==============
கிட்ட முடியாமல் கெஞ்சும் குழந்தைக்கும்
நட்ட நடுஇரவில் நாயாய் அலைவோர்க்கும்
குட்டிக் கதையில் குழாவும் வயதினர்க்கும்
*கட்டிட மில் லாது கருகும் இரவலர்க்கும்
எட்டாத தூரத்தில் ஏகாந்தம் செய்வோர்க்கும்
பட்ட நாட்டிலும் பௌர்ணமி பார்ப்போர்க்கும்
வட்டிக்கு வாங்கியதால் வாழ்வு இழந்தோர்க்கும்
முட்டாள் பணியால் முதுகுவலி பெற்றோர்க்கும்
வட்ட வடிவத்தில் வானத்தில் வந்துதிக்கும்
மட்டற்ற சக்தி மதியாய் இருந்தால்
முழுநிலவு தொட்டு முகம்மலரும் பிஞ்சு
அழுகின்ற *வேளை அருகில் இருந்து
வழுதில்லா உள்ளம் வருந்தாமல் செய்வேன்
வழுக்கி விழுந்து வருத்தம் பெறமுன்
குழந்தையை அள்ளிக் குதூகலம் ஊட்டி
எழுகின்ற போதும் இனிதாய் அணைத்துக்
குழவிகள் யாவரையும் கொண்டனைத்துப் பாரில்
எழிலும் திகழ இனிமை தருவேன்
களைக்க *உழைத்துக் கடினதாய் வாழ்வு
திளைத்துப்பின் தேனாகத் தித்திக்க என்றும்
கிளைகள் பலதாய் கிளிச்சோலை செய்து
களங்கள் நிறையக் களிக்கத் தருவேன்
இளைத்த இரவலர்க்(கு) இல்லாமை என்ற
வளமற்ற போக்கையும் வையகத்தில் நீக்கிடுவேன்
சிக்கிடச் செய்திடும் சீரற்ற வேலையில்
முக்கிப் பணியிலே முட்டாளாய் உள்ளோர்க்கு
தக்க சமயத்தில் நல்ல தரணியாய்
நிக்க வருவேன் நிலவாக நானிருந்தால்
திங்களொன்றில் சீராகத் தேய்ந்தாலும் அங்கங்கே
சங்கடம் என்றால் சடுதியாய் வந்துநின்று
ஒ ( அமாவாசை அகன்று வளர்கை காட்டல் )
கங்குல் பொழுதில் கழியும் தினமென
அங்கே அமாவாசை அற்று வளர்ந்திடுவேன்
**அந்திகணச் சிந்தனையால் அந்தணர் மந்திரத்தில்
சொந்தங்கள் வந்திருக்கத் **தொந்தரவுக் குந்தலிலே
வெந்தஎன்னை முந்தியவள் விந்தைமிகு சுந்தரியை
சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால்
கடல்தாண்டி வேலை கனடா என் றாக
நெடுநேரப் பேச்சிலே நித்தம் கதைத்து
மடலில் முகம்காட்டி வந்தன்பு செய்து
இடைஞ்சல் புரிந்திடும் என்றன் மனையாள்
வடிவமும் கண்டிட வானத்தில் ஏறி
திடமாய் உறைந்திடும் செய்தியும் சொல்வேன்
வளர்பிறை பின்னரோ வாடும் பிறையும்
வளர்கையில் போலியாய் வாழும் வடிவம்
தளர்ந்த தமிழர் சமூகம் கிழக்கில் ;
அளவற்ற முன்னேற்றம் ஆங்கே விடையாய்
வெளிவானில் விண்நோக்கி வெற்றிநடை மேற்கில் ;
*வெளிநாடு போன்றே விஞ்ஞானம் செய்து
களிப்பில் தமிழால் கனிந்திருக்கும் சூழல்
வளம்பெறச் செய்வேன் மதியாய் இருந்தால்
தமிழைச் சுவைக்கத் தரணியில் எங்கும்
அழகு நிகழ்வுகள் ஆண்டில் பலதாய்
கழகம் *நடத்திக் களித்து மகிழ்ந்து
பழுத்த கலைகள் பரப்பும் நிலைகள்
வழுவில்லாச் சுற்றம் மலர்ந்து சிறந்து
மொழியிலே நாமே முதலிடம் என்று
விழிகள் வியப்பில் விளங்கத் திகழ
புழுவுடன் பூக்களும் போற்றி இருக்க
வழியும் செய்து வதனத்தில் வாழ்த்திப்
பொழிவேன் மலர்கள் புகழ்நிலை கிட்டிட
முற்றும்
கவிவடிவம் பற்றி :
அமாவாசை, வள்ர்பிறை,பௌர்னமி, தேய்பிறை என்பதை
விளக்க கண்ணி அடிகள் எனண்ணிக்கையில் 10, 8,6,4,2,0,2,4,6,8,10
என்றமைத்தேன்
சுழற்சியைக் காட்ட கிட்ட என்று தொடங்கி கிட்டிட என்று
முடித்தேன்
-
தொடரும் நிழல்
தொடரும் நிழல்
பணியில் பயணத்தில் பாரில் பனியில்
உணவில் உயர்வில் உயிரில் உணர்வுகளில்
என்றும் துணைதருவ தென்றன் இதயக்கண்
முன்தெரியும் மைந்தன் முகம்
உவந்த செயலை உதறி உறவின்
அவலப் பொழுதை அருகில் அமர்ந்து
தவிர்த தருணம் நிறைந்த சபையை
கவர்ந்தது புத்திரன் கண்