Quote:
1957_ம் ஆண்டில், "மக்களைப் பெற்ற மகராசி", "வணங்கா முடி", "புதையல்", "மணமகன் தேவை", "தங்கமலை ரகசியம்", "ராணி லலிதாங்கி", "அம்பிகாபதி", "பாக்யவதி" ஆகிய 8 படங்களில் சிவாஜி நடித்தார். "மக்களைப்பெற்ற மகராசி" ஒரு முக்கிய சாதனை நிகழ்த்திய படமாகும்.
வி.கே.ராமசாமியும், ஏ.பி.நாகராஜனும் சேர்ந்து ஆரம்பித்த "ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ்" பட நிறுவனம், இப்படத்தை தயாரித்தது. கதை_ வசனம் ஓ.பி.நாகராஜன். இசை: கே.வி.மகாதேவன்.
"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி..." என்று பாடியபடி, கட்டுக்குடுமியுடன் சிவாஜி அறிமுகம் ஆகும் முதல் காட்சியே, ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றது. கொங்கு நாட்டு (கோவை வட்டார) தமிழில் அவர் பேசிய வசனத்தைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர். காரணம், அதற்கு முன் எல்லா நடிகர்களும், எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் வசனம் பேசி நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் வித்தியாசமாக (வட்டார மொழியில்) பேசி நடித்த முதல் நடிகர் சிவாஜிகணேசன்தான்.
இதில், சிவாஜிக்கு ஜோடி பானுமதி. மற்றும் வி.கே.ராமசாமி, கண்ணாம்பா, எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், சாரங்கபாணி ஆகிய அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தனர். சிவாஜியின் நடிப்புக்காகவே, 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம், "மக்களைப்பெற்ற மகராசி."
நன்றி மாலை மலர் இணைய தளம் -