வெள்ளி முதல் (23/06/2017) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/qnrygl.jpg
Printable View
வெள்ளி முதல் (23/06/2017) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/qnrygl.jpg
http://i67.tinypic.com/e862kk.jpg
தற்போது ராஜ் டிவியில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன் " திரைப்படம் இரவு 10 மணி முதல்
ஒளிபரப்பாகி வருகிறது .
புதிய தலைமுறை வார இதழ் -29/06/17
http://i64.tinypic.com/fwkfts.jpg
http://i63.tinypic.com/2z3nss5.jpg
http://i68.tinypic.com/1zxac8g.jpg
http://i64.tinypic.com/14lu9w0.jpg
தின இதழ் -24/06/17
http://i68.tinypic.com/e84un7.jpg
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதுமை பித்தன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/dqn8jp.jpg
https://s17.postimg.org/3mmekgvnj/IMG_4525.jpg
டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர் வி கே எம்
இன்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
இதய வீணை
நண்பர்களே, இது முத்து செல்வரத்தினம் அவர்கள் முகநூல் பதிவு. இந்த பதிவை பிரச்சினை என்று நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். மாற்றுத்திரியை பாருங்கள். அவர்கள் இதுமாதிரி போடும்போது நாமும் இந்த மாதிரி பதிவை போடுவதில் தப்பு இல்லை.
-----------------------------------------------
http://i67.tinypic.com/2lsvgur.jpg
நன்றி . முத்து செல்வரத்தினம் முகநூல் பக்கம்
புரட்சித் தலைவர் காமராஜர் மீது மரியாதை வைத்திருந்தார். திமுகவில் புரட்சித் தலைவர் இருந்தபோதே காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று காமராஜர் பிறந்த நாள் விழாவிலே பேசினார். இதற்கு அப்போது திமுகவிலேயே எதிர்ப்பு வந்தது. அதனால் எம்.எல்.சி. பதவியை புரட்சித் தலைவர் ராஜினாமா செய்தார். என் கடமை என்ற படம் அப்போது சரியாக போகவில்லை. திமுக தொண்டர்கள் புரட்சித் தலைவரை புறக்கணித்து விட்டார்கள் அதுதான் படம் சரியாக ஓடவில்லை என்றார்கள்.
ஆனால், தான் சொன்னதை புரட்சித் தலைவர் வாபஸ் வாங்கவில்லை. தான் சொன்னதில் உறுதியாக இருந்தார். இதற்காக அண்ணாவும் புரட்சித் தலைவர் மீது வருத்தம் கொள்ளவில்லை. அதற்கு அப்புறம் 1967 தேர்தலின்போதுதான் அண்ணாவே புரட்சித் தலைவரை பார்த்து முகத்தை காட்டினாலே 3 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எ்ன்றார். திமுக தொண்டர்களும் புரட்சித் தலைவர் பக்கம்தான் இருந்தார்கள்.
1967 தேர்தலில் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் புரட்சித் தலைவர் பிரசாரம் செய்தார். ஆனால், தான் மதித்த காமராஜர் போட்டியிட்ட விருதுநகரில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் விருதுநகரில் சிவாஜி கணேசன் காமராஜருக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனாலும் புரட்சித் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் திமுகவுக்கு ஆதரவாக எழுந்த அலையில் காமராஜரும் தோற்றுப்போனார்.
அதற்குப் பின்னர், நாகர் கோயில் பார்லிமென்ட் தேர்தலில் காமராஜர் போட்டிபோட்டார். அப்போதும் புரட்சித் தலைவர் அங்கே பிரசாரம் செய்யவில்லை. காங்கிரசில் பெரும் பணக்காரர்கள், மிட்டா மிராஸ்தார்கள் கருப்பு பணக்கார முதலைகள் இருந்தாலும் காமராஜர் மீது எம்.ஜி.ஆர். மரியாதை வைத்திருந்தார்.
சில பின்னூட்டங்கள்
Raja gopal திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜர் எம்.ஜி.ஆரை கடுமையாக பேசினாலும் எம்ஜிஆர் அவரை தவறாக பேசியது கிடையாது.
Mari Muthu காமராஜர் நல்லவர்தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஊழல்வாதிகள்.
Ramasamy Devar காமராஜர் தனது ஜாதியை சேர்ந்தவர்களை முன்னேற்றிவிட்டார். நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுவில் காமராஜ் நாடார் என்று கையெழுத்து போட்டு குறுகிப்போய்விட்டார். அரசியல் போட்டியால் பசும்பொன் தேவர் அய்யா மீது கொலைகுற்றம் சாட்டி ஜெயிலில் போட்டார். பின்னர் தேவர் அய்யா நிரபராதி என்று விடுதலை ஆனார். தனக்கு கீழே உள்ள மூப்பானார், வாண்டையார் பணக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் கருப்பு பணம் வைத்திருந்தால் கண்டு கொள்ள மாட்டார். ஊழல் இந்திராவோடு காமராஜரும் சிவாஜிகணேசனும் சமரசம் செய்து கொண்டார்கள்.
Bala Subramaniyan புரட்சித் தலைவர் எல்லா தலைவர்களையும் போற்றிய உயர்ந்த தலைவராக விளங்கினார்.
தன்னை எதிர்ப்பவர்களுக்கும் புரட்சித் தலைவர் நன்மையே செய்வார். 1967 தேர்தல் பிரசாரத்தில் தனது தொகுதியில் தனக்கு எதிராக பிரசாரம் செய்த பத்மினி பற்றி புரட்சித் தலைவர் கேள்வி – பதிலில் சொல்கிறார்.
http://i67.tinypic.com/rco5fc.jpg
தன்னை எதிர்த்து பிரசாரம் செய்து எம்ஜிஆருக்கு ஓட்டு போடக் கூடாது என்று பத்மினி கூறினாலும் பிறகு ரிக்க்ஷாக்காரன் படத்தில் பத்மினிக்கு முக்கிய பாத்திரம் கொடுத்தார். படத்தில் நடித்து முடித்து பத்மினி சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டும். அதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக முடிக்கச் சொல்லி பத்மினிக்கு உதவினார். பத்மினி காங்கிரசில் சேர்ந்ததற்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனாலும் அவரால் காங்கிரசில் தாக்குபிடிக்க முடியவில்லை.
புரட்சித் தலைவரை மோசமாக தரக்குறைவாக ஒருமையில் பேசிய கண்ணதாசன், மதுரை முத்து போன்றவர்களைக் கூட புரட்சித் தலைவர் மன்னித்து அவர்களுக்கு பதவியும் கொடுத்தார். புரட்சித் தலைவர் வெளிநாடுகளுக்கு சென்றதை கண்ணதாசன் விமர்சித்தார். ஆனால், கண்ணதாசனுக்கு பதவியும் கொடுத்து கண்ணதாசன் அமெரிக்காவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மருத்துவம் செய்ய தமிழக அரசு சார்பில் மருத்துவ சிறப்பு நிபுணரை புரட்சித் தலைவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.
நன்றி ரெ.ஜெயராமன் முகநூல்
http://i64.tinypic.com/1218wmx.jpg
தன்னை தூற்றியவர்களுக்கும் நன்மை செய்த புரட்சித் தலைவர் ஒரு மனித வடிவில் வந்த தெய்வம்.
http://i66.tinypic.com/34fn11z.jpg