-
மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே
""""""""""""""""""""""""""::::"""""""""""""""""""" :::"""""""""""""""
1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!
Thanks Anand Pandurankan
-
-
-
-
-
-
-
#'நடிகர் திலகம்
சிவாஜிகணேசன்' என்பவர் யார்?
உலகத்தின் ஈடுயிணையற்ற ஒரு மகாநடிகர்.
"அதனால் என்ன?"
அதனால்தான் பிரட்சனையே, எத்தனையோ நடிகர்கள்கள் இருக்கிறார்கள். அதில் தலைசிறந்தவர்.
"அதனால் என்ன?"
அவர் நம் தமிழ்நாட்டில் பிறந்தது நமக்கு பெருமையல்லவா?
"அதனால் என்ன?"
அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்தது பெரும் பாக்கியமல்லவா?
"அதனால் என்ன?"
எந்த நடிகருக்கும் இல்லாத நடிப்பாற்றலினால் அவரினால் எல்லாவிதமான பாத்திரங்களையும் செய்யமுடிந்தது.
"அதனால் என்ன?"
அவரை போல் உலகத்தில் இதுவரை இத்தனை பாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமில்லை.
"அதனால் என்ன?"
ஹாலிவுட் ஆகட்டும் பாலிவுட் ஆகட்டும் இல்லை கோலிவுட் ஆகட்டும் இதுவரை எந்த நடிகரும் அவரைபோல் நடித்ததில்லை
"அதனால் என்ன?"
அய்யா சரித்திர பாத்திரங்கள் மட்டுல்ல, இறையவனுடைய அவதாரங்களையும் மற்றும் சமூக படங்களில் பல்வேறான பாத்திரங்களை செய்தவர் நடிகர்திலகம்.
"அதனால் என்ன?"
சிவாஜி திரைப்டத்தில் நடிப்பதற்கு வருமுன்னே நாடகங்களில் நடித்தவர். அந்த நாடகங்களில்
ஒன்றான அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யத்தின் மூலம் சிறப்பான நடிப்பிற்காக பெரியார் அவர்களால் சிவாஜி என்ற பட்டம் கிடைத்தது.
"அதனால் என்ன?"
பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே விருதெல்லாம் கிடைத்தது. ஆனால் ஒருமுறைகூட தேசிய சிறந்த நடிகருக்கான விருது கொடுக்காமல் இந்திய அவரை தவறவிட்டது. 'தேவர்மகன்' படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. ஆனால் அதை அவர் அதை ஏற்கவில்லை.
"அதனால் என்ன?"
சிலர் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று கிண்டலடிப்பார்கள். ஆனால், அவர் நடித்த நடிப்பை அவர்களால் நடித்துக்காட்ட தெரியுமா? அவர் செய்த அத்தனை பாத்திரங்களையும் உலகத்தில் வேறு ஏதாவதொரு நடிகர் நடித்திருக்கிறார்களா?
"அதனால் என்ன?"
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அவர் அமெரிக்காவில் ஒருநாள் மேயர் பதவி வகித்த சிறப்பு பெற்றவர் என்று. நமது தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலரால் பல தருணங்களில் உலக மேடையில் நாம் தலை நிமிர்தியுள்ளோம்.
"அதனால் என்ன?"
1960-ம் ஆண்டு நயாகரா ஃபால்ஸ் நகரின் ஒரு நாள் மேயராக இருந்தார் சிவாஜி. மேலும் தங்க சாவி இவருக்கு பரிசளிக்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு இந்த பெருமை பெற்ற ஒரே நபர் சிவாஜி அவர்கள் தான்.
"அதனால் என்ன?"
இந்தியாவின் கலாச்சார தூதுவராக வர சொல்லி ஜான் எப் கென்னடி நடிகர் திலகத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கலாச்சார நிகழ்ச்சி ஜான் எப் கென்னடிக்கு கீழ் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"அதனால் என்ன?"
