It ran for 250 days. What else do you need? It's not kuppai.
Printable View
It ran for 250 days. What else do you need? It's not kuppai.
Avtaar was made with a North Indian flavor to the fans with Rajesh Khanna. The same was remade in malayalam as Jeevitham with Madhu and Vaaazhkkai with NT. All movie versions were good to watch. Probably in the presence of NT other stars get obscured, but each contributed their support the way they can do. Though NT's body was a bit bulky at that time he was able to manage well with his definitive acting, particularly the close-up ones where nobody even Kakaji could not match his histrionics.Let us not use unnecessary words to describe other actors for no fault of theirs.
திரு ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்,கார்த்திக் சார்,
நீங்களெல்லாம் இல்லாமல் இந்த திரியில் ஒரு வெறுமையும் இனம் புரியாத ஒரு சோகமும் இழையோடுவதை பார்க்க மனம் தாங்கவில்லை .இங்கு வராமல் உங்களாலும் இருக்க முடியாது ,உங்கள் மனம் இந்த திரியைதான் சுற்றி சுற்றி வரும் என்பது எங்களுக்கு தெரியும்.பெருந்தலைவரின் பிறந்த நாள் மற்றும் நம்மவரின் நினைவுநாள் நெருங்கும்நேரத்தில் நீங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது தயவு செய்து கூடிய சீக்கிரம் இங்கு வரவும்[/QUOTE]
திரு பிரபுராம் மற்றும் jeo அவர்களே,
நமது திரியின் நிலையை பார்த்தீர்களா? நாளை தலைவரின் நினைவு நாள்! திரு பம்மலார், திரு வாசுதேவன் மற்றும் திரு ராகவேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் நமது திரி களை இழந்து காணப்படுகிறது.
இந்த நிலை மாறி மீண்டும் அவர்கள் திரியில் பங்களிப்பு செய்வது என்பது உங்கள் இருவர் கையில் தான் உள்ளது.
கலையுலகின் தலைமகனே! உன் நினைவலைகள் என்றும் ஓயாது .. வாழ்க நின் புகழ்!
Attachment 1599
....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நினைவு தெரிந்த நாள் முதல் இந்தப் பெயரை கேட்டவுடன்தான் என்ன ஒரு சிலிர்ப்பு! திரையில் ஆகட்டும், நாளிதழ்களில் ஆகட்டும், பருவ இதழ்களில் ஆகட்டும் இந்த பெயரைப் பார்த்தவுடன் அல்லது அவர் சம்மந்தப்பட்ட செய்திகளைப் படித்தவுடன் எத்துனை பரவசப்பட்டிருப்பேன்! ஓரளவிற்கு விவரம் புரிய ஆரமபித்ததும் நாம் மட்டுமல்ல என்னைப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்களை இந்த மனிதன் வசீகரித்திருக்கிறார் என்று தெரிந்தவுடன்தான் எத்துனை மகிழ்ச்சி அடைந்திருப்பேன்!
ஒரு மனிதன் தன் குணாதிசயங்களால், சில பல செயல்களால், சமூகத்தில் தான் வகிக்கக்கூடிய பொறுப்புகளால் மற்றவர்களை கவர்வது அவர்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது உலகின் பல நாடுகளிலும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் அப்படிப்பட்ட சூழல்கள் இல்லாமல் தான் செய்யக் கூடிய ஒரு தொழிலின் மூலமாக மக்களின் மனதில் இடம் பெறுவது என்பது வெகு சில இடங்களில் வெகு சிலருக்கு மட்டும் வாய்த்திருக்கிறது.
பொழுதுபோக்கு என்ற விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படம் எனும் ஊடகத்தில் பணியாற்றியவாறே அந்த அம்சங்களையும் தாண்டி ஒரு இயல்பான உலக வாழ்க்கையின் யதார்த்தங்களோடு மக்களின் வாழ்க்கைக்கு அருகாமையில் நிலைக்கொண்ட கதையம்சம் கொண்ட படங்களை அளித்ததன் மூலம் மக்கள் மனதில் என்றும் மாறா இடம் கொண்ட ஒரு மகா கலைஞன் நமது நடிகர் திலகம்!
அவர் திரைஉலகில் ஆக்டிவாக செயல்பட்ட இறுதிக்கட்டம் முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ரிலீசாகி 13 வருடங்கள் கடந்துவிட்டன. அவர் பூத உடல் நம்மை விட்டு பிரிந்து சென்று 11 வருடங்கள் முடிந்து விட்டன. இருப்பினும் அவர் மேல் நமது மக்கள் வைத்துள்ள அன்பு சிறிதளவும் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. அப்படி என்ன செய்தார் அவர்? நிர்வாக சார்பான அல்லது ஒரு இயக்கத்தின் தலைமை பொறுப்புகளோ அவரிடம் இருந்ததில்லை! ஒரு கலைஞனாகவே அவர் மக்கள் மனதில் வாழ்ந்தார்.
