நாராயணன் பேரை சொல்லிக்கொண்டே
நாரதர் பொழுதுக்கும் நடத்துவது கலகம்
நன்மையில் அவை முடிவதும் விந்தை
நவீன நாரதர்கள் செய்வதெல்லாம் நாசம்
Printable View
நாராயணன் பேரை சொல்லிக்கொண்டே
நாரதர் பொழுதுக்கும் நடத்துவது கலகம்
நன்மையில் அவை முடிவதும் விந்தை
நவீன நாரதர்கள் செய்வதெல்லாம் நாசம்
நாசமாக ஆகிவிடுமா
வேகமாக சுற்றிச் சுற்றிச்
சுழன்றடிக்கும் மழையைப்
பார்த்தபடி
பயிர் பற்றிய கவலையுடன்
கிராமத்து மாமா..
சே
ஒரு இடத்துக்குப் போக முடியலை
எப்போ நிக்கும்..
சலிப்புடன் அப்பா..
சூடா பக்கோடா போட்டிருக்கேன்
சாப்பிட்டுட்டு எங்க வேணா போங்க..
சமையலறையிருது அம்மா..
ச்ச் போடி..
மழையால சிக்னல் கிடைக்கலை..
கரெண்ட் எப்ப வேணா போலாம்
அசைன்மெண்ட் எப்படி முடிக்கறது..
செல்பேசியில் தங்கை..
விளையாடப் போகலாமென்றாலும்
முடியாது..
கம்ப்யூட்டர்ல வலை வேலை செய்யலை..
சரி ஆங்கிலக் காமிக்ஸ் படிக்கலாம்
என
புரட்டிய படியே நான்
சற்றே
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஜன்னல் வழியாக
வெளியே பார்த்ததில்
எந்தக் கவலையுமில்லாமல்
சுதந்திரமாய்
சிரித்துப் பெய்துகொண்டிருக்கிறது மழை..
மழைக் காதலன் வருகிறான் விரைவாக
வருடுகிறான் விரல்களால் ஆதுரமாய்
மயங்கி மலர்கிறாள் மண்மங்கை நல்லாள்
வளங்கள் வழிகின்றன பூரித்த பூமியிலே
பூமியிலே இருக்கும் போது
வானத்தில் பறக்க ஆசைப்படுவதும்
வானுலகு போகும் வேளை வரும்போது
பூமியில் இருக்க ஏங்குவதும்...
என்ன மனிதன் இவன்.
இவன் தூங்கினால் எழுப்பலாம்
நடிப்பவனை என் செய்யலாம்
கண்ணை மூடிக்கொண்டால் தூக்கமா
உலகம் இருண்டதாயெண்ணும் பூனையா
ஊர் குறட்டை விடும் வேளையிலும்
துடிப்புடன் உழைப்பவர் வழிகாட்டல்
தேவை என்றும் மானிடம் தளைத்திட
தூக்கம் இன்று தொலைவது பலருக்கு
பொல்லாத போக்குகள் பலவும் பழகியதால்
தலைவர் யார் கயவர் யார் தெரியவில்லை
"தெரியவில்லை..
எனக்குத் தெரியாது”
எப்போது எதைக்கேட்டாலும்
என் உதவியாளர் நாய்ரிடம் இருந்து
வரும் பதில்..
எனக்கடுத்து
நான் ஓய்வு பெற்ற பின்னால்
நாயரைத் தெரிவு செய்யலாம் என
மேலதிகாரி முடிவு செய்து
எனைக் கேட்ட போது
நாயர் சொல்லும் பதில்களை,
பிறகு நான் சொல்லிக்கொடுப்பதைச்
சொன்னேன்..
ச்ரி எனச் சொல்லிச்
சில கேள்விகளை
நாயரிடமே கேட்டார் மேலதிகாரி..
