WHAT DO U THINK ABOUT JAYA TV PROGRAMMES?WHICH PROGRAMME DO U LIKE?
Printable View
WHAT DO U THINK ABOUT JAYA TV PROGRAMMES?WHICH PROGRAMME DO U LIKE?
'ஜெயா டி.வி.'யில் வரும் நிகழ்ச்சிகளில்....Quote:
Originally Posted by subanrao
** ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் நடிகை குஷ்பு நடத்தும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி, ரொம்ப காலமாக தொய்வில்லாமல் நடந்து வரும் ஒன்று. பலருடைய மனதைக்கவர்ந்த நிகழ்ச்சி.
** திங்கள் முதல் வெள்ளி வரையில், தினமும் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒளிபரப்பாகும் 'தேண்கிண்ணம்' நிகழ்ச்சி. அருமையான, காணக்கிடைக்காத பழைய பாடல்களின் தொகுப்பு.
** இவற்றுக்கு அடுத்து பார்ப்பதென்றால், விஜய் ஆதிராஜ் நடத்தும் 'ராகமாலிகா' இசை நிகழ்ச்சி. இதுவும் ரொம்ப காலமாக நடந்து வருகிறது. இருப்பினும் சுவாரஸ்யமாக போகிறது. இதே சேனலில் எஸ்.பி.பி.நடத்தும் 'என்னோடு பாட்டுப் பாடுங்கள்' நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யம் குறைவு.
பெண்களை உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு இவர்கள் நடத்தும் 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சி, உண்மையிலேயே மகளிரை மட்டம் தட்டும் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் பெண்களுக்குள்ள் மதிப்பை குறைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உருப்படியாக எதுவுல் இல்லாமல் வெறும் கூத்தடிப்பு நிகழ்ச்சி.
இவற்றையும், மெகா சீரியல்களான ரோஜா, கிரிஜா, கல்கி போன்றவற்றையும் நீக்கி விட்டால், மற்றபடி முழுக்க முழுக்க அரசியல் நெடிதான். அரசியலுக்கென்றே பல்வேறு நிகழ்ச்சிகள். பெரும்பாலான டிவி சேனல்கள் கட்சி சார்புடையதாக இருந்தபோதிலும் கூட, கட்சி விஷயத்துக்காக அதிகம் நிகழ்ச்சி நடத்துவது ஜெயா டிவிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
செய்திகளை எடுத்துக்கொண்டால் கூட, நாட்டில் எவ்வளவு முக்கிய விஷயங்கள் நடந்தபோதிலும் இவர்கள் தலைப்பு செய்தியாக சொல்வது, கட்சித்தலைவி ஜெயலலிதா என்ன அறிக்கை விட்டிருக்கிறார் என்பது பற்றிதான். முழுக்க முழுக்க 'மைனாரிட்டி தி.மு.க.அரசை' சாடும் விஷயங்கள்தான். அ.தி.மு.க. கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை முக்கிய இடம் பெறும். (அதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பிரச்சினைகள் முழுக்க, ஏதோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முளைத்தது போல இவர்கள் சித்தரிக்க முயல்வதுதான்). செய்திகள் கூட மக்களுக்காக என்பதை விட கட்சிக்காரர்களுக்கே என்பது போல தோன்றும் வகையில், கட்சித்தலைவி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவதை ஒரு முக்கிய விஷயம் போல சொல்வதும், தலைவியை கட்சியின் எந்தெந்த செயலாளர்கள் சந்தித்து, பிறந்த நாள், திருமண நாள் ஆசி பெற்றனர் என்பதை விலாவரியாக காட்சியுடன் விவரிப்பதும்... (இதெல்லாம் பொது மக்களுக்கு தேவையா?). அத்துடன் போனால் போகிறதென்று சில பொதுவான செய்திகள்.
இது போக வாராவாரம் 'ரபி பெர்னார்ட்' நடத்தும் 'நேர்முகம்' நிகழ்ச்சியில், மத்திய மாநில அரசுகள் செய்யும் திட்டங்களில் குறைகளை சொல்வதற்கென்று சில பிரமுகர்களை (பெரும்பாலும் அவர்கள் கட்சியினரே) கூட்டி வைத்து விவாதம் (என்ற பெயரில்) நடத்துவது... இதுதான் அந்த சேனலின் சிறப்பு அம்சங்கள்.
