-
கலை நிலவு' ரவிச்சந்திரன்(Thanks Sardhaji for Good Start )
இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.
முதல் படத்திலேயே கதாநாயகன்
முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்
முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்
முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்
1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).
காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.
-
வரப்பிரசாதம் -1976
https://www.youtube.com/watch?v=fEXasWd3ol8
ரவியின் பிற்கால படங்களில் குறிப்பிட பட வேண்டிய படங்களில் ஒன்று. மாதங்கன் (காலம் வெல்லும் புகழ்) கதை -வசனத்தில் ,கே.சங்கரின் தம்பி கே.நாராயணன் இயக்கிய வெற்றி படைப்பு. ஜெயசித்ரா ஜோடியாக, விஜயகுமார் துணை நாயனாக நடித்தது.கோவர்தன் இசையில்(இளையராஜா துணை) கங்கை நதியோரம் மிக மிக பிரபலம்.
ஒரு குடும்ப பொழுது போக்கு திரில்லர் வகை விறுவிறுப்பான படைப்பு. ஒரு அசம்பாவித கொலையில் தன்னையும் ,தன்னை சார்ந்தவர்களையும் காக்க ,தன் நண்பன் சந்தர்ப்ப வசத்தால் மாட்டி கொண்டும் அவனை காக்க துணை போகாத நண்பனின் காதலி,பழி சுமந்து சிறையில் இருந்து தப்பிக்கும் நண்பனுக்கே விதிவசத்தால் மனைவியாகி (ஜட்ஜ் பெண் ),பழியை துடைத்து ,உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதை.
ரவியை பற்றி சொல்லவே வேண்டாம். அமைதியான,இதமான,அளவான நடிப்பு. சற்றே முதிர்ந்த ,அழகிய தோற்றம் ,கனிந்த நடிப்பு திறனுடன், ஜெயசித்ரா போன்ற நல்ல நடிகையின் துணையுடன் நமக்கு full meal கிடைக்கும்.
மறைந்து வாழும் ,சந்தர்ப்ப வசத்தால் கணவனாகி விட்ட ,ரவியை காண வரும் ஜெயசித்ரா ,விரக்தியுடன் விலகும் கணவனை,தன்னுடைய உண்மை அன்பையும்,தன்னுடைய இறுக்கமான உணர்ச்சியையும் உணர்த்தி,கானகத்தில் இணையும் ஜோடிகளின் சோக-சுக கீதம் கங்கை நதியோரம். அற்புத சூழ்நிலை பாடல் மற்றும் இதமான ஜோடியின் நடிப்பு.
https://www.youtube.com/watch?v=vdy6TG6QSP0
-
மஞ்சள் குங்குமம்.-1973
ஒரு தரமான படம்.(மூலம் மலையாளம்) ரவி-ஷீலா தம்பதியினரின் சொந்த தயாரிப்பு.
"புகுந்த வீடு "புகழ் பட்டு (பட்டாபிராமன்)கிருஷ்ணன்-பஞ்சுவின் உறவினர் இயக்கம் ,சங்கர்-கணேஷ் இசையில் ரவி-ஷீலாவின் தரமான நடிப்பு இவை இருந்தும் பழைய மலையாள வாசனையால், குலவிளக்கு போலவே படம் கொஞ்சம் எடுபடாமல் போனது.
இன்று ஞாபக மிச்சமாக டி.எம்.எஸ் இந்த கோமாளி கட்டி வச்ச பாடலும்(ரவியின் trade mark அட்டகாச நடனம்),எஸ்.பீ.பீயின் என் காதல் கண்மணி (ஹீரோ செம ரொமான்டிக் மூட்,ஹீரோயின் வியாதி தீவிரத்தால் பாதி சாவில்) என்ற வித்தியாச களம் .
https://www.youtube.com/watch?v=TaYnSYKvYdc
https://www.youtube.com/watch?v=iGDLklzLT_Y
-
டில்லி மாப்பிள்ளை-1968.-
அந்த காலத்தில் வந்த தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கொக்கரிக்கும் வில்லன்கள் கிடையாது.பரபரப்பு கிடையாது.கிச்சு கிச்சு காமெடி கிடையாது.சுத்தமான காதல் காட்சிகள். உயர்ந்த ஒரு கரு பொருள். சோசலிசம்,தொழிலாளர் உரிமை,எல்லா வேலையிலும் கண்ணியம்,சமத்துவம், என்று உரத்து சொல்லாமல் தணிந்து சொன்னது.
