-
நாங்கள் ஏன் புலம்புகிறோம் ?
1959ல் எங்கள் சிவாஜி நடித்த படங்களும் ஜெமினி நடித்த படங்களும் வெற்றி பெற்ற நிலையில் எம்ஜிஆர் படங்களே கிடையாது .நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தோம் .ஆனால் எங்களுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை . 1960ல் மன்னாதி மன்னன் அசுர வேகம் எடுத்தார் .பல படங்களும் நடிகர்களும் காணாமல் போனார்கள் . எங்கள் அபிமான நடிகர் மட்டும் உயிரை கொடுத்து உரக்க கத்தி அழுது புரண்டு நடித்த பல படங்களில் சில படங்கள் மட்டும் வெற்றி பெற்றது .1960-1977 வரை எங்களால் போராடமுடியவில்லை .வெற்றிகளை விட தோல்விகளே எங்களுக்கு அதிகம் .
எம்ஜிஆர் ரசிகர்கள் அன்றும் வெற்றிகண்டார்கள் . இன்றும் வெற்றிகளை கொண்டாடுகிறார்கள் . எங்களுக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையே?
பகல் முழுவதும் நாங்கள் கேவலமாக வெளியிட்ட செல்லரித்த பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் இரவுநேரத்தில் பதிவிட்டு மனதிற்கு சாந்தி தேட முயல்கிறோம் . முடியவில்லையே ?
புலம்பல் நாளை தொடரும் ........
-
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
-
மக்கள் திலகம் புகழும், மாண்பும் புவி உள்ளவரை யாரும், எவரும் நெருங்கவோ, நினைத்து கூட பார்க்க இயலாது... முடியாது... என்பது புத்தியுள்ளவர்கள் அனைவரும் அறிந்த உண்மை நடப்பு... திரு வினோத் சார் பதிவுகள் நியாயமான ஒன்றே... நாம் நமது பதிவுகள் தொடுத்தால் அவர்கள் பாவம்... தாங்குவார்களா? அற்பம் அவர்களுக்கே அவ்வளவு என்றால்?! நமக்கு??!!!
-
வணக்கம், வாழ்த்துக்கள் திரு ராம மூர்த்தி சார், பொன் மன செம்மல் புகழ் வாய்ந்த ஆவணங்கள் பதிவுகள் பதிவிட உரிமையுடன் அழைக்கிறோம்...
-
1950 களில் தனி கதா நாயகனாக நடித்து, முதலில் வெள்ளி விழா கண்ட காவியம் " மதுரை வீரன்", வசூல் சக்ரவர்த்தியாக அவதாரம் எடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வாய்ப்பு கிட்டியது ஜெமினி கணேசன் நடிகருக்குத்தான்... படம் : " கல்யாண பரிசு"... சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் வெள்ளி விழா கண்டது... இதற்கு அடுத்துதான் ஜெமினி கணேசன் அவர்களோடு இணைத்து சி. கணேசன் நடித்த காங்கிரஸ் கட்சி அனுதாபி பந்துலு புண்ணியம் கட்டி கொண்ட சித்திரம் வி பா க பொ.. என்ன நண்பர்களே, சரிதானா இந்த தகவல்?!
-
-
http://i66.tinypic.com/15zf3ib.jpg
கடந்த வெள்ளி முதல் (20/7/18) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகளில் 4 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது .
-
வெகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள்
ஆரம்பித்தவரும், என்னை திரியில் பதிவிட அறிமுகம் செய்து ஊக்குவித்தவருமான
திரு.ராமமூர்த்தி, வேலூர் அவர்களுக்கு வணக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்களின் மேலான பதிவுகள். சிறக்கட்டும் தங்களின் பணிகள் .துரிதமாக .
-
கடந்த வெள்ளி முதல் ( 20/7/18) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2s6on4h.jpg
-