நடிகர் திலகத்தின் 72- ஆவது வெற்றிப் படைப்பு "மருத நாட்டு வீரன்"
கேரளாவில் அமோக வெற்றி பெற்ற காவியம். 'ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்' தயாரிப்பில் 24.8.1961 அன்று வெளியான இப்படத்திற்கு இயக்குனர் திரு.T.R.ரகுநாத் அவர்கள். பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.
ஜமுனா, கண்ணாம்பா, சந்தியா, P.S.வீரப்பா, ஸ்ரீராம், A.கருணாநிதி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தனர்.
இசை திரு.SV. வெங்கடராமன் அவர்கள். நடிகர் திலகத்தின் அறிவாளி, இரும்புத் திரை (நெஞ்சில் குடியிருக்கும்... அன்பருக்கு நானிருக்கும்...) ,கண்கள், கோடீஸ்வரன் மற்றும் மனோகரா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.
பாடல்களை இயற்றிவர்கள் திரு.மருதகாசி மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன்.
சமாதானமே தேவை....
புது இன்பம் ஒன்று..உருவாகி இன்று...
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?...
விழியலை மேலே..செம்மீன் போலே...
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது ....
போன்ற அற்புதமான பாடல்கள் இந்தத் திரைக் காவியத்தில்..
இது தவிர "எங்கே செல்கின்றாய்?" என்ற P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் சோகமான பின்னணியில் ஒலிக்கும் பாடல், நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் ஒலிப்பது புதுமை.
"கேரள மக்கள் அமோக ஆதரவு அளித்த படம்" என்று நடிகர் திலகம் அவர்கள் தன் சொந்தக் கருத்தாக இப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
மருத நாட்டு வீரனாக, சீன கைரேகை நிபுணராக, சமையல்காரராக,வேதியராக இப்படி பல மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடிகர் திலகம் அசத்திய படம்.
'சமாதானமே தேவை'
கட்சி பேதங்கள் எதற்காக...
பல கலகமும் பகையும் எதற்காக...
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்...
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்...
ஆம்..நடிகர் திலகத்தின் கட்சியாய் இருந்திடுவோம்.
இதோ நடிகர் திலகம் அவர்களின் குண நலன்களை விளக்கும் ஒரு ஒலி-ஒளிக் காட்சி....
http://youtu.be/nDQW9uCoYQ8
சமாதானத்தை விரும்பிய அந்த வெள்ளை மனம் கொண்ட மாசில்லா மாணிக்கம் நமக்கு அறிவுறித்திய "சமாதானமே தேவை" பாடல் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்...
http://youtu.be/OPRjgxrPoDg