நாம் தேவன்(இயக்குனர்),மா.ரா, ரவிச்சந்திரன் ,வீ.கே.ஆர்(தயாரிப்பு),கே.வீ.எம் ஆகியோருக்கு கடன் பட்டுள்ளோம்.
இந்த படம் பார்க்க என்னை தூண்டியவை இரண்டு பாடல்கள். ஒன்று நம்பிள்க்கி சொல்றதை நிம்பிள்க்கி கேட்டுக்கோ என்ற டி.எம்.எஸ் இன் அட்டகாச ஈட்டி கார பாடல். மற்றது கஸல் பாணியிலான தத்துவ பாடல் ஆண்டவன் ஒரு நாள்.
இவற்றிற்கு என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ரவியின் அறிமுக காட்சியே அட்டகாசம். தொழிலாளர்களுக்குள் நடக்கும் மாறுவேட போட்டியில் ,இவர் புகுந்து அதகள ஈட்டிக்கார பாடல். இதில் உண்மை குறத்தி மனோரமா வந்து எல்லோரையும் குழப்புவது அட்டகாச படித்தவர்களின் நகைசுவை.
அப்பாவை மாற்ற முடியாத ரவி,உழைத்து சாப்பிட முடிவு செய்து போவது, வீ.கே.ஆர் பாத்திரம்,அவர் தங்கை பாத்திரம்,என்று எல்லாமே நல்ல பாத்திரங்கள்.
மேல் குறிப்பிட்ட பாடல்களை தவிர பாடாத பாடல் இது, மலை முடியின் பனி அழகு என்று மாமாவின் வித்தியாச மெலடி.ரவியின் பாத்திர பொறுப்புணர்ந்த அளவான செறிவான நடிப்பு.
படம் தேவையற்ற சுவாரஸ்யமற்ற காமெடி , தேவையற்ற நீளம், கூறல் (ஒரு கட்டத்தில் நகராமல் உட்கார்ந்து விடும்) இவை இந்த படத்தை சுமார் வெற்றி ஆக்கியது.
https://www.youtube.com/watch?v=QlV9MyoI5e0
-
ரோஷக்காரி என்னும் பெயரில் வந்த மதுரை திருமாறன் என்ற ஏழைகளின் கே.எஸ்.ஜீ (poor man 's K .S .G.)படத்தில் ரவிக்கு கொஞ்சம் எதிர்மறை பாத்திரம்.பிராதன நாயகன் அவரே.பாத்திரமறிந்து பரிமளிப்பார். பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். இந்த மாதிரி சாதா படங்களை ஸ்பெஷல் படமாக்கியது
ரவிசந்திரன் தனது பாணியில் இருந்து முற்றும் மாறுபட்டு ,கதாசிரியரின் எண்ணப் படி நடித்த படம். நீண்ட படம். நிறைய நாடகத்தனம். crude என்றும் Crass என்றும் உதறி தள்ளி விடலாம்.
அப்படி செய்ய முடியாமல் தடுக்கும் ஒரே விஷயம் ,ரவி சந்திரன்.ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய தேவைகள்,ஆசைகள் ,பிரதானங்கள் இவற்றை தெளிவாக வெளியிடுவதுடன்,இவரின் மாறும் தேவைகளை புரிந்து அனுசரிக்காமல் சுமையாக மாறும் சொந்தங்களிடம்,குடும்பத்தின் மருமகளாக மட்டும் செயல் படும் விஜயாவிடம், முரண் என்பதை விட,சண்டை என்பதை விட drift என்பதை நடிப்பால் உணர்த்துவார்.