கொலம்பியாவின் குடிமகன்
அமெரிக்க அரசாங்கத்தால் சிவாஜிக்கு கொலம்பியாவின் குடிமகன் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் சிவாஜி தான். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு ஆசியா-ஆப்ரிக்கா திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட்டது.
"அதனால் என்ன?"
பிரான்ஸ் நாட்டின் உயரிய தேசிய விருதுகளில் விருதுகளில் ஒன்றான செவாலியே விருது கடந்த 1995-ம் ஆண்டு சிவாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சிவாஜி அவர்கள் உச்சத்துல இருந்தபோது அவருக்கு உலகம் பூராவும் சுமார் 30ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்தன.
"அதனால் என்ன?"
வெளிநாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் இருந்த ஒரே நடிகர் சிவாஜிதான்.
"அதனால் என்ன?"
அவருடைய பிறந்தநாள் விழா ஒவ்வொன்றும் பெரிய மாநாடு போன்று நடக்கும், பல கிலோ மீட்டர்கள் கணக்காக தொண்டர் படையில் லட்சோப லட்சம் பேர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளும் வரலாற்றில் உண்டு.
"அதனால் என்ன?"
தாதாசாகெப் பால்கே விருது, 1996 ல் பலத்த தேர்வுக்குப்பின்னால் கொடுக்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சிங்கப்பூர், மலேசியா, மொரீசஸ், இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், எகிப்து ஆகிய அரசுகளின் சார்பாக விருந்தினராக வரவேற்கப்பட்டவர்.
"அதனால் என்ன?"
முதன் முதலில் புதுவை அரசுதான் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவியது. அதற்கப்புறம் சென்னை, தஞ்சை, மதுரை ஆகியவற்றோடு 10 இடங்களுக்கு மேலாக அவருக்கு சிலைகள் உள்ளன.
"அதனால் என்ன?"
மணிமண்டம் அவருக்காக தமிழக அரசே கட்டியது.
அவருடைய பிறந்தநாளை ஆண்டு தோறும் அரசே கொண்டாட அறிவித்தது.
"அதனால் என்ன?"
பள்ளி இறுதி ஆண்டின் பொதுத் தமிழ் புத்தகத்தில் ஒரு பாடமாக அய்யனின் வரலாறு இடம்பெற்றிருக்கிறது.
"அதனால் என்ன?"
அவருடைய பழைய படங்கள் எல்லாம் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டு வந்திருக்கிறது.
"அதனால் என்ன?"
வசந்தமாளிகை.... உள்ளே சென்று பார்.....
"அதனால் என்ன? என்று சொல்ல முடியவில்லை
அய்யா... ஆஹா! படமா அது? நடிப்பா அது? நடையா அது? டேன்ஸ்.... ஸஸ்டைல்! சேன்சே இல்ல... 47 வருஷத்துக்கப்புறம் ஓர் நடிகரின் படம்
இந்த அளவுக்கு புதுப்படம் பார்ப்பதுப் போலிருக்குமோ? அப்பப்பா.... ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு பாடலிலும் எத்தனை ஸ்டைல்? உடையா? நடையா? கண்ணுக்குள்ளே நிக்குதே வசந்த மாளிகை....
சிவாஜி அய்யா! சிவாஜிதான்! உலகத்தில் வேறுயார் இருக்காங்க கூறு?"
:- ஐயா நடராஜன் பச்சையப்பன் அவர்களது முகநூல் பதிவு,
Thanks Sekar
-
1971 ஆகஸ்ட்
இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்,
அன்றைய பொறியியல் கல்லூரி,
கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் திலகம் பொறியியல் மாணவர்கள் முன் வைத்த கோரிக்கை
" தற்போதைய "250 ரூபாய், 200 ரூபாய் விலை கொண்ட ரேடியோக்களை 30 ரூபாய், 40 ரூபாயில் உருவாக்கி ஏழை மக்களும் பயன் பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்",
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5F229317
Thanks Sekar
-