நகரம் நழுவி நரகமானதோ இல்லை
கண்ணன்களின் ரகளை நரகமாக்கியதோ....
Printable View
நகரம் நழுவி நரகமானதோ இல்லை
கண்ணன்களின் ரகளை நரகமாக்கியதோ....
கோபாலின் கவிதையில் எதுகை அருமை! எத்தனை சங்கதிகள்! எவ்வளவு ஆற்றாமை, ஆத்திரம்! ம்ம்ம்ம்....
போய்விட்டு வந்தால் ஏகக் கவிதைகள்..எல்லாமே அழகு.. ஐ திங்க் தி லாஸ்ட் லைன் ஷீட் பி ஆஸ்திகர்.. இதுலருந்து ஆரம்பிக்கணும்..
//கோபாலின் கவிதையில் எதுகை அருமை! // கடைசியில் அயல் நாட்டுக்குப் பார்க்க ப் போன அம்மா பதினெட்டு மாதம் இருந்துவிட்டு சமைத்துப் போட்டுவிட்டு வருகிறார்- இது தான் கருவா.. கொஞ்சம் குழப்பம் தான் எனக்கு..:)
ஆமாம், 'ஆஸ்திகர்' தான் அடுத்த சொல். சி.க.வுக்கு ஏன் குழப்பம்? கோபால் சரியாய்த்தான் வர்ணித்திருக்கிறார் யதார்த்தத்தை. ஆனால் பல பெற்றவர்கள் தெரிந்து, விரும்பி அப்படி இருந்துவிட்டு வருகிறார்கள்!
சி.க,
கவிதையின் அடிநாதம் .... வயதான பிறகு ஆசை அதிகரிக்கும் ஒரு தலைமுறை. இளைய தலைமுறையின் நிழலில் அபிலாஷை நிறைவேறுமா என்று அலைந்தாலும், சொந்தத்தை சுயநலத்துக்கு பயன் படுத்தி தூக்கி எரியும் இளைய தலைமுறையால் ஆசைகள் அறுந்து ,பற்றற்று இருக்க விரும்பினாலும் ,அடுத்த அழைப்புக்காய் ஏங்கும் முடிவில்லா சுழற்சி.
நன்றி கோபால்.. விளக்கத்திற்கு..புரிகிறது இப்போது தெளிவாக..என்னாமாதிரி கரு..நைஸ் அண்ட் தாங்க்ஸ்..சிறுவனுக்கும் புரியும்படி எழுதியதற்கு..
பட் வயசானா அப்படித்தான் ஆகும்னு நினைக்கறேன்கோபால்.( நீங்கள் கூறிய வகையில் இருப்பவர்கள் இந்தக்காலத்தில் மிகச் சிலரே..).என்ன தான் காசு பணம் துட்டு மணி மணின்னு சேர்த்து வச்சாலும்.. இட்ஸ் நாட் மணி.. ஆர் இடம் அப்படியாவது புள்ளையோட பொண்ணுங்களோட சேர்ந்து இருந்துட்டு வரலாம்னு நினைக்கறவங்க அதிகம்..அதுலயும் சில பேர் ( எனக்குத் தெரிந்த) இங்க மஸ்கட்ல கூட பையனோ பொண்ணோ அவங்களோட முதல் ப்ரசவத்துக்கு வருவதோடு சரி..வெளியவா..இந்த ஊர்லயா எதுக்குங்க கண்ணன் சார்..இந்தக் காம்பெளண்ட் இருக்கு வாக் பண்ண..வந்தது குழந்தையைப்பார்த்துக்க.. அவ்ளோ தான்..தென் நமக்கு மடிப்பாக்கம் தான் சாஸ்வதம் எனத் தெளிவாகச் சொன்னவர்களும் உண்டு..அடுத்த பிரசவத்துக்கு அப்பாவைக் கூப்பிடலையாம்மா.. இல்ல அங்க்கிள்..அவருக்கு வெயில் ஒத்துக்கலையாம் பாருங்க.. பையனுக்குத்தங்கத்துல சங்கிலி வாங்கிவச்சுருக்காராம்.. வர்றச்சே போடுவாராம்..யாருக்கு வேணும்.. அவர் வந்து என் கூட இருந்தா போதும் எனச் சொன்ன மகள்களும் உண்டு..
//என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்// ச்ச் வருத்தப்படாதீங்க சார்..உங்க நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் :)
பாவ புண்ணிய கவிதையும் பொருத்தமான படமும் சூப்பர்!!!