Originally Posted by
venkkiram
[color=blue]உத்தமவில்லனில் கூட, இளையராஜாவை நினைக்கவில்லை. ஆனால் பாபநாசம் போன்ற உருக்கமான, நெகிழ்வான உணர்வுப் போராட்டங்களுக்கு ராஜாவைத் தவிர வேறு யார் இசையை தகுந்தவிதத்தில் சமைக்கமுடியும்? பார்த்து முடித்து வெளியெ வந்தும் எத்தனைப் படங்களில் ராஜாவின் பின்னணி இசைத் துண்டு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டெ இருந்திருக்கிறது! அதுபோன்ற ஒன்றை ஜிப்ரானால் அடைய முடியவில்லை. சுயம்புலிங்கம் - ராணி குடும்பம், ஆஷா சரத்- ஆனந்த் மகாதேவன் குடும்பம் என தனித்தனியே ஒருசில மெலடிகளை அமைத்து அதை படம் முழுதும் இம்ப்ரோவைஸ் செய்திருந்தால் அதன் வீச்சே வேறுமாதிரி இருந்திருக்கும்.
: