சற்று முன்பு கிடைத்த தகவல்
எங்கள் மாமன்னன் நடித்த மதுரை வீரன் கோவையில் படைக்கும் சாதனை தொடர்கிறது
மூன்று நாட்கள் வசூல் ரூ.50,000
தகவல் அளித்த திரு. எஸ். ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...
Printable View
சற்று முன்பு கிடைத்த தகவல்
எங்கள் மாமன்னன் நடித்த மதுரை வீரன் கோவையில் படைக்கும் சாதனை தொடர்கிறது
மூன்று நாட்கள் வசூல் ரூ.50,000
தகவல் அளித்த திரு. எஸ். ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...
ஒருபுறம் தமிழகத்தை சேர்ந்த நம் மக்கள் திலகத்தின் பெருமை அயல்நாடுகளில் மேலும் புகழடைவது சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது..காரணம், நம் மக்கள் அனைவரும் பாட்டுபோட்டல் மயங்கி ஏமாந்து வாக்களித்துவிடுவார்கள். இது இவர்களுடைய பலவீனம் என்று நாம் மக்களை குறைத்துமதிபிட்டு விட்டார்களே !
நம் மக்களை பற்றி இவர்கள் நன்கு புரிந்துவைதிரிகிறர்கள அல்லது நம் மக்கள் நாங்கள் அப்படியல்ல. நீங்கள் என்னதான் பாட்டு போட்டாலும் பாட்டை நாங்கள் நன்கு ரசித்து கைதட்டி மகிழ்ந்து நல்ல ஆட்சியை தேர்ந்தெடுப்போம். பாட்டை போட்டு எங்களை ஏமாற்றமுடியாது என்று பதிலடி கொடுகிரார்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.
மக்கள் திலகம் அவர்கள் நடித்த ''இன்று போல் என்றும் வாழ்க '' படம் -5.5.1977.
இன்று 36வது உதய தினம் .
1977 தமிழ் நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளிவந்து சென்னை - மதுரை நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி தமிழகமெங்கும் வசூலில் சாதனை புரிந்த படம் .
http://i41.tinypic.com/245dphz.jpg
http://i44.tinypic.com/jt5kwg.jpg
http://i42.tinypic.com/501rae.jpg
இனிய நண்பர் திரு srs
நேற்றல்ல - இன்றல்ல .. தேர்தல் நேரத்தில் பிரச்சார காலங்களில் தேசபக்தி பாடல்கள் - கிராமிய கூத்துக்கள் -
நாடகங்கள் - தெருமுனை பிரசாரங்கள் போன்ற யுக்திகள் மூலம் கையாண்டனர் .
1957 தேர்தலில் முதல் முதலாக திரைபட நடிகர்கள் - திரைப்பட பாடல்கள் என்ற கலாச்சாரம் மூலம் சினிமா என்ற வலிமையான சாதனம் அறிமுகமாகி இன்று வரை தொடர்கிறது .
மக்கள் ஏமாளிகள் அல்ல . ஒரு நடிகரின் முகத்தை பார்த்தோ - அந்த நடிகரின் பாடலை கேட்டோ ஒட்டு போடுவது .
ஒரு பாடலில் உள்ள வரிகளின் தாக்கம் - ஆளுமை - மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு உண்டாக்கிய பாடலின் தாக்கம் - அந்த பாடலை பாடி நடித்த நடிகரின் கொள்கை வேட்கை -அவர் மீது கொண்ட பக்தி
இவையெல்லாம் தான் மக்களை சிந்திக்க வைத்து நல்ல வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வரலாறாகும் ..
அந்த வகையில் மக்கள் திலகத்தின் பாடல்கள் 1957 முதல் 2013 இன்று வரை 56 ஆண்டுகளாக தமிழகம் முதல் ஆந்திரா - கர்நாடகம் - புதுவை - மராட்டியம் கேரளா - சட்டசபை தேர்தல்களிலும் -இலங்கை - மலேசியா போன்ற வெளி நாடு தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒலித்து கொண்டிருப்பது உண்மையான சாதனை .
இந்த சாதனை பற்றிதான் மாலை மலர் வெளியிட்டுள்ளது . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் - நடுநிலையான அவரது அபிமானிகளுக்கும் - மகிழ்ச்சி தரும் மாலை மலர் தகவல் .
CINEMA EXPRESS - 1.5.2013 .
ULAGAM SUTRUM VALIBAN REVIEW.
http://i40.tinypic.com/4lls9u.jpg
அன்பு நண்பர் எஸ்வி சார்,
நீங்கள் கூறுவது புரிகிறது...!
இதை நம் தமிழகத்தில் செய்வது மிகவும் பொருத்தமானதாக வைத்துகொண்டாலும் மலேய நாட்டில் இது பொருந்தாத ஒரு Strategy.
காரணம் மலேய அரசாங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கம் மக்களுக்காக ஆற்றிவரும் அரும்பணிகள் உலகறிந்த அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். அந்த அரசாங்கத்தை தமிழக அரசியல் strategyudan அங்கிருப்பவர் ஒப்பிடுவது தவறான ஒரு செய்கை மட்டுமல்ல முட்டாள்தனமான ஒரு செய்கையாகும் .
