There is no success without discipline. There is no discipline without sacrifice - IR
Printable View
There is no success without discipline. There is no discipline without sacrifice - IR
https://www.youtube.com/watch?v=uW_fnAgB4QQ
பூமாலையே தோள்சேரவா பாடலும் இதே யுத்தியைக் கையாண்டு படைக்கப் பட்டவை. "என் கண்மணி" பாடல் போல தொடர்ச்சியாக இல்லாமல் ஆதார மெலடியின் போக்கினை சிதைக்கா வண்ணம் அங்கங்கே கவுண்டர் பாயிண்ட் கையாளப்பட்டிருக்கிறது என நினைக்கிறென். குறிப்பாக சரணங்களில். விஷயம் தெரிந்தவர்கள் இதை ஊர்ஜிதப் படுத்தலாம். மற்றபடி வாத்தியக் கருவிகளில் கவுண்டர்பாயின்ட் யுத்தியை நிறைய பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்.
வெங்கிராம் ,
இசையை பொறுத்த வரை கீழ்கண்ட வகையாக பிரிக்கலாம்.(நான் of all the people why இளைய ராஜா என்று கேட்டது ,நான் ஏன் அவரை accuse செய்ய போகிறேன் என்று?)
1)சிறு வயதின் ஞாபக எச்சங்கள், பரிச்சயமான இசை,அது சார்ந்த எண்ண எழுச்சிகளின் நீட்சி.உதாரணம் இன்னும் சில வாழ்வின் தருணங்களை நான் சில பாடல் கொண்டே உணர்வேன். அதன் மேல் எனக்கு விசேஷ பிரியம் இருக்கும். சில சமயம் என் மனைவியே கூட இந்த பாட்டிலே என்ன இருக்குன்னு இவ்வளோ கொண்டாடுறீங்க என்பார்.
2)சிறு வயதில் ஒரு இசையமைப்பாளரை தேர்வு செய்து ,அவரையே சிறந்தவர் என்று நிறுவும் மனநிலை எய்தி revisionism என்ற rationality இல்லாமல் ,critisism /reviews /analysis ஆகியவற்றை தன் மீது தொடுக்க பட்ட அம்பாக எண்ணி துடித்து போதல்.(தமிழர்களுடன் இந்த Brain Wash செய்ய பட்ட மனநிலை அதீதம்.இவற்றிற்கு அரைகுறை விமர்சகர்கள்/media துணை போய் கொண்டே இருப்பார்கள்)
3)வேறு ஏதாவது இசையை கேட்க சொன்னால் ,சிலவற்றிற்கு technology மறந்து இசையில் தோயும் மன நிலை இல்லாமல்(Regression).நம் பரவல் இசைக்கு நேர்ந்த இன்னொரு விபத்து சினிமாக்களுடன் பிணைக்க பட்டது.பாடல்கள் intrinsic content value அறிய படாமல்,படங்களின் படமாக்கம்,பின்னணி,மற்றும் மற்ற ஆதர்சங்கள் சார்ந்து சுயத்தை இழக்கின்றன.
6)இது டீன்களில் ,தேர்ந்த ரசிப்பு தேடல் கொண்ட சிலரின் நமைச்சல் . அப்போதுதான் ஆதர்சங்களின் சாயம் வெளுத்து, நாம் பல இசைகளோடு பரிச்சயம் கொண்டு , தேர்ந்தெடுக்கும் மனநிலை துறந்து பல ஆச்சர்யங்களுக்கு ஆட்படுவோம்.சிலைகள் ,சுவர்கள் உடை பட்டு காற்று வரும். இது இசையில் மட்டுமல்ல ,பிற கலைகளில்,இலக்கியத்தில் ,அரசியலில் . நாமே நம்மை புதுப்பித்து கொண்டதை உணர்வோம்.கடைசியாக ,யார் போட்டிருந்தாலும் ,எனக்கு பின்னணி முன்னணி தகவல்கள் தேவையற்று ,இசையை மட்டும் பிரித்துணர்ந்து துய்க்கும் மனநிலைக்கு தயார் ஆவோம்.
7)இவ்வளவு சொல்லி விட்டு மீதியை உங்கள் பார்வைக்கு விடுகிறேன்.ஆனால் உங்கள் எல்லோரையும் விட இளையராஜாவின் இசையை தொடர்ந்தவன் என்ற வகையில் ,அவரின் மீது எனக்குள்ள உரிமை,பாசம்,கோபம்,விமர்சனம்,இவற்றை உங்களுக்காக நான் தியாகம் செய்ய முடியாது.நான் அவரை பற்றி ஒரு ஆய்வு செய்ய ஆவல் கொண்டுள்ளேன். அவர் இசை துறையின் ஒரு உன்னத தமிழ் அடையாளம்.காரணம் நான் ஆறாவது மனநிலையில் உள்ள பக்குவ பட்ட இசை ரசிகன்.
அறிமுகமாகி பத்து பதினைந்து வருடங்களுக்கு தமிழ் மீடியாக்கள் ராசைய்யாவிற்கு பட்டுக்கம்பளம் கொடுத்து வரவேற்கவில்லை. பாழாப்போன பாரபட்ச இசைவிமர்சகர்களின் முகத்திரையை இன்று நாமே படித்து உணர்ந்து கிழித்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்தான் இசை என்றே குறுகிய நோக்குடன் பரப்பப்பட்ட நேரத்தில் அவரோ நமது சாஸ்திரிய இசைவகைகள் மற்றும் உலகஇசை வகைகள், அதன் நுணுக்கங்களை தமிழிசையில் நெய்து இசைப்பணி ஆற்றிக் கொண்டிருந்தார். அக்காலத்திய இசை விமர்சகர்கள் அதை ஒருவழியாக புரிந்துகொள்ளும் நேரத்தில் இவரோ இசையில் விஸ்வரூபம் எடுத்திருந்தார். அப்படிப்பட்ட காலகட்டத்தில் ராசைய்யாவின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவியது முழுக்க முழுக்க திரையரங்குகள், எல்.பி ரெக்கார்டு இசைத்தட்டுக்கள் - குழாய் ஸ்பீக்கர்கள், 60/90 கேசட்டுகள், இலங்கை மற்றும் விவிதபாரதி ரேடியோ அலைவரிசை, இசைக் கச்சேரிகள் மூலம்தான். வரலாறு காணாத இசைப்புரட்சி செய்தவர் ராசைய்யா. முழுக்க முழுக்க மக்களொடு நேரிடையாக இசைவழியே உரையாடியவர் ராசைய்யா. ராசைய்யா காலத்திற்கு முந்தைய இசையமைப்பாளர்கள் எண்பதுகள் வரையும் கிராமம் வரைக்கும் நிலைத்து நிற்க பெரிதும் உதவியாய் இருந்தது எம்.ஜி.ஆர் ஆட்சி காலங்கள். அவரின் பலதரப்பட்ட எழுச்சி மிக்கப் பாடல்கள் வாயிலாக எம்.எஸ்.வி நிரந்தரமாகவே வெகுநாட்களாக பட்டிதொட்டிகளில் வாழ்ந்தார். ஆனால் அப்படியெல்லாம் இன்னொரு நட்சத்திரம் மேல் ஏறிக்கொண்டு பயணம் செய்ய ராசையாவிற்கு யாருமே இல்லை. சிவக்குமார், கமல், ரஜினி, சரத்பாபு என்ற நட்சத்திர வட்டங்களைக் கூட ராசையாதான் வழிநடத்திச் சென்றார். பலவிஷயங்களில் சுயம்பு ராசைய்யா.
ஓ! பேஷா எழுதுங்க.. ராசாய்யாவின் இசையை, அதன் வீச்சை நிறைய மனிதர்கள் இணையத்தில் பகுப்பாய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள். ரவி நடராஜன், விக்கி போன்றவர்கள், ஹப்பிலேயே எடுத்துக்கொண்டால் நிறைய பதிவர்கள் (V_S, app_engine, Sureshs65 etc) என ஏகப்பட்ட பதிவுகள்/தரவுகள் சேர்ந்து கொண்டெ இருக்கின்றன. இளம் சமுதாயமும் ராசைய்யா இசையை நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். நேரம் கருதாது உயர்தரத்தில் இணையத்தில் பலரும் கேட்டுமகிழ ராசையாவின் பாடல்களை எற்றம் செய்திகிறார்கள் சில பதிவர்கள் (உயர்ந்த உள்ளங்கள்!) நீங்கள் அதையெல்லாம் வாசிப்பீர்களா/கேட்பீர்களா எனத் தெரியா. இன்றைய காலக் கட்டத்தில் ராசைய்யா இசையை தானே ரசிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்கள் எப்படி அவரது இசையை அணுகுகிறார்கள் எனத் தெரிந்துகொள்வதும் சுவாரஸ்யமான ஒன்று. அது நம்முள் திறக்கப்படாத பலவிதக் கதவுகளை திறந்து வைக்கும் / முன்முடிவுகளை நீர்த்துப் போகச் செய்யும்
பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட பெரும்பாலான திரைப்பட விமர்சனங்களில் ராசையாவின் இசைப்பணிக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படவில்லை. இன்று நாம் கிளாசிக் எனப் போற்றும் பல ஆரம்ப கால படைப்புகளில் சுத்தமாக இருட்டடிப்பு செய்தார்கள். இன்றைய நாட்களில் இசையிலக்கணம் தெரியாத பலரது இசைவிமர்சனங்களில் காணப்பட்ட சிறப்பு கூட அந்த நாட்களில் வந்த சினிமா விமர்சனங்களில் ராசைய்யாவின் இசைப் பற்றிய குறிப்புகளில் இல்லை. ஒரே வரியில் சொல்லப் போனால்..இணையத்தால் மட்டுமே அவரது இசைக்கு உரிய விமர்சனங்கள் கிடைக்கப் பெற்றது.
முற்றிலும் தவறான புரிதல் மற்றும் திசை திருப்பும் வாதம்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி பட்டி-தொட்டியெங்கும் பேச பட காரணமானவை பாக பிரிவினை (1959),பாவ மன்னிப்பு(1961) போன்ற படங்கள்.கீற்று கொட்டகை சி சென்ட்டர் களில் 100 நாட்களும்,மேலும் கண்டவை.இவை கருத்து கொள்கை முழக்க வேட்டல்ல.ஹிந்தி இசையமைப்பாளர்களை அசர வைத்தவை. 5 வருடங்களில் 100 படங்களில் (1961-1965) அவர்கள் போட்ட பாடல்களில் 200 பாடல்கள் உன்னதம்.
Is it not funny that these people talk about Western,carnatic,Hindustani,Spanish,Ababic fusion was introduced by Ilayaraja. Have they not heard Pudhiya paravai,sivantha man musics? I can give list of songs and their Genre to prove my point. Internet creeps are short-sighted and has no full knowledge. Counter-point,A B C D E F G minor,majors are basics in Western. It is no testimony of music knowledge.If I write about Ilaya Raja,it will be different. Dont even equate me with other Bloggers.