Some song oriented programmes in Jeya TV are good such as "Sokkuthey Manam", "ThEn Kinnam" and "Ennodu PAttu PAdungal"
Worst programme is News when AIADMK rules TN
what do u think abt engga area ulla vaangga and dance machi dance programmes?
இசைஞானி இளையராஜா வின் இசை நிகழ்ச்சி இனிதே மகிழ்வித்தது.
இளையராஜா வின் கிராமத்து மண்வாசனை தமிழ்மணம் செவியையும் கண்களையும் - புளகாங்கிதமடைய வைத்தது.
பாலா
சித்ரா
மனோ
கமல்
வாலி
கார்த்திக்
பவதாரணி
பார்த்திபன்
என பலர் விருந்தளித்தனர்
நன்றி ஜெயா TV
did anyone watch the above program
Simran Thirai
Pyramid Saimira launches Simran’s small screen Entry!
The much awaited, revolutionary project from Pyramid Saimira Production Limited, "Simran Thirai" is a mini-mega, where Actress Simran will be playing the role of the protagonist each month. Yes it is a monthly one-story concept where the audience will get to witness the beginning of a new drama, as the protagonist's character and the story take a new dimension. Unlike the megas that run for years this is a groundbreaking concept. The Mini Megas are crisp, compact and condensed to entertain and not elaborate or exaggerate the heroine's plight. Actress Simran will be donning diverse roles in each of the serials.
Popular actress and director Sripriya directs the first serial based on the book "Vannathupoochchi Vaettai" by Writer Sujatha. It will be telecast shortly in Jaya TV during the 8.30PM- 9PM slot daily.
---
howeez this serial?
எல்லாவற்றிலும் 'சீஸன் - 2' துவங்குவதுபோல, சமீபத்தில் முடிவடைந்த, 'லிட்டில் மாஸ்ட்டர் சீஸன் 2' ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் மீண்டும் துவங்கி விட்டது.
முதற்கட்டமாக, தமிழ க முக்கிய நகரங்களில் இருந்து சின்ன வயது திறமையாளர்களைத்தேர்வு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுத்து சென்னையில் நடக்க் இருக்கும் தேர்வுப்போட்டிக்காக தேர்வு செய்யும் நிகழ்ச்சி. கோவையில் நடந்தது நேற்று ஒளிபரப்பானது.
இரண்டு நடுவர்கள் யார் தெரியுமா...?. சமீப காலத்தில் இருவேறு பிரபலமான நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த
'ராகவ் & பிருத்விராஜ் (பப்லு)' தான் அவர்கள் இருவரும்.
பிருத்வி, இதுதான் உங்களுக்கு அழகு. நீங்களே தீர்ப்பு சொல்லும் இடத்தில் இருக்க வேண்டியிருக்க, நீங்கள் பார்த்து வளர்ந்த பையன்களிடமெல்லாம் நீங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா?.
Keep it up..
I dont watch tv much.
but I AM A GREAT FAN OF
jayatv's
THEN KINNAM. miss pannaama parpen (if i have to go out during the day, I watch at nights )
p.s: SUNMUSIC telecasts good 80z / 70z song from 11.00 pm onwards at night :)
O YEAH, I HAD READ THIS NOVEL OF SUJATHA'S, UNFORTUNATELY CAN'T VIEW THE SERIAL, THE CONCEPT IS A BIT DIFFERENT COMPARED TO AGE OLD STEREO TYPE SERIALSQuote:
Originally Posted by R.Latha
Yesterday I watched the dance program for 2 mins. Raghav and Prithvi are the judges.
Prithvi indirectly commented about simbu while he was about to criticize a girl's dance. :rotfl2: Looks like, the problem b/w simbu and prithvi is not a fake at all. :lol:
Simbu voda adutha padathula prithvi kku ethira punch dialogue ethir paarkalaam :smile2:
Quote:
மறந்து போன சினிமா பாடல்கள்
பல ஆண்டுக்கு முன், வெளியான படங்களின் பாடல்களை கேட்க வேண்டுமா? அப்படியானால் ஜெயா சேனலில், திங்கள் முதல், வெள்ளி வரை காலை 9.30க்கு ஒளிபரப்பாகும் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை மறக்காமல் பாருங்கள். இந்த நிகழ்ச்சி 650 நாட்களை தாண்டி வெற்றிநடை போடுகிறது. மெகா "டிவி'யில், அமுத கானம் என்ற பெயரில் ஆதவன் அழகு தமிழில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலும் அருமையான பழைய தமிழ்ப்பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அலைபாயுதே' தொடர் 100-வது எபிசோடை தொடுகிறது.
மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேராகும்.
மூத்தவளான பைரவி தனது குடும்ப வறுமையை போக்கும் பொருட்டு, கணவனை குறுக்கு வழிக்கு செல்லத் தூண்டுகிறாள். கணவனான பால்பாண்டியும் தீயவர்களின் சகவாசத்தில் குறுக்கு வழியில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். குறுக்கு வழியில் சென்ற பால்பாண்டியை கூடிய சீக்கிரம் கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்ள, பைரவி கவலை அடைகிறாள். பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை, தனது கணவன் திருந்த வேண்டும் என்பதற்காக பைரவி போராடிக் கொண்டிருக்கிறாள்.
இரண்டாவது சகோதரி கண்ணம்மாவின் வாழ்க்கை போராட்டம் வேறுவிதமானது. கலெக்டரான ராஜேந்திரனை மணந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவின் வாழ்க்கையில், வர்ஷா என்ற பெண் மூலம் சோதனை ஆரம்பிக்கிறது.
வர்ஷா ராஜேந்திரனின் ஆசைநாயகியாக கண்ணம்மாவின் வீட்டுக்குள் நுழைய, கண்ணம்மாவிடம் டைவர்ஸ் கேட்டு, ராஜேந்திரன் அவளை விதம் விதமாய் கொடுமைப்படுத்துகிறான். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தனது மனைவி என்ற ஸ்தானத்தை பறிகொடுக்க மறுத்தவள், தனக்கு துரோகம் செய்த கணவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டி, டைவர்ஸ் கொடுக்காமல் தனது ஐந்து வயது மகனோடு போராடிக்கொண்டிருக்கிறாள்.
மூன்றாவது சகோதரி பாரதியின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. பாண்டிச்சேரியில் இருந்து, மலேஷிய மாப்பிள்ளையான ஸ்ரீகாந்தை மணந்து மலேஷியா செல்கிறாள். அவளின் புகுந்த வீடு அவளது கற்பையே அடமானம் வைக்கும் அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்ள, பாரதி அந்த குடும்பத்திடம் இருந்து தப்பி இந்தியா வந்து அக்கா பைரவி வீட்டில் அடைக்கலமாகிறாள், அங்கும் தனது கணவனின் தொல்லைகள் தொடர, தனது பழைய காதலன் கணேஷின் வீட்டில் தஞ்சம் புகுந்து, தனது நிம்மதியான எதிர்காலத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறாள்.
அடுத்து ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சிக்கு கொண்டு போகும் என்கிறார், தொடரின் இயக்குனர்
ஜெயா டிவியில் மே 5 முதல் வார நாட்களில் இரவு 9 மணிக்கு வருகிறது காமெடி காலனி. கே.பாலசந்தர் காமெடியை மறுபடியும் சீரியலாக கொண்டு வந்துள்ளார். மாளவிகா, சச்சு, பாலாஜி என்ற பெரிய பட்டாளமே டைரக்டர் டி.ரங்கநாதனின் வழிகாட்டுதலில் சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றனர்.
கே.பி.,யின் லோகாவில் டிஜிட்டல் மாற்றம். ஆனாலும் முதல் குறளும் முன்பிருந்த இசையும் மாறவில்லை. எடுத்தவுடன் ஒரு ஜோக். பின் தொடர்வது டைட்டில். அதைத் தொடர்ந்து தொடர், இடைவெளி, பின் கடைசியில் மறுநாளின் டிரைய்லர். பின்னணி சிரிப்பு என்பது எல்லாரும் ஒரே மாதிரி பயன்படுத்துவர். அந்த சிரிப்பு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. இனி எல்லாரும் மாற்றுவார்கள். ஒவ்வொருத்தரும் வித்தியாசமான கேரக்டர்கள், அறிமுகப் படலமே பிச்சு வாங்குது. தாலிய காணோம், கடவுளே கடவுளே என அலறியபடி எழும் மாளவிகா அது தன் கழுத்தில் இருப்பதை கண்டு கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி அறிமுகமாகிறார். ஒரு புது யுக்தியை புகுத்தியுள்ளனர்.
