தெளிவாய்த் தெரியாத கண்கள்
அரைக் குருடு!
ஒளியே இல்லாத கண்கள்
முழுக் குருடு!
மலிவாய்க் கிடடாத எண்ணெய்
அதுவும் "குருடு!"
எளியோர்க்கு உதவ இயலா
நிதிவல்லோர் தாமும் குருடே!
அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!
வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!
குருட்டு உலகில் குருடு காரணம்
கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.
நிலைமை மாறுமோ?
துன்பம் தீருமோ?