https://scontent.fybz1-1.fna.fbcdn.n...db&oe=5A36B73D
Printable View
balaji sethuraman
கலைக்கடவுளின் சிலையை
அகற்றியதைக் கண்டித்தும்
அதே கடற்கரைச்சாலையில்
மீண்டும் வைத்திட வலியுறுத்தியும்
ஒருநாள் அடையாள...
உண்ணாநிலை......
17.08.2017
கலைக்கடவுளி னுருவச்சிலையை
அகற்றியதைக் கண்டித்துமருத
மலையாண்டவ னாட்சிசெய்யும்
கொங்குதமிழி னாதாரமான
தென்னாட்டின் மான்செசுடர்
நகரத்தி லுண்ணாநிலை
மென்மையான முறையில்
அனுசரிக்கப்பட்டது.
அறவழியிலின் றருந்தலைவர்
காட்டியவழி நடந்தவனுக்கு
கறந்த பாலொத்தத்தூய
மனங்கொண்டவ ரிணைந்து
அவரதுருவச்சிலை யகற்றியதற்கு
பலமானக் கண்டனங்களைத்
தவறியுமடுத்தவர் மனங்கோனாது
தெரிவித்தனர்.
மட்டந்தட்டு மெண்ணத்தில்
கலைக்கடவுளி னுருவச்சிலையை
நட்டநடுநிசியி லெடுத்தெங்கோ
வைத்ததைக் கண்டித்துமதை
கடற்கரைச் சாலையிலேயே
அறப்போராட்டக் கல்விக்
கடவுளருக்கிடையில் வைத்திடவும்
வேண்டிக்கொண்டனர்.
தங்களருமைக் குடும்பத்தைக்
குலவிளக்கைக் குடும்ப
அங்கத்தினரைப் பிரிந்தொருநாள்
அடையாள வுண்ணாநிலை
அனுசரித்தனைத்துக் கலைக்
கடவுளின் செயல்வீரர்களை
மனுசவுருவிலான கடவுளென்றே
கைதொழுகிறேன்.
என்னாலந்த வுண்ணாநிலை
நாளில்பங்கெடுக் கியலவில்லை
என்னருமை மன்றமறவர்கள்
திடமனதோடு துய்த்தனர்
கோயிலுக்குச் செல்லாவிட்டாலும்
தரிசித்தவருடன் மானசீகமாக
போயிருந்ததா யெண்ணியுங்களை
வணங்குகிறேன்.
தேசப்பற்றையும் நாட்டுப்பற்றையும்
தன்னுடல் மொழிமூலமாகப்
பேசிநடித்தவனுக் கடையாள
உண்ணா நிலையிருந்த
நேசமுள்ள மன்றத்து
மறவர்க்கு மிந்தியாவின்
தேசிய காங்கிரசுக்கும்
நன்றிகள்பல.
கலைக்கடவுளின் சிலையை அகற்றியதைக் கண்டித்தும்
அதை மீண்டும் கடற்கரைச்
சாலையிலே அண்ணல் காந்தி சிலை மற்றும் கர்மவீரர் காமராஜர் சிலைக்கும் நடுவில் வைக்க வேண்டும் என
வலியுறுத்தி ஒருநாள்
அடையாள உண்ணாநிலை இருந்த
அனைத்து அன்னையில்ல மன்றத்து மறவர்களுக்கும் விழாவினை ஏற்பாடு செய்த கோவை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிகள்....
நன்றிகளுடன். .....
V.கஜேந்திரன். M.A.,B.lit.,
HM.
C.குப்புசாமி,M.சேகர். ,
M.பிரபுதுரை,M.ரிச்சர்டு, P.சுப்பிரமணி,V.ஜெகன்,
S.அதிசயநாதன்,M அமுல்,
E.மகாதேவன்.B.A.
அனைத்து அன்னையில்ல மன்றங்கள்.
சான்றோர்குப்பம். ஆம்பூர்.
வேலூர் மாவட்டம்.
நன்றிகள் திரு.கஜேந்திரன் & நண்பர்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ac&oe=5A32A185
jahir hussain
சிவாஜிதானே,,, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம்,,, ஏசிவிட்டுப் போகலாம் என்று சில மங்கூணிகள் நினைக்கிறார்கள்,,, சிவாஜி ரசிகன் "விறகுக்குள் நெருப்பாக" இருக்கிறான்,,, என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்,,, ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,,, சிவாஜி அவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல நாங்கள்... அவரது "மாணவர்களும்" ஆவோம்,, 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக அவரை நேசித்து வாழ்கிறோம்,... இளம் வயது பிள்ளைகளுக்கு சிவாஜி எனும் பாடநூல்களை ப...யிற்றுவிக்கக் காத்திருக்கிறோம்,,, ஒப்பீடு செய்து சிவாஜி அவர்களை உணர்ந்து கொண்டவர்கள் இன்றைய நிலையில் நிறையபேர் உருவாகி விட்டார்கள்,,, ஆகவே சிவாஜியை நகையாடும் நாசகார வேலையை செய்யாதீர்கள்,,, அந்த சகாப்தத்தின் இன்றைய தேவையை புரிந்து கொள்ளுங்கள்,,,, "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்கிற முதுமொழிக்கு ஏற்ப ஆட்சி நடத்தியவர் காமராஜர்,,, "என் பணி அந்த மஹானை அடியொற்றி நடப்பதே" என்று தொழுதவர் சிவாஜி,,, ஆகவே நாட்டுக்கு நல்லது நிலைபெற நினைக்கும் குடிமக்கள் சிவாஜி என்ற மந்திரத்தை ஜெபிக்கத் தயங்க வேண்டாம்,,, அந்த மந்திரங்களே ஆண்டாள் தேவனுக்கு பூமாலை தொடுத்து போல ஆகும்,,, ஆகவே இன்றைய நாடு நலம் விழைய காமராஜர் போட்ட பாதையில் சிவாஜி என்கிற பழுதற்ற வாகனத்தில் ஏறிச் செல்வோம்,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ef&oe=59EBAAEA