ஏனென்றால் தமிழகத்தை பொருத்தவரை அரசியல்வாதிகள் பெரும்பாலோர் நம் மக்களை ஏமாற்றியது ஏமாற்றிகொண்டிருபது உள்ளங்கை நெல்லிக்கனி.
நான் குறிபிட்டது என்னவென்றால், நம்முடைய வோட்டை பெறுவதற்கு இந்த யுக்தியை அவர்கள் தேர்ந்தெடுத்ததை சொல்கிறேன்.
வாக்காளர்களை ஏன் கவரவேண்டும் என்பது தான் எனது கேள்வி. கவர்வது என்பது திசை திருப்புவது, ஏமாற்றுவது என்பதற்கு அரசியலை பொருத்தவரை பொருளாகும் என்பது எனது கருத்து.
இதுபோல யுக்திகளையும் இலவசம் என்ற பெயரில் சுயமரியாதையை விலைக்கு வாங்கியும்தான் என்பதை உலகறியும்.
ஆக்கபூர்வமாக சிந்தித்து vote அள்ளித்தால் / அள்ளித்திருந்தால் தமிழகமும் ஒரு சிங்கப்பூர்ஒ மலயவோ ஆகி இருக்கமுடியும்.
நம் மக்கள் என்றுமே அதை செய்ததில்லை சுதந்திரம் கிடைத்ததிலிருந்து என்பது எனது கருத்து. ஒரு நிறுவனத்தில் கணக்கராக வேலை செய்ய வேண்டுமானால் அவருக்கு குறைந்தது 3 முதல் 5 வருட முன் அனுபவம் எதிர்பார்கிறது. Bcom அல்லது CA இன்டெர் படிப்பு தேவை என்று கூறுகிறது. ஆனால் எந்த தமிழ்நாடு Finance மினிஸ்டர் இதை நிறைவு செய்திரிகிறார்? 3 அல்லது 5 வகுப்பு மேல் அவர் படித்ததில்லை. இதுதான் தமிழ்நாடு !
ஆனால் சிங்கப்பூர் அல்லது மலேசியா அப்படி அல்ல. இப்படி உண்மை இருக்கையில்..." நம் வாக்காளர்களை எப்படி ஏமாற்ற முயற்சி செய்யாலாம் என்று எண்ணி இந்த ஒரு வழிமுறையை பின்பற்றி இருப்பது வருந்ததக்கது. இதை நிச்சயம் மலேயாவை சேர்ந்தவர்கள் செய்திருக்க மாட்டார்கள், இங்கிருந்து அங்கே சென்ற ஒருவரோ பலரோ தான் செய்திருக்க முடியும்.
அடுத்த தேர்தலில் கூட இவர்கள் ஒரு பேகட் பிரியாணி, ஒரு கோர்ட்டர் பாட்டில், 500 மலேய பணம் ஒரு வோடீர்க்கு என்று செய்வார்கள் என்பது நிச்சயம்...
"வாக்காளர்களை கவர்வதற்கு" என்பதற்கு பதிலாக வாக்காளர்களிடம் "சாதனையை சொல்லி" vote கேட்கலாமே? காரணம் சாதனை இருந்தால் தானே அதை சொல்லி வோட்டு கேட்பதற்கு !
நம் வாக்காளர்கள் பலஹீனம் இது என்று அவர்கள் "Judgement செய்யுமளவிற்கு அவர்கள் நம்மை பற்றி அறிந்துள்ளார்களா ? அல்லது அந்த Strategy தமிழ்நாட்டில் தான் எடுபடும் இங்கல்ல என்று மக்கள் சரியான அரசை தேர்வுசெய்வர்களஆ என்று முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தான் சொன்னேன்.
இனிய நண்பர் srs
மாறி வரும் சூழ் நிலையில் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தேர்தல் யுக்திகள் பலவிதமாக மாறியுள்ளது .
இந்தியாவில் தமிழ் நாட்டில் வாக்காளர்களை கவர பாடல்கள் மூலம் பிரச்ச்சாரம் செய்தது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்கவில்லை . பாடல்கள் மூலம் ஏமாறவும் இல்லை .
மலேசியா போன்ற வெளிநாட்டில் தேர்தல் நேரத்தில் பாடல்கள் குறிப்பாக மக்கள் திலகத்தின் பாடல்கள் ஒலி பரப்பியது எந்தவிதத்திலும் தவறில்லை .
நீங்கள் சொன்னது போல் 1989 முதல் இன்றுவரை நடந்த தேர்தல்களில் பணம் -உடைகள் - இலவசங்கள் - போலி வாக்குறுதிகள் - ஜாதி வெறி ஓட்டுக்கள் - ஒரே குடும்ப ஆதிக்கம் போன்ற குறுக்கு வழி பிரச்சாரத்தால் நேர்மையான தேர்தல் இல்லாமல் போனது .
மக்கள் திலகத்தின் படப்பாடல்கள் மலேசியாவில் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றது மூலம் அவரின் பாடல்களின் தாக்கத்தையும் - புகழையும் mgr ஒரு உலக புகழ் பெற்ற நடிகர் - அரசியல் தலைவர் என்பதை நிருபிக்கிறது .