யோசிப்பு, கோபம், ஆச்சர்யம் இப்படி உணர்ச்சிவயப்படும் கேரக்டர்கள் மேல் ஒரு லென்ஸ் வைக்கப்பட்டு நபரின் முகம் பெரிசு, சிறிசு, கோணல், வீங்கல் என பலபல பரிமாணங்கள் எடுத்து சிரிக்க வைக்கிறது. சில நடிகர்கள் லென்ஸ் பார்வைப்படும் போது பல நடிகர்களின் முகங்களை பார்க்க முடிவது கண்டுபிடி கண்டுபிடி பாணி க்விஸ் சிறப்பு. பாரதியார்தாச தாத்தா நல்ல விஷயங்களை நவில்கிறார். டாரட் ரீடிஸ், கரி நாக்கு, க்ரிஸ்டல் பால் ரீடிங் என பலதும் செய்யும் பெண். வாண்டுகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆல் ஏஜ் கூட்டம். ஐயோ, அந்த ரூல்ஸ் செக்யூரிட்டியும், அவரிடம் வந்து பண்ணும் பால் பையனும் பலே, பலே! தகவல் அறியும் சட்டம் உள்ளிட்ட நடப்பு விஷயங்கள் அனைத்து அங்கங்கே வருகிறது. அரைமணி ஆனந்தமாய் சிரிக்கலாம் வாங்க காமெடி காலனிக்கு!
ஜெயா டிவியில் . செவ்வாய் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது `என்ன பொருத்தம்' நிகழ்ச்சி.
சிறந்த ஜோடிகளை தேர்ந்தெடுத்து, அவர்களிலும் சிறந்த ஒரு ஜோடியை கவுரவிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இதற்கென சென்னை, கோவை, மதுரை நகரங்களில் சிறந்த ஜோடிகளுக்கான தேர்வு நடந்தது. இந்த நகரங்களில் சிறந்த தம்பதிகளுக்கான போட்டி நடந்தபோது சுற்றுப்புறங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஜோடிகள் கலந்து கொண்டார்கள்.
மூன்று மாவட்டங்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வடிகட்டியதில் இறுதியாக எஞ்சியிருந்தது 10 ஜோடிகள் மட்டுமே. இந்த 10 ஜோடிகளும் தங்களில் சிறந்த ஜோடி யார் என்பதை நிரூபிக்கும் இறுதிப் போட்டிக்காக சென்னை வந்திருந்தார்கள். சென்னை சோவியத் கலாச்சார மைய அரங்கில் தங்களைப் பற்றிய முன்னோட்டங்கள், விருப்பு, வெறுப்புகள், தம்பதியர்க்குள்ளான புரிதல் தன்மை பற்றி மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த 10 ஜோடிகளில் 3 ஜோடி காதல் மணம் புரிந்தவர்கள்.
போட்டியின்போது "கணவரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று மனைவியரிடம் கேட்கப்பட்டது.
"உங்கள் மனைவி எப்படி?'' என்று கணவர்களிடம் கேட்டார்கள்.
சிலர் யோசிக்காமல் சட்டென பதில் தந்தார்கள். சிலர் தங்கள் `பார்ட்னரை' கலந்து பதில் சொன்னார்கள்.
இந்த போட்டி இவர்களில் பல ஜோடிகளை நண்பர்களாக்கியிருக்கிறது. "போட்டிக்கு வந்த இடத்திலும் எங்களுக்குள் நட்பு பலப்பட்டது. போட்டி வரும். போகும். வெற்றி பெறுவது யாரோ ஒரு ஜோடிதான்! ஆனாலும் நாங்கள் நண்பர்களாக நீடிப்போம்'' என்று புவனா என்ற பெண்மணி சொன்னபோது அரங்கு அதிர கைதட்டல். கரகோஷம் செய்தவர்கள் பட்டியலில் இவரது கணவர் விக்னேஷும் இருந்தார்.
மதுரையில் இருந்து வந்த அழகர்சாமி - சிவமணி ஜோடியில் கணவர் தமிழ் ஆசிரியர். மனைவி குடும்பத்தலைவி.
"போட்டிக்காக வந்தாலும், சென்னை எங்கள் தேனிலவுப் பிரதேசமாகி விட்டது'' என்று வெளிப்படையாகச் சொல்லி அரங்கை குலுங்க வைத்தார் ஆசிரியர் அழகர்சாமி.
