-
பாவமாய் த் தான் இருக்கிறது
காய் நறுக்கும் போது
கையில் கத்திபட்டதில் ரத்தம் வர
இது துடித்துப் போய்விட்ட்து
ஐஸ் எங்கே
குளிர்பதனப் பெட்டியில் இருந்து
எடுத்து விரலில் வைத்து
ரத்தம் நிற்கவும்
வா டாக்டரிடம் போவோம்..
வேண்டாம்யா
சரி நீ வேலை செய்யாதே
நான் பார்க்கிறேன்
பரவாயில்லை தோசை தானே..
நீ சும்மா இரு..
தோசைக் கல்லில்
வேகமாய்ச் சுட வைத்து
மாவு விட்டு வார்த்தால்...
பிரளயம் தான்..
தோசை கொத்துப்பரோட்டாவாய் வர
விக்ரமாதித்தனாய் மாறி முயற்சித்து
மற்ற இரண்டும் நன்றாய் வர..
ஆனால் வட்டம் தான் இல்லை..
தட்டில் போட்டு பிய்த்து
ஆ காண்பி..
யோவ் ரொம்பச் செய்யாதய்யா
சாப்பிடு இவளே..
சட்னியில் தோய்த்துக் கொடுத்ததைச்
உண்டதும் கண்ணில் நீர்..
என்னாச்சு நல்லா இல்லையா..
காரமா.. எனப் பதறிப் பாவமாய்க் கேட்க
விழுங்கியபடியே சொன்னேன்..
ஜோராய் இருக்கிறது..
தோசை இல்லை..உன் மனசு
-
மனசு நினைத்தது எதற்கு எனக்கு இத்தனை விழிகள்
காண விரும்பாத பல கசப்பான விபரீத காட்சிகள்
உறங்காமல் களைப்பில் போராடும் பரிதாப வேளைகள்
பொல்லாத விழிகள் போல் மனசுக்கு ஏன் இத்தனை வழிகள்
செல்லாத பேர்களில்லை சத்திரம் போல் திறந்த வாசல்கள்
அனுமதிக்க தேவையில்லாத நுழைவுகள் வெளிநடப்புகள்
குதிரைக்கு கண்களில் மறைப்பு பயணத்தின் அவசியங்கள்
மாளிகைக்கு மணிக்கதவுகள் மரியாதையின் சின்னங்கள்
படைப்பில் பல சாபங்கள் முயன்றால் அவையே வரங்கள்
-
வரவில்லை வந்ததும் கண்டேன் வட்டமில்லாத் தோசை
தரமாய்த் தந்தார் சின்னக்கண்ணன் தகுந்த அன்பைக் காட்டி
உரமாய் விளங்கும் உத்தமத் திரியில் உங்கள்பங்கு நன்று
சிரமம் பலதில் செய்யும் சேவை தினமும் இங்கு தொடர்க
அவதானி கஜன்
-
தொடர்க என்றன கண்கள்
ஊர்ந்து சென்றன கைகள்
கன்னியின் மௌன ஆணைகள்
காளையின் இனிய கணங்கள்
-
கணங்கள் சிலதான்..
அதற்குள் அது நடந்து
முடிந்து விட்டது..
அலுவலகம் முடிந்து
சிந்தனையை நெய்தபடி
வேகமாக சுலபமாக நடந்ததில்..
ஹலோ..
அழைத்தது ஒரு யுவதி..
அழகிய நீல நிறச் சுடிதார்
குறும்பாய்ச்சிரிக்கும் கண்களின் மேல்
கறுப்பு ஃப்ரேம் கண்ணாடி..
டபக்கென
கால் முதல் தலைவரை
பார்வை பாய்ந்ததில்..
கொஞ்சம் அழகு தான்..
அளவெடுத்துச் செய்த
சிற்பம் தான்..
யாராயிருக்கும் என
யோசித்து
மறுபடி ஹாய் எனச் சொல்ல..
பதிலுக்கு புன்னகை தந்து
விறுவிறுவெனப் போயே போய்விட்டாள்..
ம்ம்
என்ன செய்வது..
மறுபடி கூப்பிடலாமா..
யார்மா நீ
யாரும்மே நீ
ஹல்லோ ஆப் கோன் ஹை..
மோளே நீயாருன்னு பற..
இவ்ளோ அழகா வேற இருக்கே..
ம்ஹீம்..
நினைவுக்கு வராமல் போக..
இப்போது
நடப்பதும் இருந்தது கனமாக..
-
கனமானதொரு புத்தகத்தை
கையிலும் மனதிலும் சுமந்திருந்தது, வலித்தது!
ஏட்டில் துப்பிய கனத்துக்கு
பெருக்கலும் கூட்டலுமாய் மதிப்பெண்
பட்டம் பறந்தது இலகுவானேன்..
பரணில் படுத்துறங்கும் கனமான புத்தகமும்
அதன் உட்கருத்து துருபிடித்து தூசியேறியது
-
தூசியேறியது..
சற்றே கையில் இடுக்கிக் கொண்டு
தும்முகையில்
விழுந்தன
அந்தப் பழைய டைரியும்
மடித்து வைத்த இன்லண்ட் லெட்டரும்...
இவளுக்கு..
ந்லமா.. நான் நலம்.
இங்கு மும்பையில்
ஆலு சப்பாத்தி பானி பூரி என
வாயில் வைக்க வழங்கவில்லை..
பசங்க் எப்படி இருக்காங்க..
எனத்தொடர்ந்திருந்த அப்பா..
முடிக்கையில்
ஜாக்கிரதையாய் இரு என எழுதி
கீழே
சற்றே கிறுக்கலாய்
கைய்ழுத்தின் அருகே
ரொம்ப்பச் சின்னதாக
ஐ லவ்யூ..
படித்துச் சிரித்து
கிடுகிடென்று
பரணிலிருந்து இறங்கி
மூக்குக்கண்ணாடியுடன்
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம்
டொட்டொடோய்ங்க் எனத்
துப்பட்டாவுடன் குதித்து நீட்டினால்..
முதலில் கோபம்..
பின்னர் கெஞ்சல்..
ஏய் தாடீ....
பின்னால் கடிதத்தை வைத்துக் கொண்டு
அப்பாவைப் பார்க்கையில்..
அழகாய்த் தான் இருக்கிறது
ஆண்களின் வெட்கமும்
-
வெட்கமும் பொய்
பூசிய சாயமே
உரித்துப் பார்க்க
வெங்காயமில்லை
மூழ்கி எடுக்க
முத்துக் கடலல்ல
இலக்கணமில்லாக் கவிதை
இரக்கமில்லா வனிதை
இடையறா மாற்றம்
ஈர்க்கின்ற தோற்றம்
அரிச்சுவடி கற்குமுன்
நரை வந்துவிட்டது
அறிந்த வரை வியப்பு
ஆயுளுக்கும் தவிப்பு
அப்பாவிப் பையன்
அறியாத ஆழம் அது
-
ஆழம் அது என்று
சொல்லிச் சொல்லிக் கேட்காமல்
போய்
போயே போய்விட்ட
முரளியின் மனைவியை
பலவருடங்க்ள் கழித்துப் பார்த்த போது
வழக்கமாய் க் கேட்கும்
செளக்கியமா வாயில் வந்து விடடது..
நல்லா இருக்கேன் மாமா
மாமி எப்படி..
பப்லு ப்டிச்சு முடிச்சுட்டானா
என்ன வேலை பார்க்கிறான்..
இங்க
என் மாமா மாமி
நன்னா பாத்துக்கறா
எல்லாச் சொத்தும் எழுதி வச்சுட்டா எனக்கே..
ம்ம்
ஆள் படை அம்பு எல்லாம்
இருக்கு
செளக்கியத்துக்கு என்ன குறைச்சல்
படபடவென பட்டாசாய்
வார்த்தைகள் வெடித்தாலும்
கண்கள் மட்டும்
சற்றே கலங்கலாய்..
-
கலங்கலாய் மாற்றும் சலனங்கள்
தெளிந்த சாரமில்லா நீரோடையை
ஆமையாய் நத்தையாய் ஊர்ந்த நாட்கள்
ரங்கராட்டினமாய் மாறிய கணங்கள்
அபூர்வமாய் வரும் இனிய வரங்கள்
அடுக்காய் தொடர்கின்ற சம்பவங்கள்
பூப்போட்ட சராய் சட்டையில் சிப்பந்திகள்
ஆடி மகிழ்விக்க கணப்படுப்பில் முன்னால்
பலகாரம் ருசியாய் அணி வகுத்து வர
மாயக் கடற்கரை சூழலில் இனிப்புகளால்
வாயும் வயிறும் மனமும் குளிர்ந்து ததும்பிட
பல்லடுக்கு அங்காடியில் சுற்றித் திரிந்தபின்
பார்க்கும் சினிமாவும் பொழுதுதைச் சாப்பிட
எண்ணற்ற கேளிக்கைகள் குழந்தைகளுடன்
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைக்க
இரவும் பகலும் தேதியும் கிழமையும் மாதமும்
மறக்கின்றதோர் மயக்கத்தில் மிதக்கிறேன்
மீண்டும் நானொரு சின்னஞ்சிறு குழந்தையாய்