Thanks to Adiram Sir, Sivaji Senthil,Vanaja madam, Grouch,Parthasarathy,Ganpat Sir,Chandra sekar Sir,S.Vasudevan .
Printable View
Thanks to Adiram Sir, Sivaji Senthil,Vanaja madam, Grouch,Parthasarathy,Ganpat Sir,Chandra sekar Sir,S.Vasudevan .
WARNING
We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble in this peaceful thread. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.
If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Esvee sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Sasi,
Esvee Sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal
௨
இந்தியாவின் தவப்புதல்வன்.
சில நாட்களுக்கு முன் கணினியில் “There will be blood” எனும் ஆங்கில படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் உச்ச காட்சியில்,அதன் கதாநாயகன் டேனியல் டே லூயிஸ் நடித்த விதத்தைப்பார்த்து அதிர்ந்துபோனேன்.அப்படியே நம் தலைவரின் “தெய்வமகன்” நடிப்பு.
ஆம் இந்தியாவின் தெற்கு கோடியில் மறைந்திருந்த ஒரு மகா கலைஞனின் புகழ ஹாலிவுட வரை பரவி உள்ளது எனும் உண்மை சட்டென்று எனக்கு மட்டற்ற மகிழ்வை கொடுத்தது.அதே சமயம் இந்த கலைஞனை நாம் எவ்வளவு குறைவாக பயன்படுத்தியுள்ளோம் என்ற ஆதங்கமும் எனக்குள் எழுந்தது.
படையப்பா படத்திற்கு இவருக்கு சம்பளம் ஒரு கோடி ரூபா என செய்தி கேட்டு நம்மில் பல ரசிகர்கள் ஆனந்தமடைந்திருக்கலாம்.ஆனால் எனக்கு அது ஒரு செய்தியாகவே படவில்லை.ஆம்! பராசக்தி க்கு ஒரு கோடி ரூபா பெற தகுதி வாய்ந்த ஒரு நடிகனை நாம் கெளரவித்தது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப்பின்.!
அதை விடுங்கள் அவருக்கு நாம் இழைத்த இன்னொரு பெரிய அநீதி அவரை பக்கம் பக்கமாக வசனம் பேச விட்டு ரசித்தது தான்.உலகத்திலேயே உடல் மொழி பேசுவதில் இவருக்கு இணையான நடிகர் கிடையாது.இவரைப்போன்ற கற்பனா சக்தி படைத்த இன்னொரு நடிகரும் கிடையாது.பராசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள் ..இவரின் முதல் படம்.என்ன ஒரு உடல் மொழி!!
எங்கே அய்யா பார்த்தார் இதையெல்லாம்? குண சேகரனாக இவர் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளும் பொழுதுதானே தமிழ் திரையுலகமே எழுந்துகொண்டது.அன்று எழுந்த அம்மேதை மீண்டும் படுத்தது ஜூலை 21 2002 இல் அன்றோ! சுமார் ஐம்பது ஆண்டுகள் சக்கரவர்த்தியாக அல்லவோ ஆட்சி செய்தார்!
ஒரு விடுதி அறைக்குள் நுழைந்து அதை கண்ணால் சுற்றி பார்ப்பது ஆகட்டும்,பெட்டி கொண்டு வந்த ரூம் பையனுக்கு இனாம் அளிக்கும் ஸ்டைல் ஆகட்டும்,வங்கியில் செக்கை கொடுத்துவிட்டு காத்திருக்கும் ஒரு பாவம் ஆகட்டும்.பணத்தை பெற்றுக்கொண்டு அதை எண்ணாமல் ஒரு முறை விரல்களால் பிரித்து அந்த கட்டை பையில் போடும் ஒரு லாகவமாகட்டும்.மீண்டும் தன் அறைக்குள் நுழையும் போது அங்கு ஒரு யுவதியைக்கண்டு கண்ணில் காட்டும் மிரட்சி ஆகட்டும்.என்ன ஒரு தொழில்நேர்த்தி!
நண்பர் கோபால் தன்னுடைய சவாலே சமாளி விமரிசனத்தில் மிக அழகாக சொன்னதைப்போல "தலைவருக்கு எந்த உடை அணிவித்தாலும் ஒரு பாங்கு இருக்கும்.அவர் வேட்டியை உடுத்தும் விதமே அந்த கதாபாத்திரத்தை நமக்கு விளக்கிவிடும்".நான் மேலும் ஒரு படி மேலே சென்று சொல்வேன்:தலைவர் கண்களை மட்டுமே பார்த்தால் போதும் அவர் இடுப்பில் என்ன உடை இருக்கும் என்று கூட ஊகித்து விடலாம்.ஒரு ஆண் 20 வயதிற்கு மேல் அரை நிஜார் போடவேண்டும் என்றால் ஒன்று அவர் foreign returned ஆக இருக்கவேண்டும் அல்லது அரைகுறையாக இருக்கவேண்டும்.ராமன் எத்தனை ராமனடியில் தலைவர் தன் கண்களைகொண்டே தன் அரை நிஜாரை நமக்கு காண்பிப்பார்.அதே ஒரு கிராம வாசியாக பாகப்பிரிவினையில் அவர் வேட்டி அணியும்போது அந்த அப்பாவித்தனத்தை வேறு மாதிரி காண்பிப்பார்.
எதற்கு இத்தனை முகாந்திரம் என்று கேட்டால்,தன் முதல் படம் பராசக்தியில் இதனை மிக சிறப்பாக செய்திருப்பார்.பணக்கார இளைஞன்,வஞ்சிக்கப்பட்டு ஓட்டாண்டி ஆனா இளைஞன்,சமுக அவலங்களை கண்டு வெகுண்டெழுந்து எதிர்க்கும் இளைஞன்,தன் இன்னல்கள் அனைத்தும் நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இளைஞன் என்ற அனைத்து நிலையிலும் அவருடன் சேர்த்து அவர் trousers trousers and shirt உம் நடித்திருக்கும்.
சரி சரி பொங்கல் திருநாளில் உங்கள் நேரத்தை அதிகம் எடுதுக்கொள்கிறேனோ?
மீண்டும் சந்திப்போம்.
I too felt the same :-D and mentioned it here
http://www.mayyam.com/talk/showthrea...t-here/page168
Even in the movie 'The Devil's Advocate' during the scene when Pacino delivers, 'Look but don't touch, touch but don't taste, taste but don't swallow' there's a shade of NT. Now, I don't know if these gentlemen watched NT, but, think it's one style of acting which NT was so fluent and we are all so used to it and associate with NT himself.
வனஜாவிற்கு ஜவாப்..
//உங்களுக்கு மட்டுமா?//
:-D
//பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார். //
தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"
தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
//இது என்ன படத்தில்? //
பராசக்தி! வனஜாவா இதை கேட்பது ? சான்ஸே இல்லை!(இது positive usage).
//இன்னும் தொடருங்கள் //
அதாவது முரளி,கோபால்,வாசு போன்றோருடன் என்னையும் எழுதசொல்கிறீர்கள்:(
சான்ஸே இல்லை!(இது negative usage).
சகோதரி வனஜா, சகோதரர் கண்பட்(புனை பெயர்!!!???)
ஏதேது ,உங்கள் இருவரின் எண்ண ஓட்டங்களுக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது ? இருவரும் late ஆ வந்தாலும் latest ஆ தான் வந்திருக்கீங்க!!
பேஷ், பேஷ், கச்சேரி களை (கலை) கட்டி விட்டது.