காலை 9 மணிக்கு வீட்டை விட்டு போகிற கணவர் மறுபடி கதவைத் தட்டுவது இரவு 10 மணிக்கு மேல்தானாம். மனைவி என்பவள் கணவனின் அன்புக்கு எப்படியெல்லாம் ஏங்குவாள்? என்பதை போட்டிக்கு வந்த இந்த நாலு நாட்களில் என் கணவர் உணர்ந்து விட்டார். என் உணர்வுகளை பங்கிட மனம் விட்டுப்பேசக் கிடைத்த வாய்ப்பில், "சீக்கிரம் வீடு வர முயற்சிக்கிறேன்'' என்றார். இந்த போட்டி என் கணவருக்கு என் முக்கியத்துவம் உணர்த்தியிருக்கிறது. இது போதாதா?'' நெகிழ்ந்தார், ஒரு குடும்பத் தலைவி.
தம்பதியர்க்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்தன. நம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரபுநேபால் கூறும்போது, "ஒரு தம்பதியரை பார்க்கும்போது தோற்றத்தில் மட்டும் `என்ன பொருத்தம்' என்று மற்றவர்கள் சொல்லும்படி இருந்துவிடக்கூடாது. பழகும் தன்மை, நட்புறவு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம், சின்ன விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அக்கறை இதெல்லாம் இணைந்த தம்பதிகள்தான் "என்ன பொருத்தம்!'' என்று கொண்டாடத்தக்கவர்கள். அப்படி ஒரு ஜோடியை கண்டறிவதே இந்த போட்டியின் நோக்கம்'' என்றார்.
இந்தப்பகுதியைப் படிக்கும்போது, எனக்கு தெரிந்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது...Quote:
Originally Posted by R.Latha
ஒருவர் சொன்னார்: "என்னுடைய இந்த விரைவான வளர்ச்சிக்கு என் மனைவிதான் காரணம்".
நண்பர் கேட்டார்: "எப்படி சொல்றீங்க?"
முதலாமவர் சொன்னார்: "அலுவலகத்தில் என்னுடைய மேஜையின் மேல் என் மனைவியின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அதைப்பார்க்கும்போதெல்லாம் 'வீட்டுக்கு சீக்கிரம் போகக்கூடாது' என்று தோன்றும். அதனால் அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி நிறைய வேலைகளைச் செய்ததால், எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த காலத்துக்கு முன்பே செய்து முடித்து, என் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று அதனால் என் புரமோஷனும் சம்பளமும் 'மள மள' வென உயர்ந்துவிட்டது".
saradha
:clap: :clap:
கர்நாடக இசை பிரியர்களுக்கு குஷி!
Quote:
ஆன்மீகம், கர்நாடக இசை இரண்டிலும் ஜெயா சேனலை அடிக்க ஆளில்லை. இதோ கர்நாடக இசை பிரியர்களுக்கு, கோடையில் விருந்தளிக்க வந்துவிட்டது,
கிளிவ்லேண்டு தியாகராஜ உற்சவம். அமெரிக்காவில் உள்ள இந்த நகரில் நடந்த இந்த வைபவத்தில் பிரபலங்கள் பாடியதை ஐந்தாவது ஆண்டாக ஒளிபரப்ப தயாராகி விட்டது சேனல். ரவி கிரண், ஸ்ரீகாந்தன், நெய்வேலி சந்தான கோபாலன், ஓ.எஸ்.தியாகராஜன், எம்.எஸ்.ஷீலா, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், விஜயலட்சுமி உட்பட கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நாளை ஆரம்பமாகிறது. திங்கள் முதல் வெள்ளிதோறும் காலை 6.30 மணி
little master
I happened to watch this program - Sunday evening (?)
little kids
what a performance
great dance
:clap: :clap:
judges:
Raguram & Kuyili (the dancer introduced by KB)
ஜெயா டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `தகதிமிதா' நிகழ்ச்சி 250 எபிசோடுகளை தொட்டிருக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும் பாதுகாக்கவுமான கலைத் தொண்டுதான் `தகதிமிதா' நிகழ்ச்சி. உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே சாஸ்திரிய நடன கலை மீது அமைக்கப்பட்ட ஒரே கேம்ஷோவும் தகதிமிதா தான்.
இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான பானுப்பிரியா, ஷோபனா, சுகன்யா, விமலா, இந்திரஜா, `அண்ணி' மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.