தெரியுமே எனப் பதில்வ்ர
அப்போது தான் எனக்குப் புரிந்தது
நாயரை
நாயரை அறியாத நாடுண்டோ
நாவிற்கு சுவையான தேனீரும்
நல்ல மசால் வடையும் விற்கும்
நாட்டுநடப்பை அலசும் இடமாய்
நன்குணர்ந்து மகிழாத பேருண்டோ
நட்பும் நேசமும் நெருக்கமும் இன்று
நசிந்தது ஏனென்று ஞான் அறியேன்
நல்வாக்கு பறையணும் அந்த பகவதி
பகவதி, பார்வதி, ஓமனா
எதுவாக வேண்டுமானலும் இருக்கும்
எதிர் ஃப்ளாட் யுவதியின் பெயர்..
மலையாளம் என
கன்னங்களிலும் டிஷர்ட்டிலும்
தெரிந்தது..
சந்திக்கும் பொழுது
கண்களும் இதழ்களும்
சிரித்துப் பதில்வாங்கிப் போய்விடும்..
பேசியதில்லை..
நாட்காட்டியில் தேதிகள் மாற மாற
ஹாய் ஹலோவில்
கொஞ்சமாய்ப் பூத்தது சினேகம்..
பெயர்களும் பரிமாறப்பட்டன..
அவளின் தேன்கலந்த பெயர் ஷ்ரியாவாம்..
மனதுக்குள்
செல்லமாய் எப்படி அழைக்கலாம்
என
பட்டிமன்றமே ஆரம்பித்தது..
ஒரு நாள்
லிஃப்டில் ஒன்றாய் வர நேர்கையில்
என்னிடமிருந்து விசாரணைகளும்
அவளிடமிருந்து சுகந்தமும்
இடம் மாறின..
சொல்லிவிடலாமா
அல்லது
கேட்டு விடலாமா
என நெற்றி நரம்புகள் துடிக்கையில்
லிஃப்ட் நின்றது..
கதவு திறந்த பொழுது
கொஞ்சம் அசடும், கொஞ்சம் தொப்பையும்
கொண்டு நின்றிருந்தவனைப்
பார்த்துப் புன்சிரித்து
வெளிவந்த என்னைப் பற்றி
அவனிடம்,
‘இவர் தான் எதிர் ஃப்ளாட் மாமா..
நல்ல ஃப்ரெண்ட்’
எனச் சொல்ல...
முகம் முறுவலிக்க
கைகள் குலுக்கிக் கொள்ள
உள்ளே
உடைந்து போயிருந்தது மனம்
மனம் இருக்கவேண்டும் ஒரு பூந்தொட்டியாய்
ஆனால் குரங்கது ஆகுது குப்பைத்தொட்டியாய்
ஓயாமல் அலையடிக்கும் ஆசாபாசங்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கும் நியாய தர்மங்கள்
இப்புயலில் சிக்கிய சிறு பாய்மரக்கப்பலதை
உல்லாச ஊஞ்சலாய் ஆடவைக்க கற்பதெப்படி
கற்பதெப்ப்டி..
வெள்ளைப் பேப்ப்ரில்
குண்டு பேனாவினால்
அச்சுப்பதித்தாற்போல்
பாடம், கேள்வி ப்தில், படம் வரைதல்
கணக்கு
என் எழுதி
புத்தகம்பார்த்து
இன்ன இன்ன ம்ணிக்கு
இப்ப்டிப் படிக்க வேண்டும்,
இவ்வ்ள்வு முடிக்க் வேண்டும்
என
அழ்காய் எழுதித் த்ருவார் அண்ணா...
அத்ன்ப்டி ப்டித்து உழைத்ததில்
தான்
நல்ல் கல்லூரியில்
சேர முடிந்தது எங்களால்..
ஒரு சுபயோக் சுபதினத்தில்
அண்ணனுக்கு அண்ணி வர...
பள்ளிப்படிப்புக்கு
நேரம் சொன்ன அண்ணனால்
கல்லூரிப் படிப்புக்கு எதுவும்
அறிவுரை சொல்ல இயலாமல் போனது..
ஏனெனில்
அவரே
நட்ந்து கொண்டிருந்தார்
அண்ணி கொடுத்த
அட்டவ்ணைப்படி...!