Originally Posted by
esvee
Thanks- thiru ramesh
வணக்கம் அன்பு நண்பர்களே - நெஞ்சில் உறைந்த வரிகள்
சினிமா என்பது ஐயோ என்று அழுது வழியும் ஒன்றல்ல காதல் வீரம் புரட்சி உண்மை என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம் அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே அவர் இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள்
இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கும் சோறு போடும் குப்பனும் சுப்பனுமே உலகில் உயர்ந்தவர்கள் - (விவசாயி )
அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் , உழைப்பவர்கள் உண்ண வேண்டும் உண்பவர்கள் உழைக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )
நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )
நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )
நமக்கென்று சேர்த்து வைக்கும் பழக்கத்தை பழகிவிட்டால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)
பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்கு பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)
பலம் உள்ளவனால்த்தான் நீதியை நியாத்தை தட்டிக்கேட்டு பேச முடியும் - (படகோட்டி)
உதவி என்று கேட்டு வரும் எளியவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)
கோடி செல்வம் இருந்தும் தாயன்பில்லாத மாளிகை வாசியை விட குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் ஒரு கவளம் சோறு வாங்கி உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )
இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் நிறையவுண்டு 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டி பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவை பெறலாம் .
அன்புடன்
ம.இரமேசு