ஜெயா டிவியும் முகூர்த்தம் நெட் திருமண இணையதளமும் இணைந்து ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை 7.30 மணிக்குநடத்தும் முகூர்த்த நேரம் நிகழ்ச்சியை டிவி நடிகை மீராகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் திருமணம் மற்றும் இல்லற சம்பந்தமான விளக்கங்களை அளிக்கிறார். மனநல ஆலோசகர் முனீஸ்வர சாஸ்திரிகள் இந்து மத திருமணம் பற்றி பேசுகிறார். இந்து மத திருமண சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி சட்ட ஆலோசகர் விஜய் ஆலோசனை வழங்குகிறார். திருமணத்திற்கு முந்திய மனோதத்துவ ரீதியான ஆலோசனைகளை மன நல ஆலோசகர் சரஸ்வதி பாஸ்கர் வழங்குகிறார். திருமணம் சம்பந்தமான ஜோதிட ஆலோசனைகள், ஜாதககணிப்பு, ஜாதகத்தில் தோஷம் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய எளிய பரிகார ஆலோசனைகளும் முகூர்த்த நெட்டில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம் சென்னையில் பிரமாண்ட சுயவரம் நிகழ்ச்சியையும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயா பிளஸ் சானலில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஹலோ டாக்டர் இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு மணி நேரம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. நேயர்கள் தொலை பேசி வழியாக தங்களது சந்தேகங்களை கேட்கலாம். அவர்களுடைய நோய் குறித்த மருத்துவ ஆலோசனை விரிவாக சொல்லப்படும்.
தொகுப்பாளர் அன்றைய மருத்துவ தலைப்பு குறித்து நன்கு அறிந்து அதை ஒட்டிய கேள்விகள் மட்டுமே எழுப்புவார். இதன் மூலம் நேயர்கள் தங்கள் நோய் குறித்த முழு தகவல்களும் அறிந்து கொள்ள முடியும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பார்கள்.
Quote:
Ennodu Pattu padungal -2 Grand Finale is on July 13th and 20 at 8 pm in Jaya TV. SPB, Director Vasanth and Music director Ramesh Vinayagam will be the Judges
Quote:
HariGiri Assembly, aired on Jaya TV, weekdays, 19.00., will roll out its 50th episode this week. Hosted by Bosskey and Sethu, the show comes with many interesting segments. This is a show were the participant willingly put himself/herself to the ridiculing but comical bombardment of the duo and are also given a chence to retaliate. This show is a hit. Anu Hassan joins them as a special guest this week.
Quote:
Dance Jodi Dance,’ the dance show on Jaya TV, reaches its finals, to be aired on Wednesday,June 16th 21.30. Actor Suja and choreographer Nobel are the special judges who will review the performances of the contesting pairs.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜெயா சேனலில், பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டி நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
23ம் தேதி இரவு 9.30 க்கு நடக்கும் நிகழ்ச்சியில், யாருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு என்பது தெரிந்து விடும். நடிகர் ராம்ஜி தொகுத்து வழங்கும் இதில், சிறப்பு நடுவர்களாக நடிகை சுஜா, நடன இயக்குனர் நோபல் பங்கேற்கின்றனர்.
ஜெயா சேனலில், லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 2 இறுதிப் போட்டி களை கட்டி விட்டது. முழுக்க முழுக்க குழந் தைகள் பங்கேற்கும் கலக்கல் நிகழ்ச்சியான இதில், ஆறு மாத கடும் போட்டிக்கு பின், இறுதிப் போட்டியில் பாடும் ஆறு , ஆடும் ஆறு குழந்தைகள் இருந்தனர்.
எந்தக்குழந்தைக்கு மகுடம்? எந்த குழந்தை மனதை கவர்ந்தது? வெற்றியா ளர்களை பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுத்தனர். நடன கலக்கல் களை இன்று இரவு 9 மணிக்கு பார்க்க மறக்காதீங்க.
ஜெயா சேனலில், லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 2 இறுதிப் போட்டி களை கட்டி விட்டது. முழுக்க முழுக்க குழந் தைகள் பங்கேற்கும் கலக்கல் நிகழ்ச்சியான இதில், ஆறு மாத கடும் போட்டிக்கு பின், இறுதிப் போட்டியில் பாடும் ஆறு , ஆடும் ஆறு குழந்தைகள் இருந்தனர்.
எந்தக்குழந்தைக்கு மகுடம்? எந்த குழந்தை மனதை கவர்ந்தது? வெற்றியா ளர்களை பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுத்தனர். நடன கலக்கல் களை இன்று இரவு 9 மணிக்கு பார்க்க மறக்காதீங்க.
தகதிமிதா
ஜெயா சேனலில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தகதிமிதாவின் 250வது நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
பிரபல நடிகைகள் தொகுத்து வழங்கிய, 1,500 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் 250வது நிகழ்ச்சி சமீபத்தில் பலர் முன்னிலையில் நேரடியாக நடந்தது. வைஜெயந்திமாலா பாலி பங்கேற்றார். இதில் பல நடனக்கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். இதை இன்று காலை 8 மணிக்கு காணலாம்.
LIFE HISTORY OF CRICKET PLAYER‘CHANDRASEKARAN.
Famous Cricket player Chandrasekar’s life history is going to be telecast through the Jaya Tv Channel. The history of the cricketer from his childhood days has been planned by the Channel. The Indian Team bowler’s achievements in various test matches in which he participated, all will be appearing in this slot. It is a 26-week programme will be broadcast on all Sundays at 11 Am.
The Director of this programme Mr. Haricharan said, “ this not a documentary but somewhat like a mini serial. Chandrasekar’s grand father, father and relatives are going to share their experiences with him and they will tell his activities and how he read the cricket. So they are going to show Chandrasekar as a Childhood, as a student, as a young chap and present Chandrasekar. Present man is Chandrasekar himself acting’.
So the programme will reach the viewers in a different angle.
Quote:
"தகதிமிதா' -250 வது பகுதி
சாஸ்திரிய நடனக் கலைகளை மையமாக வைத்து ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "தகதிமிதா' நிகழ்ச்சி, நேயர்களின் சிறப்பான வரவேற்போடு 250 வது எபிúஸôடை எட்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகைகளும் நடனக் கலைஞர்களுமான ஷோபனா, பானுப்ரியா, சுகன்யா, விமலா, இந்திரஜா, மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், இந்த நிகழ்ச்சியின் மூலம் பாராட்டும் பரிசும் பெற்று பிரபலமாகியுள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் 250-வது எபிúஸôடுக்கு வைஜெயந்திமாலா பாலி தலைமையேற்கிறார். பத்மா சுப்பிரமணியன், சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி ரகுபதி, தனஞ்ஜெயன், சரஸ்வதி, பார்வதி ரவி கண்டசாலா, முரளிதரன், திவ்யசேனா, ஷீலா உன்னிகிருஷ்ணன், மதுசூதனன் போன்ற பிரபல நாட்டியக் கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் சிறப்பு நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
Quote:
நாம சங்கீர்த்தனத்தில் சிகரமாக இருப்பது அஷ்டபதி. அருள் நேர சிறப்பு நிகழ்ச்சியாக இதை ஜெயா சேனல், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை ஆறு மணிக்கு ஒளிபரப்புகிறது.
ஜெயதேவ சுவாமிகள் அருளிய, கீத கோவிந்த மகா காவியம் அஷ்டபதியை வழங்குவது, உடையாளூர் கல்யாணராம பாகவதர்.
நினை வலைகள்
Quote:
இசைக்கென்று பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.யின் புதிய படைப்பு நினைவலைகள்.
பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த வித்தியாசமான பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்.
இந்த வாரம் நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 9 மணி நிகழ்ச்சியில் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா பங்கேற்கிறார். திரை இசையில் தன்னை கவர்ந்த பாடல்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் அவரது அனுபவத்தையும் இசையோடு பகிர்ந்து கொள்கிறார்.
என்னோடு பாட்டுப்பாடுங்கள்-4
Quote:
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜெயா டிவியில் வழங்கும் "என்னோடு பாட்டுப்பாடுங்கள்'' நிகழ்ச்சியில் இளம் பாடகர், பாடகிகள், திருமணமான இல்லத்தரசிகள் என இதுவரை 3 பகுதிகள் அரங்கேறியுள்ளன.
இதன் வரிசையில் தற்போது மேடைக் கச்சேரிகளில் பாடுவதை தொழிலாக கொண்ட பாடகர், பாடகிகளுக்காக இப்பொழுது `டூயட் சீரிஸ்' என 4-வது பகுதி தயாராகிறது.
இன்று முதல் இந்த "டூயட் சீரிஸ்'' இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜெயா டிவியில் 20-20
Quote:
புத்திசாலியான இளம் பெண்களுக்கு விரைவில் ஜெயா டிவியில் `20-20' எனும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
`20-20' இது கிரிக்கெட் இல்லை! அதை விட சுவாரஸ்யமானது.
முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய ஒரு எளிமையான பொது அறிவுப் போட்டி.