ஒருவர் வாழும் காலத்தில் புகழ் பெறுவது என்பது அதிசயமான விஷயம் அல்ல. ஆனால் ஒருவர் தொழிலையே நிறுத்தி விட்ட பிறகும் அவர் நேசிக்கப்படுவது என்பது உண்மையிலே அதிசயதக்கதுதான்.
நேற்று மதிய காட்சி சத்யம் அரங்கில் கர்ணன் திரைப்படம் காண நமது அருமை நண்பர் ஒருவர் சென்றிருந்தார். படம் முடிவடைந்த பிறகு பார்வையாளர்கள் அனைவரும் வெளியேறி செல்லட்டும் என நினைத்து நின்று கொண்டிருக்கும் போது சுமார் ஒரு 75 வயதுடைய வயதான அம்மையார் அவருடன் இரண்டு இளைஞர்கள் இறுதியாக வெளியேறுவதற்கு வருகிறார்கள். அம்மையார் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதற்கு ஒரு ஸ்டிக். அதில் ஒரு இளைஞன் சொல்கிறான். எப்படியோ கர்ணன் பார்க்கணும் சிவாஜியைப் பார்க்கணும் எனு சொன்னியே இனிமேல் உன் ஜெனமம் சாபல்யம் அடைந்து விடும் என உரிமை கலந்த கிண்டல் தொனியில் அந்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறார்கள். முகம் கொள்ளா சிரிப்புடன் அவரும் அதை ஆமோதித்திருக்கிறார். ஆக இப்போதும் இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால் படம் காண சென்ற இளைய தலைமுறையை சேர்ந்த நமது நண்பர் போன்றவர்கள் மற்றொரு பக்கம்.
அப்படி என்ன இருக்கிறது இந்த மனிதனிடம் என்றால் எல்லாம் இருக்கிறது என்பதே ஒரு சுருக்கமான பதிலாக இருக்கக் கூடும்! இன்றைக்கும் அவர் பெயர் சொன்னால் பல பேர் முகத்தில் தோன்றும் அந்த மகிழ்ச்சி நெகிழ்ச்சி அளவிட முடியாதவை! அவர் மற்றும் அவரது படங்கள் ஸ்பர்சிக்காத மனிதர்களே குறைவு என்று தோன்றுகிறது சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களுடன் கலந்து உரையாடும் வாய்ப்பு இப்போது எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது. பெரும் செல்வாக்கான குடும்பங்களில் பிறந்தவர்கள், தன் உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் இப்படி அனைவரையும் அவர் இப்போதும் கவர்ந்துக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் எனக்கு கிடைக்கும் செய்தியாக இருக்கிறது.
நாம் விரும்புவது போல் நடிகர் திலகத்தின் படங்கள் மீண்டும் பரவலாக வெளியிடப்படும் சூழல் கனிந்து வரும் இவ்வேளையில் அது எதார்த்தமாகும் நாள் நெருங்கி வர வர, அவரின் புகழ் மேலும் வளரும் தழைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இன்று அவரின் நினைவு நாள் அவர் பூத உடல் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும் முன்பு ஒரு முறை நண்பர் சுவாமி குறிப்பிட்டது போல அவருக்கு ஜனனம் மட்டுமே மரணம் இல்லை என்று கூறி அவர் புகழ் மேலும் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் தோள் கொடுப்போம் என உறுதி கூறுவோம்.
அன்புடன்
Dear Murali Srinivas,
You have opined what is in all NT's Fans minds and a Great salute for writing the reality!!!!!!
ANM
http://www.sangam.org/2008/11/images...frontcover.jpg
துரோகங்களையும் நயவஞ்சகங்களையும் சந்தித்தவன் நீ –
முகத்துக்கு நேரே சிரிப்பவர்கள், முதுகின் பின்னே வஞ்சிப்பவர்கள் என
அனைவரையும் பார்த்தவன் நீ –
உன் தொண்டர்களாகிய நாங்கள் மட்டும் விதி விலக்கா –
உண்மையையும் அன்பையும்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலையாதவர்கள் நாங்கள் -
உன்னுடைய நினைவு மட்டுமே எங்களுக்கு ஆறுதல்...
நீ இறந்தாலும் உன் வாழ்க்கை எங்களுக்கு வழிகாட்டி..
என்றென்றும் உன் வழி நடப்போம்
என்றும் உந்தன் நினைவுடன்
ராகவேந்திரா சார் ,
உங்கள் மீள்வரவு மகிழ்ச்சியளிக்கிறது .