ரவி வெறும் சண்டை,நடன நாயகனல்ல,ஆழமான nuance காட்டும் நடிப்பு சுரங்கம் என்பதையும் விளக்கியது. இவரின் மைனஸ் பாயிண்ட் குரலை இவர் சாதகமாக உபயோகிக்கவும் கற்றார்.
-
சிறு வயதில் எனக்கு இரண்டு பாடல்களின் மீது மகா ஈர்ப்பு. ஒன்று தாராபுரம் சுந்தர்ராஜன் பாடிய மாடி வீட்டு மாப்பிள்ளை நான்
மறக்கல்ல,இன்னொன்று சௌந்தரராஜன் பாடிய ஜியா ஜியா மஸ்ஸாஜி,. கண்ணை மூடி கொண்டு கே.வீ.எம் இசை என்று நம்பி கிடந்தேன்.இந்த படம் வெளியான பார்க்க முடியவில்லை.பிறகு 1973 இல் ஒரு கீத்து கொட்டகையில் (திருவிடைமருதூர் ஸ்ரீதரன்??)பார்த்த ஞாபகம்.
எனக்கு எப்போதுமே டைட்டில் பார்க்கும் வழக்கம் உண்டு. இந்த படம் மூலக்கதை சதாசிவ ப்ரம்மம் ,இயக்கம் சாரி என்று சைவ-வைணவ -ப்ரம்மன்களின் இணைப்பு.வசனம் ஏ.எல்.நாராயணன் என்று நினைவு.
இதில் surprise package ,,அமர தீபம்,மீண்ட சொர்க்கம் படங்களின் இசையமைப்பாளர் சலபதி ராவ் இசை. மேற்சொன்ன பாடல்களுடன் கேட்டு பார், பகலிலே என்று பல ஹிட் பாடல்கள்.
இதிலும் ரவி, டில்லி மாப்பிள்ளை போன்று மாறுவேட போட்டியில் முதல் அறிமுக காட்சி. ரவியின் மாமா(வீ.கே.ஆர்), நல்ல மனம் கொண்ட பணக்காரர் சுந்தர்ராஜன்,அவரின் வில்லி மனைவி, மனைவியின் வில்லி அண்ணன் , அந்த அண்ணனின் வில்ல பையன், நாயகனின் இறந்து விட்டதாக கருத படும் தங்கை வில்லனின் காதலி ,வீ.கே.ஆரின் வீட்டோட மாப்பிள்ளை நாகேஷ் (காமெடி ,நாயகனின் உதவி) மாடி வீட்டு வீட்டோட ஏழை மாப்பிள்ளை ரவி ,அவர்களுக்குள் மூட்டி விட வீட்டோட வில்லன்கள் என்று யூகிக்க கூடிய கதை மற்றும் சம்பவங்கள்.
இதை மீறி படத்தில் நம்மை கட்டி போடுவது ரவி. சுந்தர்ராஜனின் பேச்சை மதித்து ,பணத்தை மதிக்காவிட்டாலும்,உறவுகளை மதித்து,அவமானம்,பழி இவற்றை சுமந்தும் ஓடி விடாமல்,உறவுகளை விட்டு கொடுக்காமல் அணைத்து பாலன்ஸ் பண்ணும் பாத்திரம்.வில்லன்களை கலாய்க்க பட்டா கத்தி பக்கிரி என்ற மாறுவேடம்.
இதே மாதிரி வேடத்தை பலர் ஏற்றாலும், நம்மை ரவியை மட்டுமே ஏற்க வைத்தது , நிஜ இளமை,சுறுசுறுப்பு,அமெரிக்கை-அட்டகாசம் என்று கதையோடு பயணிக்கும் நடிப்பு, தன்னை பற்றி புகழ்ந்து இமேஜ் ஏற்றும் அம்சங்கள் இல்லாத தன்மை (நம்மை கடுப்படிக்கும் தற்புகழ்ச்சி இருக்கவே இருக்காது) இவையே ரவியை நாம் ஏற்று ,சராசரி படங்களிலும் நம்மை கட்டி போட்டன. இதனால் அப்போது action ஹீரோ நடிகர்களின் தன்மை கொண்ட படங்களையே ரவி பண்ணும் போதும் நமக்கு பிடித்தது.
