ராகவேந்திரன் சார்,
நிதர்சனமான உண்மை. மிக மிக மிக மிக மிக மக பிடித்தமான பாடல். இப்போதே எழுத கை துடிக்கிறது. பாலா பாடல்கள் முடிந்த மட்டும் வரிசையாக வருவதால் இதைப் பற்றி பின்னால்தான் எழுத வேண்டி வரும்.
கல்நாயக் ஒருமுறை கடலூரில் கமர் திரை அரங்கில் 'கண்ணாமூச்சி' படம் பார்த்ததாக எழுதியிருந்தார் . நல்ல ஞாபகசக்தி அவருக்கு. அங்குதான் ரிலீஸ். மறக்க முடியாத படம். சக்கை போடு போட்டது.
இந்த பாடலைப் பற்றி மிகச் சிறப்பாக எழுத வேண்டும்.
மிகப் பெரிய பரிசாக இப்பாடலை நான் பெற்றுக் கொள்கிறேன். நன்றி ரசிக வேந்தரே! அப்படியே இளைய பிறவிகளுக்கும் ஒரு 'ஓ'