ஒரே நேரத்தில் 20 பெண்கள் பங்கேற்க முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படி வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உண்டு.
`அனு ஹாசன்' தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Quote:
ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் புதிய திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டின் சிறந்த டாக் ஷோவுக்கான "ராபா' விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி வரும் வாரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Quote:
இசைப் பிரியர்களைப் பெரிதும் ஈர்த்து வரும் ஜெயா டி.வி.யின் "சொக்குதே மனம்' நிகழ்ச்சி, வரும் வாரத்திலிருந்து புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. காலத்தால் அழியாத பல பாடல்களை அதே வசீகரத்துடன் ப்ரியா சுப்ரமணியம் குழுவினர் பாடி வருகிறார்கள்.
Quote:
பிள்ளையார் சதுர்த்தியை வழக்கம் போல சேனல்கள் கொண்டாட, இந்த முறை ஜெயா "டிவி'யின் இரு நிகழ்ச்சிகள் மட்டும் தனியாக தெரிந்தன. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்கு ஏற்ப "இசை வாயில்' என்று ஒரு நிகழ்ச்சி வந்தது.
. நவ வாலிபர்கள் சிவப்பு, வெள்ளையில் ஒரே மாதிரி குர்தா அணிந்து வாத்தியங்களே இல்லாமல் பாடல்களை வாத்திய எபக்டில் பாடினர். புகழ்பெற்ற பாடல்களான "தாய் மண்ணே வணக்கம், மகாபாரத சீரியலின் டைட்டில் பாட்டு' என்று இவைகளோடு கர்நாடக மற்றும் சினிமா பாடல்களையும் பாடினர். அவர்கள் விதவிதமாய் வாயை அசைத்ததும், அசாமி இளைஞன் போல ஒருவர் இருந்ததும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித சிகை யலங்காரம் செய்து இருந்ததும், பாடுவதற்கேற்ப மைக் முன் நகர்ந்து வந்து பாடுவதும் போவதும், ஒரே அசைவினில் ஆடுவதும் என அசத்தினர். மாறுபட்ட முயற்சி என்பதால், ஜெயா "டிவி' அரங்கினை பேப்பர் மாதிரிகளை கொண்டு பல வண்ணங்களில் அமைத்திருந்தது. அவர்கள் பாடுமுன் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவதும், புகை கிளம்புவதும், இருட்டாய் இருப்பதும் என, தங்கள் பங்கிற்கு மாறுபட்டனர்.* உயரமாய் மைக், தலைக்கு மேல் மைக், முன்னாடி மைக் என மைக்கிற்கே ஏகப்பட்ட ஏற்பாடு.
Quote:
ஜெயா சேனலில் ஞாயிறு தோறும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் குஷ்புவின் ஜாக்பாட் நிகழ்ச்சி, புதிய வண்ணமய அரங்குகளில் படம்பிடிக்கப்பட்டு,..
டிஜிட்டல் போர்டின் மூலம் இனி வரும் வாரங்களில் வசீகரிக்கும். ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த கேம்ஷோவுக்கு மவுசு கூடிக் கொண்டேயிருக்கிறது.
Quote:
நவராத்திரி பிரமோற்சவம்
பிரம்மனால் தொடங்கி வைக்கப்பட்டது திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஸ்வாமி பிரம்மோற்சவம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தெய்வீகத் திருவிழா, இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்துடன் இணைந்து அமைகிறது.
அங்குரார்ப்பணம் (விதையிடுதல்), கொடியேற்றம், பெரிய சேஷ, சிறிய சேஷ, ஹம்ச, சிம்ம முத்துப்பந்தல், கல்பவிருட்ச, சர்வ பூபால, தந்தப்பல்லக்கு (மோகினி அவதாரம்), கருட, அனுமான், கஜ, சூர்ய, ப்ரபை, சந்திர ப்ரபை அசுவ ஆகிய வாகனங்களில் திருமலைத் தெய்வத்தின் அருள் உலாவும் தங்க ரதம், தேர்த் திருவிழா, சுக்ர தீர்த்தம், கொடியிறக்கம் மற்றும் நாள்தோறும் இடம்பெறும் ஸ்நபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுடனும் அற்புதமான பாசுரங்கள், பாடல்கள், வர்ணனைகள், தெய்வ திருக்காட்சிகளுடனும் திருவருள் திருவிழாவை வழங்கி வருகிறது, ஜெயா டி.வி.