-
பாடல்: நினைவோ ஒரு பறவை
படம்: சிகப்பு ரோஜாக்கள்
பாடியவர்: கமலஹாசன், S.ஜானகி
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
(2)
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதே அதுயென்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதையின்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்...வந்தேன் தர வந்தேன்
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடியென்ன உன் மணி ஊஞ்சலோ...நீதான் இனி நான்தான்
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
http://www.youtube.com/watch?v=caJSVygFnWw
-
பாடல்: மலர்களே நாதஸ்வரங்களே
படம்: கிழக்கே போகும் ரயில்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
மலர்களே நாதஸ்வரங்கள் மங்களத்தேரில்
மனக்கோலம் வர்ண ஜாலம் வானிலே...மலர்களே
பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள் காதல் தேவன் கைகளில் சேர
மலர்களே நாதஸ்வரங்கள் மங்களத்தேரில்
மனக்கோலம் வர்ண ஜாலம் வானிலே...மலர்களே
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேர
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ
மலர்களே நாதஸ்வரங்கள் மங்களத்தேரில்
மனக்கோலம் வர்ண ஜாலம் வானிலே
-
பாடல்: அவளொரு மேனகை
படம்: நட்சத்திரம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அவளொரு மேனகை என் அபிமான தாரகை அவளொரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை காவிய வடிவொரு
நடமாடும் பொன்மகள் ரஞ்சனி சிவரஞ்சனி...சிவரஞ்சனி
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் பாடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள்போல் இங்கே எவரும் இல்லை
அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை சிவரஞ்சனி...சிவரஞ்சனி
காவிய பாதம் ஆயிரம் வேதம் அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை சிவரஞ்சனி...சிவரஞ்சனி
அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்
தாமரைப்பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி இடையோ அசைந்திடும் கிண்கிணி
என்ன சொல்லி என்ன பாட கம்பனில்லை கவிதை பாட
ஆஆஆஆஆஆஆ...அவள் தஞ்சைத் தரணியில்
கொஞ்சும் அழகிய கோவிலன்றோ நான் அவள் பக்தனன்றோ
அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை சிவரஞ்சனி...சிவரஞ்சனி
-
படம்: மாலை இளமனதில்
படம்: அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடியவர்: S.N.சுரேந்தர், ஷோபா
மாலை இளமனதில் ஆசைதனை தூவியது
அதிகாலை அந்த நினைவில் தினம்
ஆயிரம் கவிதைகள் பாடியது...மாலை
மலர்ப்போல பெண் ஒன்று மடிமீது பொன்வண்டு
மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று
ரதிமன்மதன் காவியம் இதுதானின்று
மாலை இளமனதில் ஆசைதனை தூவியது
அதிகாலை அந்த நினைவில் தினம்
ஆயிரம் கவிதைகள் பாடியது...மாலை
விழிமூடித் தூங்கும்போதும் உடல்மீது கோலம்போடும்
விளையாட்டிலே இன்பமே அதுதான் வேண்டும்
இனியென்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்
மாலை இளமனதில் ஆசைதனை தூவியது
அதிகாலை அந்த நினைவில் தினம்
ஆயிரம் கவிதைகள் பாடியது...மாலை
-
Pras and Priya:
Here's a little bit of trivia!
"இசைக்கு ஒரு கோவில்" was the dubbed Tamil version of the Telugu movie "sruthilayalu". The original Telugu version of "திருநாளும் வருமோ சுவாமி..." ("thelavaaradEmO swaami...") was sung by KJY. If anyone is interested, here it is:
http://www.musicindiaonline.com/musi...1/singer.8034/
http://youtube.com/watch?v=W-JMFCf3SbA
-
-
பாடல்: கூந்தலிலே மேகம் வந்து
படம்: பாலநாகம்மா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதி தனைப் பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
தங்கமேனி சிற்ப சித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
-
Great choice Priya; "bilahari" at its best :) One of the great IR/KJY collaborations!!!
-
dont know details of below song - but it's a good one :
Anbu megame ingu odiva
Undan thunaiyai azhaithu vaa
Ardha raathiri sonna sediyil..........