ராகவ் ஜி... அது ஜமுனா ராணி அல்ல...எஸ்.ஜானகியின் குரல்.
இந்தப் பாட்டை தனிமையில் இருக்கும்போது கேட்டாலும் சரி.. கூட்டத்தில் இருக்கும்போது ஹெட்போனில் கேட்டாலும் சரி... நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்விடும்..
Printable View
கம்ப்யூட்டர் கைவசம் இல்லை. இது அண்ணன் வீட்டிலிருந்து அவசரப் பதிவு. நிதானமாக வந்து படிக்கணும்..
தாயின் கருணை பாடலும் ஏற்கனவே பதிவானதுதான் என்று நினைக்கிறேன்.
ஆனாலும் என்றும் இனிமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்றல்லவோ
https://www.youtube.com/watch?v=zgoxSlDf_so
வேண்டாம் சார், துளி கூட எடுத்து வைக்காதீர்கள்...அதற்கு அவசியமும் இல்லை.. நம் மனிதர்கள் நடுவே எப்போது வேண்டுமானாலும் 24 x 7 கிடைக்கக் கூடியதாயிற்றே...Quote:
'துளி விஷம்' கூட எடுத்து வைக்கவில்லை
நன்றி மது.. அதென்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ தெரியவில்லை.. கொஞ்சம் குரல் இழைவாகக் கேட்டு விட்டால் உடனே மனம் ஜமுனாராணி பெயர் சொல்லி விடுகிறது..
பதிவிலும் திருத்தி விடுகிறேன்.
நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி
இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
நமது திரி கொட்டட்டும் ' ஜெயா' பேரிகை .
மது என்றுடன் எனக்கு நினைவிற்கு வந்தது .
கிளாப் கிளாப் சுனந்தனி கூப்பிடும் 'மதுக்கண்ணா' .
(எந்த தண்ணீர் குடிச்சாங்க தெரியல) கரகர (ப்ரியா) ஹலம் கூப்பிடும் 'மது மது ' .ஸ்வீட்டி ஜெயப்ரதா கூப்பிடும் 'மது டியர்'.
ஏகப்பட்ட பாட்டுகள் அலசபடுகின்றன. எதைப்படிக்க எதை விட என்று தெரியவில்லை.
நேற்று கேரளாவில் குமிளிக்கு ஒரு தனியார் ஜீப்பில் அலுவலக நண்பர்கள் உடன் பயணித்தேன். ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படம் படப்பிடிப்பு நடந்த குட்டிகானம்,பாம்பனார் போன்ற பகுதிகளை கண்டு ரசிக்க முடிந்தது.
http://img1.holidayiq.com/photos/ku/...05-cropped.jpghttp://tamil.gallery/images/2010/09/Peranmai-336.jpg
1985-2000 கால கட்டகங்களில் ராஜாவின் ராஜாங்கம் என்ற பாடல் தொகுப்பு கொண்ட CD ஒலித்து கொண்டு வந்தது. பாடல்கள் அனைத்திலும் tabelaa வாத்தியம் கொடி கட்டி பறந்தது.
சில பாடல்கள் ஒரே மெட்டு போன்றே தோன்றியது . எடுத்துகாட்டாக
'“பெரிய வீட்டு பண்ணக்காரன்” படத்திலிருந்து கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் “மல்லிகையே மல்லிகையே தூதாக போ” மற்றும் சின்னவர் திரைப்படத்தில் இருந்து "கொட்டுங்கடி கொட்டு நாயனம் காற்றினில் " பாலாவின் அமுத குரல்
நட்புடன்
கிருஷ்ணா ஜி
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் :) ) பேராண்மை எனக்குப் பிடித்த படமும்கூட.. க்ளைமேட் எப்படி இருக்கிறது..
ஒரு மெட்டுக்குப் பாட்டெழுதி அது செலக்ட் ஆகாமல் அந்தப்பாட்டுக்கு வேறு ஒரு பாட்டு எழுதிவிட்டாராம் கவிஞர். முதலில் எழுதிய பாட்டை வேறொரு மெட்டுக்கு உபயோகப் படுத்தி விட்டாரம்..புரியுது ஆனால் புரியலை இல்லை..
தன்னனா தனன்ன தன்ன க்கு மொட்டுவச்ச வாசன மல்லி என எழுதி அது காட் ரிஜக்டட்
தென் தெ போயட் ரோட் அஸ்... ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ண்ம ஸாங்க்..
அப்புறம் கருடாசெளக்கியமாக்கு ஒரு மெட் இசையமைப்பாளர் போட இவர் எழுதிய
மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
அதையே உபயோகப் படுத்திக்கொண்டாராம்..அந்த மெட்டுக்கு..அந்தக் கவிஞர் வைரமுத்து..ஒரு பேட்டியில் சொன்னார் இதை..
KrishnaG
http://www.animatedgif.net/welcome/ctmwelcome_e0.gif
Long time .. no see...
இரண்டாம் ஃபோட்டோ எப்படியிருந்தால் இயற்கையாக இருக்கும் சி.க. சார்... கொஞ்சம் சொல்லுங்களேன்...Quote:
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் )
ஏனென்றால் இயற்கை என்றால் இங்கே ஏகப்பட்ட அர்த்தமிருக்கு... சிவாஜியையே எடுத்துக்குங்களேன்.. அவருக்கு கொஞ்சம் கூட இயற்கை நடிப்பு ஒத்து வர மாட்டேங்குதாம்..
(நான் சொல்லவில்லை சார்....)