-
மறைந்த கலைச்செல்வியும் ,கலையுலக இளவரசன், இளைஞர்களின் கலைநிலவு ரவியும் இணைந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல், அவளுக்கு ஆயிரம் கண்கள் வரை சுமார் 11 படங்களில் இணை. ரவிக்கு சரியான இணை என்றால் பாரதி, காஞ்சனா தவிர்த்து காலை செல்வி தான். விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடல் எந்த இலக்கணத்திலும் அடங்காது. டி.எம்.எஸ் -சுசீலா பாடிய விதமும் அப்படியே. பின்னணி இடையிசையும் அப்படியே. பொதுவாக காதல் பாடல்கள் உச்ச ஸ்தாயியில் துவங்காது .முழக்க பாடல்களே அவ்வாறு துவங்கும். காதலியை வரணும் வரணும் மகாராணி என்று வரவேற்பு முழக்கம். சுசீலா நடுவில் அஞ்சாதது பெண் என்பது என்பதை இரு வித வேறுபாட்டுடன் பாடி சரணத்திற்கு ஒரு மெருகு கொடுப்பதது அழகு.
ஜெயா ரவியுடன் இணையும் போது ஒரு உண்மையான அழகான இளமையான துடிப்பான இளைஞருடன் சேரும் ஒரு உண்மை ஈடுபாடு முகத்தில் தெரியும்.(இருவரும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவர்கள் )ரவி தனது ப்ராண்ட்மார்க் சரளத்துடன் அளவான பாடலுக்கேற்ற தளத்தில் தாளத்தில் வேகத்தில் மாயம் செய்ய ,ஜெயாவின் இசைவான தோதான அசைவுகள் அள்ளும்.
இதோ அந்த அற்புத பாடல் உங்கள் பார்வைக்கு (கௌரி கல்யாணம் 1966)
https://www.youtube.com/watch?v=SjTrGjj95YI
-
Doing exclusive Analysis on trend-setting by Ravi from 1964 to change the focus of Tamil Films.
-
Tamil Actor Ravichandran Video Songs
Tamil Actor Ravichandran Video Songs
Ravichandran PhotosActor Ravichandran acted in Tamil films in leading roles in Tamil Movies from 1960s to 1970s. Ravichandran has also directed some films during his lifetime. He died at the aged of 71 from multiple organ failure on 25th of July 2011 at Apollo Hospital in Chennai.
We have a collection of actor Ravichandran’s Tamil Video songs for your entertainment at Tamilo.com
Athe Mugam From Naan Player 1 17/Dec/2015
Nee Pogum Idamellam Naanum - Idhaya Kamalam Player 1
Unnai Kaanaatha Kannum Kannalla - Idhaya Kamalam Player 1
Malargal Nanaindhana Paniyale From Idhaya Kamalam Player 1
Vandhal Ennodu From Naan Player 1
Pagalile Paarkavandadennu From Maadi Veetu Mapillai Player 1
Kettu Paar From Maadi Veetu Mapillai Player 1
Maanikka Magudam From Panakkara Pillai Player 1
Thottatha Thodathatha From Ninaivil Nindraval Player 1
10 Enna Theriyum From Ninaivil Nindraval Player 1
Pattam Vittathu Pole From Panakkara Pillai Player 1
Eppothu Naadagathai Fron Panakkara Pillai Player 1
Parisam Potta From Panakkara Pillai Player 1
-
நீயும் நானும் ... இப்படத்தைப் பற்றி கோபால் எழுத வேண்டுகிறேன்.
கதை சாதாரண கதையே. கிராமத்து இளைஞன் ரவி சந்தர்ப்ப வசத்தால் பட்டணத்துக்குப் போக அங்கே உருவ ஒற்றுமையால் இன்னொருவன் வீட்டிற்கு இவன் போக நேரிடுகிறது. அங்கே அவன் சநதிக்கும் பிரச்சினைகளே கதை.
மெல்லிசை மன்னரின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய யாரடி வந்தார் என்றும் நெஞ்சை விட்டகலாத இனிய பாடல்.